தமிழ்மணம் ஈழம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : March 19, 2010, 4:20 am
சமர்ப்பணம்
இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவு செய்யும்
 
இனப்படுகொலை






























 
சமீபத்தில் எழுதப்பட்ட ஈழம் சார்ந்த இடுகைகள்


தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் ...மேலும் வாசிக்க
தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை இராணுவம் நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று.இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா? என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து.ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தப் படி தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படக்க வேண்டும். போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். அதைத்தீர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் அபோதைய இலங்கை குடியரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனேயும் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும். இதில் தமிழர்களின் பங்கு என்ன? தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் படி இந்தியா பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கியது,தமிழர்களுக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும். இவை இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். இவை எழுத்தில் கொடுக்கப்படாத கனவான் ஒப்பந்தம். ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா 1987இல் ஆரம்பித்தது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து அன்றிலிருந்து அரும் பாடுபட்டு 2009இல் தமிழ்த் தேசியத்தின் ஆயுத் பலத்தை மழுங்கடித்தது.இப்போது 1980களில் செய்தது போல் தமிழர்களை பல கூறுகளாகப் பிரிப்பதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.இந்தியக் கைக்கூலிகளின் பூச்சாண்டிஇந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறுகதியில்லை என்று இந்தியக் கைக்கூலிகள் போதித்து வருகின்றனர். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். தமிழர்கள் மேற்குலகை சார்ந்து விடுவார்களோ என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது இயற்கை. அதனால் இந்தியா தனது கைக்கூலிகள் மூலம் இந்தியாவை மிஞ்சி எந்த மேற்குலகமும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வராது என்று போதிக்கின்றனர். ஒரு இந்தியக் கைக்கூலி மேற்குலகம் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்திற்கு இந்தியாவையே நம்பி இருக்கிறது என்று பொய் கூறுகின்றனர். இந்தியப் படை பலத்திலும் பார்க சீனப் படைபலம் மூன்று மடங்கானது. சகல ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களிலும் பார்க்க அமெரிக்க பாதுகாப்புச் செலவீனம் பலமடங்கானது. இப்படிப்பட்ட இந்தியாவின் தயவு யாருக்குத் தேவை? இந்திய சனத்தொகையை எப்படிச் சுரண்டுவது? இந்தியக் இணையக் கூலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான் மேற்குலகின் திட்டம். சீனாவின் இருவகையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. ஒன்று இந்தியாவைச் சுற்றி முத்துமாலைத் திட்டம் என்றபெயரில் இந்தியாவிற்கு போடும் சுருக்குக் கயிறு. மற்றது உள்ளூரில் வளரும் மாவேயிஸ்ட் வாதம். இந்தியாவின் வருங்காலம் அதோகதி!!!இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறது?சென்ற ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இந்திய விற்பன்னர்கள் தமிழர்கள்மீது அநுதாபம் காட்டுவது போல் தமிழர்களைப் பற்றி கேவலமாக எழுதி வந்தனர். இனித் தமிழர்கள் பிச்சாண்டிகள் என்பது போலும் எழுதினர். It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை மட்டுமே வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள். அந்தளவு பிச்சாண்டிகள் தமிழர்கள். அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிள்ளையானைச் சந்தித்த பின் பிள்ளையான் ஒஸ்லோத் தீர்மானத்தை நிராகரித்தார். 13வது திருத்தம் தான் வழி என்கிறார்.பேரின வாத இந்தியாவின் தற்போதை ஒரே எண்ணம் சிங்களப் பேரினத்தின் செருப்பாய் தமிழன் இருக்க வேண்டும் என்பதுதான்.தாத்தா சுதுமலையில் கொடியேற்றினார்பேரன் கீரிமலையில் கப்பலோட்டினார்தகப்பன் திருமலையில் கோபுரம் கட்டினார்மகன் பாரெங்கும் அலைகின்றான்.செந்நீர் பாய்ச்சிஉயிர்பல உரமிட்டுதுயர்மிக சுமந்துஇடர்பல பட்டுநாம் வளர்த்தவிடுதலைப் பயிர் பற்றிகண்ணீர் விட்டுசுதந்திரப் போர்ப் பயிர் வளரத்தோர்க்குபுரியாமல் போனதென்னநம்மை அடுத்துக் கெடுத்தஇந்தியாவே எம் முதல் எதிரிஎன்றான பின்பேஆரியக் கைக்கூலிகள்இந்தியாவை விட்டால்எமக்கு வேறு கதியில்லைஎன்று புலம்பித் திரிகின்றன.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத் தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல்  லாம் கேட்க முடியாது. ...மேலும் வாசிக்க

எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத் தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல்  லாம் கேட்க முடியாது. வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது.

சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமானது. அது பிரிவினையுடன் தொடர்புபட்டது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் “ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்’ பத்திரி கைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பேட்டியில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு இப்போது மன்னிப்புக் கிடையவே கிடையாது என்றும், அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தத் தவறிய முட்டாள் என்றும் விமர்சித்துள்ளார்.        

“ஸ்ரெய்ட் ரைம்ஸ்’ பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து எவ்வாறு மதிப்பிடு கிறீர்கள்? மூன்றில் இரண்டு பெரும் பான்மை சாத்தியமா?

பதில்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் குறித்து நான் பதற்றமற்ற நிலையில் உள்ளேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது எனக்கு முக்கியமான விடயமல்ல . ஏனென்றால், நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட வேளை என்னிடம் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளு மன்ற சபாநாயகரை எதிர்க்கட்சியினரே நியமித்தனர்.

நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை நான் கலைத்த வேளை,  சபாநாயகர் உட்பட 47 புதியவர் கள் எனது கட்சியில் இருந்தனர். எனக்கு பெரும்பான்மையும் இருந்தது.

ஆகவே, நான் எண்ணிக்கை குறித்து கவலையடையவில்லை. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறுவோம்.

எனினும், மூன்றில் இரண்டு பெரும் பான்மை என்பது அரசமைப்பை மாற்றுவ தற்கு உதவும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்க வில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகளின் ஆதர வாளர்கள் இன்னமும் செயற்படுகிறார்களா? பதில்: இலங்கைக்குள் செயற்படு வதை விட, அதற்கு வெளியேதான் அதி களவிற்கு செயற்படுகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களுக்கென நிகழ்ச்சி நிரல் உள் ளது. அவர்கள் இதில் வாழ்கின்றனர்.

கடந்த காலம் போன்று தமிழர்கள் தற் போது நிதி வழங்க முன்வராததால் விடுத லைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களைப் பொறுத் தவரை இங்கே ஏதாவது நடக்கவேண்டும். கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதன் அதிகாரங் களைக் குறைப்பீர்களா?

பதில்: இதனை நாடாளுமன்றமே தீர்மா னிக்கவேண்டும். நாடாளுமன்றம் இவ் வாறான விடயங்களை கடந்த காலங்க ளில் கையாண்டுள்ளது. ஆகவே, நாடாளு மன்றமே இதனைத் தீர்மானிக்கட்டும்.

கேள்வி: நாடாளுமன்றம் நீங்கள் சொல்வதைத் தானே செய்யும்? பதில்: எனக்குத் தெரியும். அவ்வாறே கருதுகிறேன். என்றாலும், சில மாற்றங்கள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடுடைய ஜனாதிபதி முறையை நான் விரும்புவேன். அல்லது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாடாளு மன்றத்திற்குப் பதிலளிக்கும் பிரதமரை யும் விரும்புவேன். அல்லது ஓய்வுபெற்று சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று அர சிற்கு ஆலோசனை வழங்க விரும்புவேன்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில்லாவிட் டால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந் திருக்க முடியாது.

கேள்வி: பூரண நல்லிணக்கத் திட்டம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?

பதில்: இதனையே நான் நம்புகிறேன். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. இதேபோன்று அபிவிருத்தி இல் லாமல் சமாதானம் இல்லை.

கிராமமொன்றிற்கோ அல்லது நலன் புரி முகாமிற்கோ சென்று உங்களுக்கு அரசமைப்பு மாற்றம் வேண்டுமா எனக் கேளுங்கள். எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண்டும், எனது குழந்தைக்கு கல்வி வேண்டும் என்ற பதிலே வரும். இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய் தால் புதிய நடைமுறையும், புதிய அரசி யல்வாதிகளும் உருவாகலாம். இதற்காகவே நான் தேர்தலை நடத்தி னேன்.வடபகுதி மக்கள் எனக்கு ஆதர வளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந் தும் தேர்தலை நடத்தினேன்.

என்றாலும் எனக்குக் கிடைத்த வாக் குகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள் ளன.

கேள்வி: தீர்வு என்ற வகையில் சமஷ்டி கொள்கை தகுதிவாய்ந்தது இல்லையா? இந்தியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடு களில் இது பலனளித்துள்ளதே?

பதில்: சமஷ்டி என்பது இலங்கை யைப் பொறுத்தவரை மிகக் கேவலமான வார்த்தை. அது பிரிவினையுடன் தொடர் புபட்டுள்ளது.

அரசியலிலிருந்து ஓய்வு பெற அல்லது விலகத் தீர்மானித்தால் சமஷ்டி பற்றிப் பேசுவதே சிறந்த வழி, அதற்குப் பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள்.

நான் ஓர் அரசியல்வாதியல்லவா? உண்மையான நிலைவரம் என்னவென் றால், இது இந்தியா போன்று பாரிய நாடல்ல. இலங்கையின் வரலாற்றை மறக்க முடியாது. தற்போது அனைத்து முதலமைச்சர்க ளும் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் என் பதால் அவர்களை என்னால் கட்டுப் படுத்த முடிகின்றது.

என்றாலும், அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டு கின்றனர்.

அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கினால் தாங்கள் நினைத்ததை எல் லாம் செய்வார்கள்.

இந்தியத் தமிழர்கள் தமது பகுதிக்கு வரமுடியாது என அவர்கள் தெரிவிக்கவும் கூடும்.

கேள்வி: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? குறிப்பாகப் பொலிஸ் மற்றும் காணி மீதான அதிகாரங் கள் மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்: இதுகுறித்து நாங்கள் ஆராய வேண்டும். 13 ஆவது திருத்தம் ஏற்க னவே நடைமுறையில் உள்ளது.

பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்கிவிட்டோம். நிலங்கள் தொடர்பாகச் செய்வதற்கு எதுவுமில்லை.

வடக்கில் மாகாணசபை இல்லாத போது என்னால் என்ன செய்யமுடியும்? எவ்வாறெனினும், மத்திய அரசின் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.

நீர்ப்பாசனக் குளங்களைத் தமது நண் பர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிலர் வழங்குகின்றனர். பொலிஸ் அதிகாரத் தைப் பொறுத்தவரை எனது மக்கள் இதனை வழங்கவேண்டாம் என்றே தெரிவிப்பர்.

சோனியா காந்தி உத்தரப்பிரதேசத் திற் குச் சென்றவேளை, என்ன நடை பெற்றது என்பதைப் பாருங்கள். அவரது தொகுதிக் குள் அவரை நுழைவதற்கு அந்த மாநில முதலமைச்சர் அனுமதி வழங்க மறுத்தார்.

அவர்கள் பொலிஸின் கட்டுப்பாட்டிற் காக அடிபணிகின்றனர்.

இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன்

நான் இந்தியாவிடமிருந்து பாடம் கற் றுள்ளேன். இதே தவறை நான் செய்வேன் எனக் கருதுகிறீர்களா?

கேள்வி: விடுதலைப் புலிகள் முற் றாக அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறு வீர்களா? பதில்: இல்லை. செயற்படாமல் இருக்கும் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப் பாக இலங்கைக்கு வெளியே அவர்கள் உள்ளனர். தலைமைத்துவம் அழிக்கப்பட் டதால் அனைத்தும் முடிவடைந்து விட வில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்களே ஆகின்றன. பயிற்றுவிக்கப் பட்ட தற்கொலைப் போராளிகள் செயற் படாமலுள்ளனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் தற்கொலைப் போராளி களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நடத்தினர். அவர்கள் கொழும் பிலும் ஏனைய வெளிநாடுகளிலும் உள் ளனர். பலர் அவர்களைப் பயன்படுத்த லாம்.

பொன்சேகா ஒரு முட்டாள் மன்னிப்பு வழங்கு சாத்தியம் இல்லை கேள்வி: பொன்சேகா குறித்த உங் களது உணர்வலைகள் என்ன? நீங்கள் திட்டமிட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தின் கீழ் அவரையும் அரவணைக்க முடியாதா?

பதில்: அவர் ஒரு முட்டாள். நவம்பர் 16ஆம் திகதி அவர் இங்கு எனக்கு முன் னால் அமர்ந்திருந்தார். ஜனாதிபதித் தேர்த லில் போட்டியிட விரும்புகிறீரா என நான் அவரைக் கேட்டேன். அவர் இல்லை யென்றார்; அதுபற்றிச் சிந்திக்கவில்லை என்றார். இறுதியாக என்னைச் சந்தித்த போது கூட அவர் இதுபற்றிக் கூறவில்லை.

நான் அவரிற்கு ஆலோசனை வழங் கினேன். அரசியல், இராணுவத்திற்குரியது அல்ல என்றேன்.

இராணுவத்தில் நீங்கள் உத்தரவிட் டால் அவர்கள் பின்பற்றுவார்கள். அரசிய லில் வேறு மாதிரி. உங்களை விமர்சித்த வர்களிடமே நீங்கள் செல்கிறீர்கள் என் றேன்.

அவர் இதுவும் அரசியல்தானே என்றார்.

நான் நீங்கள் அவதானமாக இருங்கள், அவர்கள் ஒருநாள் உங்களைக் கைவிடு வார்கள் என்றேன்  சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங் கியதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அவர் தன்னை அரசியலுக்குத் தயார்ப் படுத்தாத முட்டாள்என்றார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் அரசாங்கம் சிங்கள குடியேற்றத்தை ...மேலும் வாசிக்க

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் அரசாங்கம் சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டுள்ள வாகனங்களின் உதிரிப்பாகங்களை இலங்கை இராணுவத்;தினர் விற்பனை செய்து அதிகரித்த இலாபம் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கோபுரத்தை சுற்றியுள்ள பகுதி, இராணுவத்தின் பாரிய தளமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், கொக்காவில் முகாமை அண்மித்த இலங்கை இராணுவத்தினர் குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கான யுத்திகள் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர் இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அங்கு பல சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வன்னிப்பகுதிக்கு சென்று தமது வாகனங்களை பார்வையிட முடியும் என வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கை இராணுவத்தினர் அந்த வாகனங்களை கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள், பொலநறுவை மற்றும் வவுனியா நகரப்பகுதிகளில் களவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் ...மேலும் வாசிக்க

சிறீலங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில்இ தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம்இ சட்டமும் ஒழுங்கும்இ கல்விஇ சுகாதாரம் உட்படச் சமூக பொருளாதார அபிவிருத்திஇ வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:

“எனினும்இ பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.(http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).

சனவரி 26இ 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8இ 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75மூஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25மூ ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. . (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).

இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர்; தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது  இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).

வட மாகாணம் கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம்இ தமிழர் தேசம்இ தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் (http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:

“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே  எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம்  இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”

சுரேன் சுரேந்திரன்

15 மார்ச் 2010 கார்டியன் (UK Guardian) நாளிதழில் வந்ததன் தமிழாக்கம்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்நாட்டு அதிபரான நான் எல்லா சட்டங்களுக்கும் மேலானவன் என்று சிறிலங்க அதிபர் மகிந்த கூறியுள்ளார். ...மேலும் வாசிக்க

1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்நாட்டு அதிபரான நான் எல்லா சட்டங்களுக்கும் மேலானவன் என்று சிறிலங்க அதிபர் மகிந்த கூறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு வரும் சித்திரை மாதம் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா அயலுறவுத் துறை அமைச்சர் ரோகித போகல்லகமவை ஆதரித்து கோட்டை என்ற இடத்தில் செவ்வாய்க் கிழமை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மகிந்த இவ்வாறு கூறியுள்ளார்.

“1978ஆம் ஆண்டு சிறிலங்கா அதிபராக இருந்த ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே நிறைவேற்றிய அரசமைப்புச் சட்டம் எல்லா சட்டங்களுக்கும் மேலாக என்னை வைத்துள்ளது. எனவே, என் மீது நீதித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால், இந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவ வீரன் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க எனக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது” என்று மகிந்த கூறியுள்ளார்.

அயலுறவு அமைச்சராக உள்ள ரோகித போகல்லகம, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் அந்நிய தலையீடுகளை மிக நேர்த்தியாக கையாண்டுத் தடுத்தவர் என்று மகிந்த புகழ்ந்துள்ளார்.

கம்பாலாவில் நடந்த மற்றொரு தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய சிறிலங்கா மூத்த அமைச்சர் டி.எம். ஜெயரத்னே, ஐ.நா.வை பயன்படுத்தி சிறிலங்க அரசை நிலைகுலையச் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

“உறுதியான நடவடிக்கை எடுத்து விடுதலைப் புலிகளை ஒழித்த அதிபர் மகிந்த, ஐ.நா.வின் சொல்படி நாட்டை ஆளத் தயாராக இல்லை” என்று பேசியுள்ளார். இதனை தமிழ்நெட்.கொம் வெளியிட்டுள்ளது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது ...மேலும் வாசிக்க

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் தெரிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசிற்கான கனடிய செயற்பாட்டுக் குழுவினால் தமிழ் ஸ்ரார் வானொலியூடாக நடத்தப்படும் தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசைக் கண்டு எவரும் அஞ்சுவதற்கும், ஐயுறுவதற்கும் ஒன்றும் இல்லை, நாடு கடந்த அரசானது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிச் செயற்படுகிறது. அங்கே மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. (Transnational goverment is trasparent ) என்று கூறும்படியாக நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருப்பது காத்திரமான விடயம் எனவும் ஈழவேந்தன் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசை உருவாக்குகின்றபோது மதியுரைக்குழுவின் உடனடிக் கவனம் முழுவதும் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதோடு நிற்காமல் முள்வேலிகளுக்குள் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் இருப்பதானது, இன்றைய யதார்த்தத்துடன் நாடு கடந்த அரசு உருவாக்கக் குழு செயற்படுவதை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இலங்கையில் நாம் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தும் வாய்ப்பு இல்லை, ஆகவே வெளியுலகில்தான் இதனைச் செய்ய முடியும். எங்கெங்கெல்லாம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளின் மக்களுடைய ஆதரவுடன் தான் இதனைச் செய்ய வேண்டும்.

மேலும் நாடு கடந்த அரசானது ஜனநாயக அடிப்படையில் இயங்குவதனால் எந்த ஒரு நாடும் எமக்குத் தடையாக இருக்க முடியாது, இதை நாம் முறையாக செயற்படுத்தினால் ஒரு இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் சிந்தனைக்குரியதாகவும், வந்தனைக்குரியதாகவும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எம் தமிழீழ தேசம் மலரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படையானது அதனை சரியாக நடைமுறைப்படுத்தினால் ஜனநாயக வழியில் தமிழீழம் பிறக்கும். ஐ.நா. சபையில் எமது கொடி பறக்கும் என்றும் ஈழவேந்தன் தெரிவித்தார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒற்றுமை என்பதன் பொருள் ஒரு இனம் ஒரே கட்சியாக, ...மேலும் வாசிக்க

ஒற்றுமை என்பதன் பொருள் ஒரு இனம் ஒரே கட்சியாக, ஒரே மாதிரியான கொள்கைகளுடன் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பது மட்டுந் தான் என்றில்லை. வெவ்வேறு கட்சிகளாக இருந்தும் ஜி எஸ் பி வரிச் சலுகைக்காக மகிந்த , ரணில் மற்றும் சந்திரிகா அடங்கலாக அனைவருமே ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுத்ததும் ஒரு ஒற்றுமையே. தவிர ஒரு நாட்டின் அரசியலானது உலக நாடுகளின் அணி அரசியலாகிவிட்ட இன்றைய நிலையில், ஒரு அரசு அல்லது  இனம் பிரிந்து நிற்பது போல்க் காட்டிக் கொண்டு சகல வெளி நாடுகளையும் கையாளும் தந்திரத்தையே பிரிந்தாடும் தந்திரம் என்று மேலே சுட்டியுள்ளேன். இதற்கு சிறந்த உதாரணமாக இலங்கையின் கடந்த கால நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

ஜே வி பி போன்ற தீவிரவாதக் கட்சிகளைக் காட்டி தமிழருக்கு அதிகம் எதையும் வழங்கி விட முடியாதென்று கொழும்பு நிர்வாகம் உலக நாடுகளிற்கு சாட்டுப் போக்குக் காட்டுவது அடங்கலாக, இலங்கையின் இலங்கையின் ஹிலாரி கிளின்டனுக்கும், இங்கிலாந்து பிரதமருக்கும் எதிராக தனது அணியில் உள்ள இன்னொரு கட்சியான விமல் வீரவன்ச அணியை வைத்து வெள்ளைப் புலிப் பாணி ஆர்ப்பாட்டத்தை கொழும்பில்  நடாத்திக் காட்டி,  அமெரிக்காவையும், இங்கிலாந்தையும்  வழிக்கு கொண்டு வரும் பாணியையே பிரித்தாடும் தந்திரம் என்கிறேன். 

இவ்வாறான அணுகுமுறையை முதலில் பயன்படுத்திக் காட்டியவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களாவர். இந்திரா காந்தியின் சிறப்புத் தூதராக திரு. ஜி. பாரத்தசாரதி அவர்கள் செயற்பட்ட காலத்தில் , தமிழருக்கான அதிகார உரிமை அளவுகளைக் குறைப்பதற்கு பௌத்த பீடாதிபதிகளைச் சாட்டிய ஜே.ஆர்., திரு. பார்த்தசாரதி அவர்களை அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்திக்க அனுப்பி வைத்தார்.

இவ்வாறான ஒரு பிரிந்தாடும் தந்திரத்தாலேயே, உலகில் போட்டி போடும் பெரிய நாடுகளை எல்லாம் சமாளித்து தனது தேவையை மகிந்த நிறைவேற்றினார்.

இதன் பொருள் தமிழர் ஒற்றுமையாக இருக்கக் கூடாதென்பதில்லை. ஆனால் வேறு வேறு கட்சிகளாகவும் குழுக்களாகவும் நின்று கொண்டு ஒரே நோக்கத்தை அடைய சர்வதேச மேடையில் இலங்கை போல்  வேஜம் போடுவதையே நான் பிரிந்தாடும் தந்திரம் என்கிறேன்.

ஆகவே தமிழர் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தாலும் அவர்கள் ஒரு தேர்தற் கூட்டணி அமைத்து திருகோணமலையில் மும்முனை இனப் போட்டிக்கு வழி விட்டுத் தோற்காது, தொகுதி உடன்பாட்டுக் கூட்டணிகளை அமையாமை தான் ஒற்றுமையின்மை ஆகும். அனுபவமும் கனதியுமுள்ள சம்பந்தரைத் தோற்கடிக்க வேண்டும்  என்ற முனைப்புத்தான் ஒற்றுமையின்மையாகும்.

இந்த இடத்தில் இரண்டு விடயங்களை நான் தொட்டுத் தொடர விரும்புகிறேன். முதலாவதாக, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என தமிழர்கள் அணி பிரிந்திருந்த காலத்தில் கூட,  திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு தமிழர் மட்டும் போட்டியிடும் அளிவிற்கு தமிழர்களிடையே புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் அதற்கான விவேகமும் பக்குவமும் இருந்துள்ளது.

இது தான் இன்று தேவைப்படும் குறைந்த பட்ச ஒற்றுமையாகும்.

இரண்டாவதாக பொதுத் தேர்தல் ஒன்றில் அமரர்கள் ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்கள் யாழப்பாணத் தொகுதியிலும், அமிர்தலிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டையிலும்  தோல்வி அடைந்த போது  , திரு ஜீ ஜீ பொன்னம்பலம் பின்வருமாறு கூறி வேதனைப்பட்டதாகத் தெரிகிறது.

“ நான் தோற்றதைப்பற்றி நான் கவலைப்படவில்லை ஆனால் தமிழர் தரப்பில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அமிர்தலிங்கம் தோற்றுவிட்டாரே என்று தான் கவலைப்படுகிறேன்”  இது தான் அரசியலைப் பொறுத்தவரை ஏட்டிக்கு போட்டியாக இருந்தும், வழக்கு வாதத் திறமையில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய திரு ஜீ ஜீ அவர்கள்,  அரசியல் வாதம் புரிய வல்லவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதை உணரந்து கூறிய வாரத்தைகள் ஆகும். 

இவ்வாறே இன்று திரு இரா. சம்பந்தன் தோல்வி அடையக் கூடாது என்பது வெளிப்படை. இந்த நிலையில் தமிழக் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி சம்பந்தரை தோற்கடிக்க நினைப்பதை யாருமே ஜீரணி;க்க இயலாது என்பதை காங்கிரஸ் பிரமுகர்களும் தலைமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகம் அணி அணியாக இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்சியா என்றெல்லாம் பல் முனை உலகாக மாறிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் நாங்களும் இந்த நாடுகளிற்கு பின்னால் பல அணிகளாக தமிழர்களும் இலங்கை போல்,  நின்றிருந்தால் உலகமே தமிழருக்கு எதிராக ஒரே அணியில் திரண்டு வந்து முள்ளிவாய்க்காலிற்குள் முடக்குவததைத் தவிர்த்திருக்கலாம்.

எனவே இன்று தமிழர் தேசியக் கூட்டமைப்பு இரு அணிகளாகப் பிளவுபட்டமையைத் தான் விட்டாலும், இந்தத் தரப்புக்களை வான் அலைகள் ஊடாக  செவ்வி காண்பவர்கள் திருகோணமலையில் சம்பந்தருக்கான விட்டுக் கொடுப்பு அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும்.

அத்தோடு இதற்கான வலியுறுத்தலை ஊடகங்களும் மக்களும் அரசியல் நோக்கர்களும் வெளியிடலாம். இந்தக் கருத்து உருவெடுத்து,  திருகோணமலையில் சம்பந்தரிற்கான ஒரு விட்டுக் கொடுப்பிற்காக புலம் பெயரந்த தமிழர்கள் அழுத்தமாக காங்கிரஸ் கட்சியினர்க்கு வழங்க வேண்டும் என்ற அவாவில் தான் இது இங்கு பிரசுரிக்க அனுப்பப்படுகிறது. 

குறிப்பாக இந்தக் காலத்தில் கொள்கை உறுதியில் சற்றும் விலகாத ஒரு அணி இருப்பது அவசியம் தான். அதைக் காட்டி மிதவாதக் கட்சி தனது பேரம் பேசும் அளவை அதிகரிக்கலாம். வெளிநாடுகள் விட்டுக் கொடுப்பிற்களுக்காக அழுத்தம் கொடுக்கும் போது மிதவாதக் கட்சி இதற்கு மேல் தாங்கள் இறங்க முடியாமைக்கு காரணமாக மற்றக் கட்சியைக் காட்டலாம்.

இவ்வாறான இராஜதந்திரத்தை தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரிந்தாடல் முயற்சியாகவே  திரு சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் பாரக்கலாம். .

ஒரு முனை உலகு பல முனை உலகாக முன், மீண்டும் இரு முனை உலகாகும் ஒரு நிலைமாற்ற காலமாகிய இன்று எல்லோரும் இந்தியாவுடன் நிற்பதை விட பல நிலைகளில் இருக்கலாம். இதையே ஒற்றுமையின் மறுபக்கமாக நான் பாரக்கிறேன்.

இவ்வாறு பன் நிலைகளில் நிற்கும் இலங்கை  நின்றதனூடாகவே, பாலஸ்தீனத்திடமும் அதன் எதிரியான இஸ்ரவேலிடமும் ஆதரவைப் பெறுகிறது என்பது தமிழர் தரப்பு புரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகும்.

முடிவாக ஒற்றுமை என்பது ஒரே அணியில் இருப்பதுதான் என்பதை விட பல அணிகளில் இருந்தாலும் பொதுவான நோக்கங்கள் மற்றுத் தேவைகளைப் பொறுத்து விவேகமாக அனைவரும் நகர்வதே ஒற்றுமையாகும்.

ஒரு அணியில் இருப்பதை விட இந்தப் பிரிந்தாடும் தந்திரமே இன்றைய பல் முனையை நோக்கிய உலகிற்கு பொருத்தமானதாகும்.

பூநகரான் – கனடா Poonagaran@rogers.com


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய ...மேலும் வாசிக்க
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது."அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். "எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்" களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்" சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். "நானும் கொஞ்சதூரம் வாறன்" நண்பன் கூற, "வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்"கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். "டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்" என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று.... மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்."நான் போறன், வருவனோ தெரியாது" என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்... அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன - அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்.... நினைத்துப்பார்க்கிறோம்...."வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா... சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது...ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.- கதிரவன் -

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாசமிகு தமிழினத் தலைவா ...மேலும் வாசிக்க

பாசமிகு தமிழினத் தலைவா
உங்களுக்கு இம்மடலை வரையவேண்டுமென்ற எண்ணம் பற்பல நாட்களுக்கு முன்னரே எனக்குத்தோன்றினாலும் பலவேறு காரணங்களினால் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்விட்டது.
என்னுடைய சுகவீனம், நித்தியானந்தா பரபரப்பு,IPL என்று உங்களை நான் தொடர்புகொள்ளத்தான் எத்தனை விதமான தடைகள்.
பவளவிழாக் கண்டும் பதவியிலிருக்கும் இளைஞரே, சக்கர நாற்காலியிலிருந்தாலும் சளைக்காமல் உலாவரும் சாதனை மன்னரே.. அல்ல சக்கரவர்த்தியே... (இந்த வாலி, வைரமுத்து கலந்துகொள்ளும் உங்கள் விழாக்கள், கவியரங்குகள் பார்த்த தோஷம், பிடித்த தோஷம்)
உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?
அரசியலில் நீங்கள் ஒரு சாணக்கியர்... அதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்று பிள்ளைகளையும் பிரச்சினையில்லாமல் (குடும்ப 10 கட்சி) மூன்று முக்கிய இடங்களில் அமர்த்திவிட்டீர்கள்.
உங்களுக்குப் பின் மகன் வர இனித்தடையில்லை.
எதிர்க்கட்சிகள் எழ இனி உடனடி வாய்ப்பில்லை.
குரல் கொடுக்கக்கூடியவர்கள், முனைந்தவர்கள் என்று பலராலும் கருதப்பட்ட, உசுப்பேற்றப்பட்டு வந்த பல திரை ஸ்டார்களும் அடக்கப்பட்டு உள்ளார்கள் - இல்லை பல் பிடுங்கப்பட்டுவிட்டார்கள்.
விஜயகாந் அடங்கிவிட்டார்: சரத்குமார் நுரைதள்ள மீண்டும் உங்களிடமே சரண்: விஜய் ஒரு அடி வைக்க முதலே கட்டம் கட்டப்பட்டுவிட்டார்: அஜித்?
பாருங்க ஐயா என்று முறையிட்டதற்கே முறிச்சு எடுத்தீட்டீங்களே... என்ன ஒரு ராஜதந்திரம்!
ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.
மன்மோகன், சோனியா, மகிந்தர் - இவர்கள் மூவரையும் சமாளித்து, தமிழ் அனுதாபிகளையும் போராட்டம் நடத்தியவர்கள், விமர்சித்தவர்களையும் அடக்கிய விதம் இருக்கிறதே – யாருக்கு வரும்?
உங்கள் வழிமுறைகளை அப்படியே நம்ம நாட்டுகேற்ப மாற்றி இங்கேயும் நம் ஜனாதிபதி மன்னராக மாறி தொடர் வெற்றியீட்டி வருகிறார். (சில விஷயங்களை உங்களையும் விஞ்சி காய் நகர்த்துகிறார்)உங்கள் வழிமுறைகள்,அரசியல் ஞானத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லாமல் வேறு என்ன?
அப்படியே அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?
ஆனால் இதுக்கெல்லாம் மனதுக்குள்ளே உங்களைப்பற்றி வியந்தேனே தவிர கடிதம் எழுதிப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியதில்லை..
ஆனால் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்ததில் இருந்து எப்படியாவது உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது.
மீண்டும் அதே கேள்வி.. எப்படி ஐயா தங்களால் மட்டும் முடிகிறது?
இதற்கு முதலும் நீங்கள் கலந்து கொண்ட திரையுலகம் உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாக்களைப் பார்த்துள்ளேன்..
நான்கைந்து மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக வாளி,வாளியாக ஒவ்வொருவரும் உங்களைப் புகழ்ந்து தள்ளும்போது எவ்வாறு பொறுமையாக,கூச்சத்தால் நெளியாமல் உங்களால் இருக்க முடிகிறது?
பழகிவிட்டீர்களா?பழக்கி விட்டார்களா?
அதுவம் சும்மாவா.. இந்திரனே,சந்திரனே என்று அவர்கள் புகழ்வதும், போற்றிப் பாடி ஆடுவதும் பார்க்கும்போது ஏதோ மன்னர் காலத்துக்கு நாம் வந்துவிட்டோமோ என்று ஒரு பிரமை..
திரையில் எம்மைப் போன்ற சாதாரண ரசிகர்கள் காண ஏங்கித் தவிக்கும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் உங்கள் முன்னாள் சர்வசாதாரணமாக வந்து குத்துப் பாட்டுக்கும், உங்களைப் போற்றிப் பாடும் பாட்டுக்கும் 'பய'பக்தியுடன் ஆடுவது எமக்கெல்லாம் பரவசம்.
நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் அன்புக்குரிய 'அடி'யவர்கள் அவர்களையெல்லாம் காட்டுவது காட்டி அழைக்கிறார்கலாமே ஐயா.. ;) (இது அஜித் சொன்னது மாதிரி எல்லாம் இல்லீங்கோ)
பாசத்தலைவன் உங்களுக்கான விழாவில்,இந்திய சினிமாவின் உயர நடிகர் அமிதாப் மேடையில் பேசப்படும் விஷயம் புரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு அருகில் உள்ள கமலின் மொழிபெயர்ப்பை கேட்டு நெளிவதும், தமிழின் இரு சிகரங்கள் ரஜினியும் கமழும் என்ன விழா நடந்தாலும் உங்களுடனேயே அருகில் பயபக்தியுடன் இருப்பதுமாக உங்களுக்கான மரியாதை என்பதைவிட நிர்பந்தமாகவே தெரிகிறது.
அதுக்காக அஜித் சொனது சரியென்று நான் சொல்வேனா? அமிதாப்,கமல்,ரஜினி,இசைஞானி இவர்கள் எல்லாம் கம்முனு இருக்கும்போது இவருக்கு என்ன வந்துது?
உங்க பாசக் குழந்தைகள் பொங்கியதில் தப்பே இல்லை ஐயா..
ஈழத்து நாட்டவன் உனக்கென்ன வந்துது என்று உங்கள் பராசக்தி பாணியில் என்னிடம் கேட்டால், இதோ காரணங்களை அடுக்குகிறேன்..
பல விஷயங்களில் உங்களைப் பின்பற்றும் எங்கள் நாட்டில் கடந்த தேர்தலில் அடிக்கடி விருந்துகள் நடந்தது உங்களுக்குத் தெரியுமோ எனவோ, இன்னும் இந்தப் பாராட்டு விழாக் கலாசாரங்கள் தொடங்கவில்லை.
இந்த விஷயங்களைஎல்லாம் நம்ம நாட்டுப் பக்கம் கற்றுத் தந்துவிட வேண்டாம் என்று அன்பாக வேண்டிக்கொள்ளவே இந்தப் பாசமான மடல்.
அதுசரி அதிகமான பாராட்டுவிழாக்கள் கண்ட தலைவர் நீங்கள் தான் என்று அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த உங்கள் அன்புக்குரிய உடன் பிறப்புக்களும், உங்கள் பாசத்துக்குரிய கலைக் குடும்பத்தினரும் தயாராகின்றனராமே.. உண்மையா?
இப்போதே கண்ணைக் கட்டுதே.. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் வருமா?
இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்.. மன்னிக்க விடுவார்கள் என்று பயமாக இருக்கிறதைய்யா..
மீண்டும் ஒரு வெற்றி கிடைத்தால் உங்கள் பாணியை இங்கேயும் பின்பற்றி விடுவார்கள் என மன சொல்லுதைய்யா.. அது தான் கண்ணைக்கட்டுகிறது.
அண்ணன் தம்பிமாரோடு இப்போது அடுத்த தலைமுறையும் களமிறங்கி இருப்பதால் தமிழக வடிவம் இங்கே மேலும் ஸ்திரத்தோடு தொடங்கிவிடும் போலிருக்கு.
எதற்கும் இன்னும் ஒரு மாத காலத்துக்காவது மேலும் ஒரு பாராட்டு விழா வேண்டாமே..
(அஜித் பொங்கியதற்குப் பிறகு நீங்களே அந்த முடிவில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.. எதுக்கும் ஒரு தடவை உங்கள் திருச் செவியில் போட்டு வைக்கலாமே என்று தான்)
ஐய்யா இன்னும் இரண்டு ஐயங்கள்..
ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..
வாக்கு மழையாய்ப் பொழியும்.
உடன் பிறப்புக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் உயிரையும் கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் தேர்தல் வாக்குகளை அள்ளலாம்.. 'அம்மா'வையும் ஒரு வழி பண்ணலாம்..
நித்தியானந்த பற்றி நண்டு,சுண்டு எல்லாம் பலப்பல சொன்ன பிறகும் பகுத்தறிவு சிங்கம் தாங்கள் இன்னும் அது பற்றி கவிதையோ ,கடிதமோ எழுதலையே ஏன்? (ஒரு அறிக்கையோடு முடிந்ததா?)
உங்கள் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிலாவது நேரில் வந்து கலந்துகொண்டு உங்களுக்காக அஜித் மகள்,விஜய் மகன், சூர்யா மகள்,தனுஷ் மகன் ஆடும் நடனங்களை(அப்போதாவது சித்தப்பா நடிகர்மார் ஓய்வு பெறுவார்கள் என நம்புவோமாக), அப்போதும் கமல்,ரஜினி வழங்கும் வாழ்த்துக்களைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கும்
எளிமையான ஈழத்து மைந்தன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு ...மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு என்ன தகுதி உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உறையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு பான்கீமூன் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஈழநாடு தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை ...மேலும் வாசிக்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஈழநாடு தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல் தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள் அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம்

என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் சதித் திட்டத்திற்குத் துணை போபவர்களாகச் சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திருப்திகரமான எந்தப் பதிகல்ளையும் கொடுக்காமல், ஒற்றுமை என்ற பெயரில் எங்களை ஒட்டுமொத்தமாக சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் கூட்டமைப்பினர் கூட்டங்கள் போட்டுக் கூறித் திரிவதும், அதற்காக அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதும் அரசியல் சார்ந்த, ஊடகம் சார்ந்த தர்மமாக இருக்காது என்பதே எனது தாழ்மையான கருத்து.

ஒற்றுமையாக முன்பு ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அனுபவம் ஈழத் தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழீழ ஆணையுடன் கூட்டமாக சிங்கள நாடாளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி எதையெல்லாம் தமக்காகப் பெற்றுக் கொண்டது. அந்தத் தமிழாகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தது என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், கூட்டமைப்பு தன் சுயத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

எல்லோரும் ஒன்றாகப் போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உவப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும், அதற்கான கால எல்லை எது? அது முடியாவிட்டால், செய்யக் கூடிய பரிகாரம் என்ன? என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது விருப்பம் யாராலும் நிராகரிக்கப்பட முடியாதது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் முப்பதாண்டு கால தகிடுதத்தங்களும், வாய் வீரமும்தான் தமிழீழ மக்களை இந்தியக் கரங்களில் சேர்த்து முள்ளிவாய்க்காலில் அழிய வைத்தது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. அதே போன்றே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் தமிழீழ மக்களை இந்தியக் கொடுங் கரங்களில் சிக்க வைப்பதற்கு நாங்கள் உடந்தையாவதற்கும் நாங்கள் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் கிடைத்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்ற ஓடித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்களுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் புறக்கணித்ததன் காரணத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தியா அதை விரும்பவில்லை. அதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியாவின் கட்டளைப்படியே கூட்டமைப்பில் எஞ்சியிருந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரகுமார் ஆகியோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் அலுவலகம் அமைத்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பது எமக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

இந்தியாவால் ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. இந்தியாவிடமிருந்துதான் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆகையால், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படாமல் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எம்மைப் போன்ற ஒவ்வொருவரது கடமையாகவே உள்ளது.

இந்தியா எங்களிடம் வந்தபோது நாங்கள் இழந்தது கொஞ்சமாக இருந்தது. இப்போது எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, ஆனாலும் இந்தியா வருகின்றது… ஏனென்றால் எங்களிடம் இன்னமும் உயிர்கள் மிச்சமிருக்கின்றது சிங்கள தேசத்தை மிரட்டுவதற்கு எங்கள் இரத்தம் இன்னமும் அதற்குத் தேவைப்படுகின்றது!

நாங்கள் அழிந்தது போதும்! இந்தியாவிடம் எங்களை அடகு வைப்பதை நிறுத்திவிடுங்கள்!

பாரீஸ் ஈழநாடு


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தமிழீழத்தின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் ...மேலும் வாசிக்க

தமிழீழத்தின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது.

ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர்.

இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீடுகள் அமைப்பதற்கான தகரங்கள், இரும்புத் தளபாடங்கள், மரங்கள் என்பன அங்கு குவிக்கப்பட்டுள்ளன. குளிரூட்டும் தன்மையுடைய தகரங்களே கூரைகளுக்காக அங்கு பயன்படுத்தப்படவுள்ளன.

அந்தப் பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கக் கூடிய வர்த்த வருமானங்களை முழுமையாக ஆக்கிரமிப்பது என்துடன் திருமுறுகண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை தனிச் சிங்களப் பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்று அங்கு சென்று திரும்பிய படைத் துறை உயர் அதிகாரி ஒருவர் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை முறிகண்டியில் இருந்து படிப்படியாக நகரும் ஆக்கிரமிப்பின் போது சிவபாத கலையம் என்ற பாடசாலையும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கு அனுப்பப்பட்டு கொட்டில்களில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாடசாலைக்கான பெயரானது சிங்கள வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கலையகம் என்ற விடயத்தினை சுருக்கியே பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் அறிவியல் நகர்க்கிராமங்கள் ஏற்கனவே மாவீர்களது குடும்பங்களின் குடியிருப்பாகவும், தமிழீழத்தின் பல்வேறு நிர்வாக அலுவலங்களையும் வறிய மக்களுக்கான குடியிருப்புக்கான காணிகளையும் உள்ளடக்கியவையாக விளங்கின.

இதே போன்று அந்தக் கிராமங்களின் மத்தியிலேயே தமிழீழ காலநிலை அவதான நிலையம், அன்புச்சோலை மூதாளர் பேணலகம், மருத்துவக்கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம், ஊடகக் கல்லூரி உட்பட்ட கட்டுமாணங்கள் செயற்பட்டும், செயற்படுவதற்கான பணிகள் பூர்த்தியடைந்த நிலையிலும் போர் இடப்பெயர்வுகள் காரணமாக அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்த நிலையில் முறிகண்டியில் தொங்கி படிப்படியாக அறிவியல் நகர் கிராமங்களையும் முறுகண்டிக்கு அருகாக இருக்கும் வசந்தபுரம் கிராமத்தையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான நகர்வுகளாவே இந்த சிங்கள ஆக்கிரமிப்புச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருவதாக உணரமுடிகின்றது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மனிதன் , லங்காசிறி , தமிழ்வின் இவை எல்லாம் ஒரே நிர்வாகம் தான் மனிதனில் ஒட்டுக்குழுக்களுக்கு ...மேலும் வாசிக்க
மனிதன் , லங்காசிறி , தமிழ்வின் இவை எல்லாம் ஒரே நிர்வாகம் தான் மனிதனில் ஒட்டுக்குழுக்களுக்கு இணைப்பு கொடுத்ததிலிருந்து யாருடைய கூட்டம் என்று இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்தார்கள் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் எம்மக்களும் வியாபார நிறுவனங்களும் சிந்திக்க வேண்டும் முற்று முழுதாக மரண அறிவித்தலிலேயே இவர்கள் உழைக்கின்றார்கள் ஊடகங்களை ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்வார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு பணியாற்றிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும், சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. தொடர்ந்தும் நடந்து வருகின்றன.சிங்கள தேசத்தின் இனவாதத் தீயில் கருகிப்போன ஊடகவியலாளர்களையும் நாம் கண்ணீரோடு நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் தமிழீழ சமூகம் உள்ளது. நிமலராஜனில் ஆரம்பித்த இந்த ஊடகப் படுகொலைகள் நடேசன், சிவராமன் போன்ற பல தமிழூடக ஜம்பவான்கள் எனத் தொடர்ந்து, மகிந்த சகோதரர்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கண்டித்த சண்டே லீடர் என்ற கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்கள ஊடகவியலாளரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.விநாயகத்தின் விபரீத வலை- கறுப்பு சிங்கள ஊடகவியலாளர்கள் பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்ப் பாதுகாப்பிற்காக சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்ற மனச்சாட்சி மிக்க சில சிங்கள ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்திய தமிழ் இளைஞர்கள் படுகொலை குறித்த ஒளித் தகடே மகிந்த ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற சாட்சியாக மாறி அவர்களது தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.இத்னை பொறுப்பான ஊடகத் துறை தற்போது தடுமாறும் தமிழ் ஊடகவியலாளாகளால் சிதைவடைந்து வருவதை நாம் கவலையோடு சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளதை அனைத்து ஊடகங்களினதும், குறிப்பாக இணைய ஊடகங்களின் கவனத்திற்குத் தர வேண்டிய தார்மிகக் கடமையின் நிமித்தம் இந்தக் கட்டுரை பிரசுரமாகின்றது.இலங்கைத் தீவு அமைதியாக இருந்த ஒரு காலத்தில், 'தினகரன்' பத்திரிகை யாழ்ப்பாணத்தில் கொடி கட்டிப் பறந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த தினகரன் விளையாட்டு விழாவின் சிறப்பு அந்தப் பத்திரிகையின் வரலாற்றைப் பதிவு செய்திருந்தது. அதே தினகரன் பத்திரிகை சிங்கள அரச தரப்பின் ஊதுகுழலாக மாற்றம் பெற்ற பின்னர் அதைக் கையில் தொடுவதற்கே ஈழத் தமிழர்கள் அருவருப்படைந்தனர்.யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வாசகர்களில் பெரும் பகுதியினரை 'ஈழநாடு' பத்திரிகை வளைத்துப் பிடித்தபோதும், இரண்டாவது இடத்தில் இருந்த 'வீரகேசரி' முதல் இடத்தைப் பிடித்து வேகமாகத் தன்னைத் தமிழ் மக்கள் மத்தியில் பலப்படுத்திக் கொண்டது. இந்தியாவால் போஷாக்கு ஊட்டப்பட்டு, கொழும்பில் இருந்து வெளியிடப்பட்டு வந்தாலும், ஈழத் தமிழர்களின் நாடித் துடிப்பறிந்து நெருக்கடிகள் மத்தியிலும் பத்திரிகைத் தர்மத்தை ஓரளவாகினும் நேர்மையுடன் கடைப்பிடிக்கத் துணிந்த காரணத்தால், தற்போதுத் தனது இடத்தைத் தமிழ் மக்களது இதயங்களில் தக்க வைத்து வருகின்றது.'ஈழநாடு' பத்திரிகை இந்திய, சிங்கள படையினரின் தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டதுடன், களநிலை சாதகமில்லாத நிலையில் அங்கு வெளிவருவது தடைபட்டுப் போக, புலம்பெயர் தேசங்கள் அந்தப் பெயரைச் சுவீகரித்து இன்றுவரை அதனை உயிர்ப்பித்து வருகின்றனர். இந்த இடையூறான காலப் பகுதியில் யாழ். மக்களுக்கான பத்திரிகையாக உருவான 'உதயன்' நாளிதழ் சிங்கள அரச பயங்கரவாதத்தினதும், தமிழ் ஒட்டுக் குழுக்களதும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களையும், இழப்புக்களையும் எதிர் கொண்ட போதும் இன்றுவரை தனது ஜளநாயகக் கடமையினைத் தொடர்வதாகவே உணரப்படுகின்றது.'உதயன்' நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், அதன் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரின் மைத்துனருமான திரு. வித்தியாதரன் அவர்கள் பத்திரிகா தர்மத்தைப் பேணிவருவதாகவே நம்பப்படுகின்றது. ஆட்சி தம் கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக அரசியலாளர்களும், பதவி தம் கையில் கிடைத்துவிட்டது எனபதற்காக சட்டவாளர்களும் எப்படி ஜனநாயக கடமைகளிலிருந்து தவறுவதை மக்கள் (சிங்கள மக்களை இதில் சேர்க்க முடியவில்லை) அனுமதிக்க மாட்டார்களோ, அப்படியே ஊடகங்களும் தமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமைகளை மீறும்போது அதையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.அது மாறாத பட்சத்தில், அந்த ஊடகங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதையும் அத்தனை ஊடகங்களும் கவனத்தில் கொள்வது அதன் நிலைப்பிற்கு வகை செய்யும். தற்போது, இணைய ஊடகங்களில் வெளிவரும் உரிமை கோரப்படாத அல்லது முகவரியற்ற கட்டுரைகள் மக்களைக் குழப்புவதாகவே உள்ளது. ஆண்மைத்தனமில்லாத அந்த எழுத்துக்கள் ஊடக நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவர் சரியான கருத்தைத் தெரிவிப்பவராக இருந்தால், தனது கருத்து சரியானதுதான் என்ற எண்ணம் அவரிடத்தில் நிச்சயமாக இருந்தால், அவர் புலை பெயருக்குப் பின்னால் ஒளிந்திருந்தோ, அறியப்படாத அமைப்புக்களின் பெயரால் அறிக்கை விடுவதோ ஊடக தர்மமாக அமையாது.ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்க விரும்பும் ஒருவர், அதனால் வரக்கூடிய எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஆண்மைத்தனம் உள்ளவராக இருக்க வேண்டும். (தமிழீழ விடுதலைப் போரை நேரில் தரிசித்த எவரும் ஆண்மைத்தனம், பெண்மைத்தனம் என்று வீரத்தைப் பிரித்துணர முடியாது எனினும் வழக்கிலிருக்கும் வார்த்தையாகவே இந்தச் சொல் கையாடப்படுகின்றது) அதைப் பிரசுரம் செய்யும் ஊடகங்களும் அத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.அண்மைக் காலங்களில் பெருகிவரும் இணையத்தளத் தொழில் நுட்ப வளர்ச்சி எம்மில் சிலருக்கு 'மஞ்சள் பத்திரிகை' வடிவங்களை உருவாக்கி உலாவ விடும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. அத்தகைய இணையத்தளங்கள் யாரைப்பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த இணையத்தளம் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கான உரிமை விபரங்களும் அதில் வெளியிடப்படுவதில்லை.அண்மைக் காலமாக வெளிவரும் உரிமைகோரப்படாத இணைய ஊடகங்களைப் பார்வையிட்டபோது இந்த அதிர்ச்சிகளை உணர முடிந்தது. முன்பெல்லாம் அசிங்கங்களையும், தனிநபர் தாக்குதல்களையும் ரசிப்பவர்கள் ஒட்டுக் குழுக்களின் இணையத் தளங்களைப் பார்த்தோ, ரி.பி.சி. போன்ற வானொலிகளையோ கேட்டோ தங்கள் வக்கிரகங்களைத் தணித்துக் கொள்வார்கள். தற்போது அந்தப் பஞ்சங்கள் போக்க இப்படியான புதிய இணையத்தளங்களும் செய்தி வக்கிரகாரர்களுக்கு நிறையவே தீனி போட்டு வருகின்றன.தவறு செய்பவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல, தவறைத் தட்டிக் கேட்கும், திருத்தும் கடமையிலிருக்கும், தகுதியிலிருக்கும் அனைவரும் தமக்கான கடமைகளை நிறைவேற்றத் தவறுவார்களானால் அவர்களும் குற்றவாளிகளே. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிக் கணங்கள் வரை உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தேசிய ஊடகமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த 'தமிழ்நாதம்', 'புதினம்' போன்ற ஊடகங்கள் பின்னால் ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள் காரணமாக இடை நிறுத்தப்பட்டதில் அதற்குரியவர்கள் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தவர்களாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகின்றது.குறைந்தபட்சம், அதை நேர்மையோடு தமிழ்த் தேசியத்திற்காக செயல்படுத்த விரும்புபவர்களிடமாவது கையளித்து இருக்கலாம் என்ற ஆதங்கம் அத்தனை தமிழர்களிடமும் உள்ளது. ஊடகம் ஒன்று உருவாகுவதற்கு ஒருவர் அல்லது சிலர் காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அது மக்களிடம் சென்றடைந்த பின்னர் அது மக்கள் பயன்பாட்டிற்கான மக்கள் சொத்தாகவே நோக்கப்பட வேண்டும். அதைத் தடுக்கும், நிறுத்தும் முடிவுகளை எடுக்குமுன்னர் மக்கள் அபிப்பிராயங்களையும் கேட்டே முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை இது சம்மந்தப்பட்ட அனைவரும் உணர்வார்கள் என்றே நம்புகின்றோம்.'தமிழ்நாதம்', 'புதினம்' இணையத்தளங்களின் மூடுவிழாவிற்குப் பின்னர், ரஷ்யா சிதறுண்டு போனபின்னர் உலகின் கேள்வி கேட்க முடியாத சக்தியாக அமெரிக்கா வளர்ந்தது போலவே 'லங்காசிறி' இணையத்தளமும் ஏகபோக உரிமையுடன் பெரு வளர்ச்சி கண்டது. அபாரமான அதன் வளர்ச்சி தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய கவர்ச்சி அதன் செய்திகளின் நடுநிலையிலும் வெளிப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்நின்று செய்திகளை வழங்கி ஈழத் தமிழர்களின் இதயங்களையும் வென்றெடுத்தது.அதன் அபரிதமான வளர்ச்சிக்கு கண்திருஷ்டி வந்தது போலவே, சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கே வந்துள்ளது. 'லங்காசிறி' இணையத்தளம் இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய உறவுமுறை அழுத்தம் அதன் நடுநிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதன் இயக்குனரின் சகோதரரான சிவஞானம் சிறிதரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் பக்கசார்பு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.புலம்பெயர் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் வழங்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலை குறித்த விசனக் கட்டுரைகள் 'லங்காசிறி' இணையத்தளத்தால் திட்டமிட்டு தணிக்கை செய்யப்படுகிறது. பிரசுரமாகாமல் தடுக்கப்படுகிறது. இது ஊடக தர்மம் என்று அந்த இணையத்தளம் கருதுமானால் காலம் அதனைத் தண்டிக்கும் என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அவலப்பட்டு, நொந்துபோயுள்ள ஈழத் தமிழ் மக்களை உறவின் பெயரால் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வது அபாயகரமானது. நியாயமான அச்சங்கள் தீர்க்கப்பட வேண்டும். கேள்விகளுக்குப் பதில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.அதை விடுத்து அச்சங்களையும், கேள்விகளையும் மறைத்து விடுவது, அந்த நீதிக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இணையத்தளம்அந்தமக்கள் மத்தியில் இயல்பாகவே உருவாகிவிடும். இது தனி நபர்கள் மீதான குற்றச்சாட்டு என்றோ, அச்சுறுத்தல் என்றோ உதாசீனம் செய்யாமல் ஊடக தர்மத்தோடு சீர் செய்ய வேண்டியது அனைத்து ஊடகங்களின் கடமை என்பதால் இந்தக் கட்டுரை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது.இந்தத் தகவல்களை மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களானால், தமிழ் ஊடகங்களைத் தூய்மைப்படுத்தும் பணியின் பயன் உங்களுக்கும் வந்து சேரும்.«நாங்கள் வீழ மாட்டோம்! நீங்கள் வீழ விடவும் மாட்டோம்!!»அன்புடன்சி. பாலச்சந்திரன்ஆசிரியர் - ஈழநாடுதமிழ்த்தேசியம் "தமிழ்வின்" இன் குடும்ப சொத்தாதமிழ்வின் தளம் நியாயமாகச் செயற்படுகின்றதா?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊடகத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தேகப்படுவர்களின் அணி வகுப்பு, தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த ஈழத்தமிழர்கள் என்று எத்தனையோ வழிகளில் தங்களுடைய பார்வையை புலனாய்வு குழுவினர் செலுத்தினாலும் எந்த ...மேலும் வாசிக்க
ஊடகத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தேகப்படுவர்களின் அணி வகுப்பு, தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த ஈழத்தமிழர்கள் என்று எத்தனையோ வழிகளில் தங்களுடைய பார்வையை புலனாய்வு குழுவினர் செலுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.  மொத்த வலைபின்னலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் இறங்கிய இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கரை இறங்கிய நாகபட்டிணம் வந்து

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து அடையாளங்களையும் இல்லாது செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக உயர் மட்ட அரசாங்க தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ...மேலும் வாசிக்க

வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து அடையாளங்களையும் இல்லாது செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக உயர் மட்ட அரசாங்க தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

எதிர்வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று வடக்கில் செயற்பட்டதற்கான அடையாளமே இல்லாது செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டிடங்கள் மற்றும் இருப்பிடங்கள் குறிப்பாக தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இல்லம் என்பன தற்போது மக்களால் அதிகம் விரும்பி பார்க்கும் சுற்றுலாப்பகுதியாக மாறி வருவதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்வாறு விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் சுற்றுலாத்தளமாக பேணப்படுவதனை விரும்பாத சிறிலங்கா அரசாங்கம் அவற்றை அழித்து வருகின்றது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கட்டிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அங்கு பாரிய விடுதிகளை நிர்மாணிக்க நடைவடிக்கை எடுக்கப்படுகிறது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை ...மேலும் வாசிக்க

17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை என்கின்ற செய்தியை பெரிதுபடுத்தி இருந்தது. வெறும் சுவரொட்டி மட்டும் பார்த்த பல நண்பர்கள் செல்லிடப் பேசியில் அழைத்து, உண்மையா என விசாரிக்கத் தொடங்கினார்கள். அது உண்மை இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அந்த மாலை நாளிதழில் நான்கு பத்திற்கு வந்திருந்த அந்த செய்தி, இலங்கை அரசு அறிவித்ததாக சொல்லியிருந்தது. பொட்டு அம்மான் பிரபாகரனின் அடுத்தநிலை தலைவராக இருப்பதாகவும், அவர் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாகவும், பிரபாகரன் குறித்து புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்தப் பின்னரும், பொட்டு அம்மான் குறித்து அவர்கள் எவ்வித செய்தியும் சொல்லாதது தமக்கு ஒரு ஐயப்பாட்டை உருவாக்குவதாகவும் அந்த செய்தி விளக்கியிருந்தது.

பொட்டு அம்மானை குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாததால் பன்னாட்டு காவல் துறையினர் மீண்டுமாய் பொட்டு அம்மானை தேடுவோர் பட்டியலில் வைத்திருப்பதாகவும் அந்த செய்தி கூறியிருந்தது. இது பல்வேறு இணையத் தளங்களில் வந்திருந்த செய்தியின் அடிப்படையில் பத்திரிக்கையின் விற்பனையை மையப்படுத்தி இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான தன்மையை இந்த பத்திரிக்கை கையாண்டு இருந்தது, ஊடகத்தின் மேல் இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும் சிதைவடைய செய்வதாகவே இருக்கிறது. காரணம், பொதுவாக ஊடகங்கள் தமக்கு விளம்பரம் தருபவர்களின் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்கின்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இந்த செய்தியின் இறுதியில் இதன்மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று செய்தி நிறைவடைகிறது.

நமது சிந்தனையெல்லாம் இதுதான். இந்த செய்தியின் ஆரம்பத்தில் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்ற தலைப்பிட்டு இருக்கலாமே? ஏன் இந்நிலையே அவ்வூடகம் எடுக்கவில்லை என்பது. இதே நிலைப்பாட்டைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கள பேரினவாத அரசு எடுத்திருந்தது. ஊடகத்தை தமது கரங்களுக்குள் மூடி மறைத்து, அதன் விரல் இடுக்கிலிருந்து வெளிவரும் வெளிச்சமே உண்மை என்ற ஒரு பொய் தோற்றத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியிருந்தது. இதைத் தான் உலக மக்கள் அனைவரும் நம்ப வேண்டும் என்று அது உறுதியாக இருந்தது. இத்தனை காலத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் சிங்கள அரசு செய்யும் அதே தவறை, தாம் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊடகதர்மமும் செய்கிறதே? ஏன்? என்று நமக்கு விளங்கவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது.

இன்று ஊடகம் என்பது ஒருசிலரின் அடிப்படை பொருளாதாரத்திற்கான ஒரு சமன்படுத்தப்பட்ட, நிலைத்தன்மை வாய்ந்த கட்டமைப்பாக மாறிவிட்டது. இது மக்கள் நல்வாழ்விற்கான அல்லது இச்சமூக மாற்றத்திற்கான தன்மை வாய்ந்ததாக இல்லை. மாறாக இது முற்றிலுமாய் தமது சொந்த நலனுக்காக, பொருளீட்டுவதற்காகச் செய்யப்படும் தொழிலாக மாறிவிட்டது. இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு நிகழ்த்திய பல்வேறு பேயாட்டங்கள், பலருக்கு பல எச்சரிக்கையும், உயிர் பயத்தையும் தந்து கொண்டிருந்தது. இந்த நிலைகளுக்கெல்லாம் காரணமாக அந்த அரசின் அதிகார மையத்திலிருந்த சிலர் தமது இனவெறியின் அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது தான்.

அவர்கள் தமது இன அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக வேறொரு இனத்தின் இறையாண்மையை நசுக்கி, ரத்தத்தை உறிஞ்ச பெரும் முயற்சி எடுத்தார்கள். இன்று உலக நாடுகளின் முன்னிலையில், சொந்த நாட்டு மக்களின் முன்னிலையில், ஹிட்லரைவிட மோசமானவன் ராஜபக்சே என்று சரத்பொன்சேக கூறியதாக செய்திகள் வருகிறது. இதைத்தான் நாம் தொடர்ந்து கூறி வந்தோம். இப்போதும் கூறுகிறோம். ஆனால் நாம் சொன்ன எதையுமே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று எதை விதைத்தார்களோ, அதை அறுவடை செய்கிறார்கள். எதை அவர்கள் செய்ய நினைத்தார்களோ அது அவர்களுக்கே கிடைத்திருக்கிறது.

சரத்பொன்சேகவின் மனைவி ஒவ்வொரு முறையும் மக்களை சந்திக்கும்போது அழுகிறார், ஆத்திரப்படுகிறார். ஆனால் ராஜபக்சேவின் கொடுங்கரங்களிலிருந்து சரத்பொன்சேகவை அவரால் மீட்க முடியவில்லை. அவர் உயிரோடு திரும்பி வருவாரா? என்கிற சந்தேகத்தை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்க்கிறார். இன்றைய இலங்கையின் அரசு சூழலில் புலிகளின் அமைப்பில், அரசியல் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சி பிளவுபட்டு பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. இது மகிந்தாவிற்கு மகிழ்ச்சியான செய்தி. தமிழர்கள் பிளவுபட்டிருப்பது எப்போதும் கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். அதே மகிழ்ச்சியில்தான் இப்போது மகிந்தாவும் இருப்பார். ஆனால் இது நீண்டநாளிற்கு நீடிக்காது. நீ என்ன நினைக்கிறாயோ, அதுதான் உனக்கும் நடக்கும் என்பதற்கு ஒரு கதை இருக்கிறது.

ஒரு ஊரில் சாமியார் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் ”செய்தார் வினை செய்தாருக்கே” என்று கூறிக் கொண்டு திரிவார். அந்த ஊரிலே ஒரு பெரும் கொடுமைக்காரி வாழ்ந்து வந்தாள். இந்த சாமியார் (நீங்கள் பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்களை நினைத்துக் கொள்ளாதீர்கள்) தொடர்ந்து நமக்கெதிராகவே தகவல்கள் சொல்கிறாரே, இவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வாய்ப்பு அமையாதா? என்று அவர் தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சாமியார், நமது சாமியார்களைப் போல பெரும் மாளிகை கட்டி அதற்கு ஆசிரமங்கள் எனப் பெயர் சூட்டி, வளமாக வாழ்ந்து கொண்டிருப்பவரல்ல. வீடு வீடாகச் சென்று பிச்சைக் கேட்டு, அதை வாங்கி சாப்பிட்டு தமது வாழ்வை நடத்திக் கொண்டு வந்தவர்.

அந்த சாமியாரை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த கொடுமைக்காரி, ஒருநாள் சமையல் செய்து முடித்தப் பிறகு கொஞ்சம் சோற்றை எடுத்து அதில் நஞ்சைக் கலந்து, புளிக்கரைசலுடன் அந்த நஞ்சு சோற்றை பிணைந்து, ஒரு துணியில் போட்டு கட்டுச் சோற்றைப் போல் கட்டி வைத்தாள். நஞ்சு கலந்த அந்த சோறு எப்படியாவது சாமியாரிடம் செல்ல வேண்டும், அதை சாமியார் சாப்பிட்டு சாக வேண்டும் என்பது அந்தக் கொடுமைக்காரியின் திட்டமாக இருந்தது. அவள் நினைத்ததைப் போலவே சாமியார் அவள் வீட்டிற்கு பிச்சைக் கேட்டு வந்தார். சாமியாருக்கு அவள் அந்த கட்டுச் சோற்றை எடுத்துக் கொடுத்து, சுவாமி நீங்கள் வேறு யார் வீட்டிலும் சாப்பிட வேண்டாம். நான் கொடுக்கும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்கள் என்றுகூறி அந்த கட்டுச் சோற்றை சாமியாரிடம் எடுத்துக் கொடுத்தாள்.

சாமியாரும் அந்த கட்டுச் சோற்றை கையிலே சுமந்து கொண்டு காட்டுப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறலாமே என்று நினைத்து அந்த கட்டுச் சோற்றை மரத்தின் ஒரு கிளையில் கட்டி வைத்துவிட்டு அவர் மரத்தடியில் கன்னயர்ந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வழிப்போக்கன் சாமியாருக்கு அருகில் வந்தான். இந்த சலசலப்பைக் கேட்டு கண்விழித்த சாமியார், என்ன என்று அந்த வழிப்போக்கனிடம் வினவினார். அந்த வழிப்போக்கன் ஐயா, நான் தொலைதூரத்திலிருந்து நடந்து வருகிறேன். தாகமாக இருக்கிறது, பசி மயக்கம் வேறு கால்களைத் தள்ளாட வைக்கிறது. இங்கே தண்ணீர் இருக்குமா என்று கேட்டான். சாமியார் அவனிடம் சரி, நீ அருகிலிருக்கும் புங்கமரத்தின் அருகில் ஒரு கேணி இருக்கிறது. அதன் அருகிலேயே கயிறும் வாளியும் இருக்கும். நீ அங்கே தண்ணீர் முகர்ந்து அருந்திக் கொள் என்று சொன்னார்.

மேலும் அந்த வழிப்போக்கனிடம் அந்த கட்டுச் சோற்றை எடுத்துக் கொடுத்து, தாகம் தீர்ந்ததும் இந்த சோற்றை சாப்பிட்டு பசியாறிக் கொள் என்று சொல்லி அனுப்பினார். வழிப்போக்கன், சாமியார் சொன்னவாரே கிணற்றிலிருந்து தண்ணீர் முகர்ந்து தாகம் தீரக் குடித்த பின்னர், சோற்றை எடுத்து சாப்பிட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த சோற்றிற்குள் இருந்த நஞ்சு வேலைசெய்யத் தொடங்கியது. அவன் சத்தம்போட்டு கீழே விழுந்தான். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த சாமியார், அவன் நாடியைப் பிடித்துப் பார்த்தார். அவன் நஞ்சு அருந்தியது தெரிந்ததும், தம்மிடமிருந்து நஞ்சு முறிவு சாற்றை எடுத்து அவனுக்குக் கொடுத்து அவனை குணப்படுத்தினார். மேலும், அந்த வழிப்போக்கனிடம் ஐயா, அந்த கட்டுச் சோற்றை கிராமத்திலுள்ள ஒரு பெண்மணி தான் எனக்குக் கொடுத்தார். ஆகவே அதில் நஞ்சு கலந்திருப்பது அறியாமலேயே அதை தாங்களுக்கு நான் கொடுத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். அந்த வழிப்போக்கனோ, உங்களுக்கு தெரியாமல் செய்த தவறுக்காக

மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனால் உயிர் போய்விடும் என்று பயந்திருந்த வேளையில், என் உயிரை காப்பாற்றியதால் உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். இன்று இரவு என் வீட்டிற்கு தாங்கள் உணவு அருந்த வரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார். சாமியாரும், வழிப்போக்கனும் கிராமத்தை அடைந்தார்கள். கிராமத்தில் சாமியாருக்கு அந்த விஷ சோற்றை கொடுத்த அந்த வீட்டிற்கே இருவரும் வந்தார்கள். சாமியார் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அந்த வழிப்போக்கன் வீட்டிலிருந்த அந்த பெண்மணியை அழைத்து இவள் தான் என் மனைவி என்று அறிமுகம் செய்து வைத்ததோடு, தமது வழிப்பாதையில் ஏற்பட்ட அனைத்து செய்திகளையும் சொல்லி முடித்தார்.

இதைக் கேட்ட அவரது மனைவி மிகவும் வருந்தி, ஐயோ! தாம் தவறு செய்து விட்டோமே என்று சாமியாரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் சாமியாரோ அதைப் பொருட்படுத்தாமல் மீண்டுமாய் ”செய்தார் வினை செய்தாருக்கே” என்றுகூறி தமது பணியை தொடர்ந்தார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சோக ஒரு முட்டாள் என சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். “சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்”  இதழுக்கு வழங்கிய ...மேலும் வாசிக்க

முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சோக ஒரு முட்டாள் என சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். “சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்”  இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் சிறிலங்கா அரசதலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசிப்பதற்கு எந்த தயார் நிலையையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ம் திகதி தம்மை சந்தித்த சரத் பொன்சேகாவிடம், அரசியல் ஆர்வம் குறித்து தாம் விசாரித்ததாக சிறிலங்கா அரசதலைவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதன் போது சரத் பொன்சேகா அப்படியான ஒரு மனநிலை தமக்கு இல்லை என தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், சரத் பொன்சேகா தம்மை இறுதியாக சந்தித்த போதும், இது குறித்து தம்மிடம் எதனையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தாம் சரத் பொன்சேகாவுக்கு அறிவுரை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஒரு இராணுவம் இல்லை, இராணுவத்தில் கட்டளை இடும் போது, அதன் படி இராணுவத்தினர் நடப்பர், ஆனால் அரசியலில் இடப்படும் கட்டளைகளுக்கு மாற்று செயற்பாடுகளே காணப்படும் என தாம் சரத் பொன்சேகாவுக்கு தெரிவித்ததாக, சிறிலங்கா அரசதலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சரத் பொன்சேகா அதனை கேட்காது, அவசரப்பட்டு, முட்டாள்தனமாக செயல்பட்டுவிட்டதாக சிறிலங்கா அரசதலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்கா அரசதலைவர், இது பிரித்தானிய சட்டம் எனவும், அவர்களே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அதனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போது, ஆயிரக்கணக்கானவர்களை, இராணுவ நீதிமன்றில் நிறுத்தி உள்ளார், இந்த எண்ணிக்கை 8500 ஆக அதிகரித்த போது அவர்களை விடுவிக்குமாறு தாம் சரத் பொன்சேகாவிடம் கோரியதாக சிறிலங்கா அரசதலைவர் கூறியுள்ளார்.

தற்போது சட்ட ரீதியான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எல்லா விடயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் சிறிலங்கா அரசதலைவர் குறிப்பிட்டுள்ளார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் ...மேலும் வாசிக்க

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான கனடிய செயற்பாட்டுக் குழுவினால் தமிழ் ஸ்ரார் வானொலியூடாக நடத்தப்படும் தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசைக் கண்டு எவரும் அஞ்சுவதற்கும், ஐயுறுவதற்கும் ஒன்றும் இல்லை, நாடு கடந்த அரசானது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிச் செயற்படுகிறது. அங்கே மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. (Transnational goverment is trasparent ) என்று கூறும்படியாக நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருப்பது காத்திரமான விடயம் எனவும் ஈழவேந்தன் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசை உருவாக்குகின்றபோது மதியுரைக்குழுவின் உடனடிக் கவனம் முழுவதும் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதோடு நிற்காமல் முள்வேலிகளுக்குள் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் இருப்பதானது, இன்றைய யதார்த்தத்துடன் நாடு கடந்த அரசு உருவாக்கக் குழு செயற்படுவதை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இலங்கையில் நாம் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தும் வாய்ப்பு இல்லை, ஆகவே வெளியுலகில்தான் இதனைச் செய்ய முடியும். எங்கெங்கெல்லாம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளின் மக்களுடைய ஆதரவுடன் தான் இதனைச் செய்ய வேண்டும்.

மேலும் நாடு கடந்த அரசானது ஜனநாயக அடிப்படையில் இயங்குவதனால் எந்த ஒரு நாடும் எமக்குத் தடையாக இருக்க முடியாது, இதை நாம் முறையாக செயற்படுத்தினால் ஒரு இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் சிந்தனைக்குரியதாகவும், வந்தனைக்குரியதாகவும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எம் தமிழீழ தேசம் மலரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படையானது அதனை சரியாக நடைமுறைப்படுத்தினால் ஜனநாயக வழியில் தமிழீழம் பிறக்கும். ஐ.நா. சபையில் எமது கொடி பறக்கும் என்றும் ஈழவேந்தன் தெரிவித்தார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய ...மேலும் வாசிக்க

சிறிலங்கா அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசாதாரண குழந்தை என்கின்ற தவறான தகவல் வழங்கப்பட்டு கர்ப்பிணித் தாய்கள் நம்பவைக்கப்பட்டு கபடத்தனமான கருக்கலைப்பு நடந்து வருதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவலை உறுதிசெய்கின்றது.

மேலும் இளம்பெண்கள் கருத்தடை செய்துகொண்டால் நிவாரணம் சலுகைகள் வழங்குவதாகவும் ஏமாற்றப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றதாகவும், நாளொன்றுக்கு 12 பெண்கள் இந்த ஏமாற்று குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துறை சார் தகவல் தரவல்ல அதிகாரிகள் வாயிலாக அறியமுடிகின்றது.

இதுவரையில் சுமார் 480 பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

சிறிலங்கா அரசின் இந்த இன அழிப்பு நடைவடிக்கைக்கு Populations Sewa Lanka  எனப்படும் நிறுவனம் Population control எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஆதரவளித்து வருவதாகவும், மேற்படி நிறுவனமே தனது தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி சலுகைகளை ஆசை காட்டி பட்டினியால் வாடுகின்ற ஏழைத் தாய்மாரை இன அழிப்பின் நவீன வடிவ செயற்திட்டத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அறியமுடிகின்றது.

எனவே தொண்டு நிறுவனங்கள் எனும் போர்வையில் செயல்படும் அரச நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மீது  தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அத்தியாவசியமாகின்றது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ஈழம் செய்திகள்










 
சூடான இடுகைகள்
















முக்காட்டு தேவதைகள்


எம்.ரிஷான் ஷெரீப்