

காலம்: 08-02-2010 இரவு 10 மணி, இடம்: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு. பாத்திரங்கள்: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.ஆகியவை சரத் புரிந்த குற்றங்களாக தெரிவிக்கப் பட்டது. அதை எதிர்த்து உரையாடி கைது செய்யப்பட மறுத்தமையால் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டார்.இலங்கை இந்தியப் போர்குற்றங்களின் மிகமுக்கிய சாட்சியம்.பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கையில் நடந்த மோசமான போர்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இந்தியப் படைகளிற்கு எதிரான சாட்சியாக திகழ்பவர் சரத் பொன்சேக்கா. அது தொடர்பாக அண்மைக் காலங்களாக சரத் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தச் சாட்சியை இல்லாதொழிக்க முதலில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடிய பின்னர் சரத் பொன்சேக்காவைக் கைதுசெய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத்தின் கைதத் தொடர்ந்து வரும் பன்னாட்டு அழுத்தங்களைச் சமாளிக்கவே மஹிந்த ராஜபக்ச இரசியாவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி இந்தியா ஆலோசனை தெரிவித்ததாகவும் செய்திகள் மேலும் கூறுகின்றன.சிங்க படையணிசரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சிங்கப் படையணியைக் கலைத்த பின்னரே அவரைக் கைதுசெய்வதாக அரசு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் அவர் அதற்கு முன் போர்குற்றங்கள் சம்பந்தமாக பகிரங்கப் படுத்தலாம் என்று அஞ்சியே அவசரக் கைது நடந்தேறியது.அழும் அமெரிக்கா! கதறும் ஐநாவின் நைனா!சரத் கைதுசெய்யப்பட்டதால் சிங்களம் இரண்டாகப் பிளந்து விடுமோ என்று தாம் அஞ்சுவதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது:"There is a tremendous need for the government of Sri Lanka to work to overcome the fissures that exist within its society. It has to be very cautious that any actions it takes are designed to heal the split within Sri Lankan society, not to exacerbate it".ஐக்கிய நாடுகள் சபைச் செயலர் வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாதென்றார். இதுவரை கொழும்பில் வன்முறைகள் ஏதும் இடம்பெறவில்லை.கைதுக்குப் பின்னால்சரத் பொன்சேக்காவின் கைதின் நோக்கங்களில் பழிவாங்கலும் போர்குற்ற மறைப்பும்தான் முக்கியமானவை. இலங்கை அரசு சரத் ஆதரவாளகளின் எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அவரின் கைதிற்கு எதிரான செயற்பாடுக்ளுக்கு உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரவிருந்த எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளும் அரசு தரப்பு கனகச்சிதமாக மேற்கொண்டுவிட்டது.பகிரங்க விசாரணையில் பகிரங்கமாகும் உண்மைகள்.கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும். சரத் பொன்சேக்காவிற்கு எதிராக பகிரங்க விசாரணை நடத்தப்பட்டால் பல உணமைகள் வெளிவரும். இதை மறைக்க இராணுவ இரகசியங்கள் வெளிவரும் என்ற காரணம் காட்டி அரசு தரப்பு இரகசிய இராணுவ நீதிமன்றில் சரத்தை விசாரிக்கும் சாத்தியம் உண்டு. அதற்கு சட்டத்தில் இடமில்லாவிடில் சட்டத்தை அரசு மாற்றி அமைக்கலாம். சரத் பொன்சேக்கா ராஜபக்ச சாகோதரர்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைக்க ஒரு பகிரங்க மேடைக்குக் காத்திருக்கிறார் என்பது அவர் நேற்றுக் கைது செய்யப்படமுன்னர் வெளிவிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.சரத் பொன்சேக்காவிற்கு மரணம் சம்பவிக்குமா?சரத் பொன்சேக்கா என்று ஒருவர் உயிருடன் இருக்கும்வரை போர் குற்ற உண்மைகளை மூடி மறைக்க முடியாது. அவர் மீதான குற்றத்திற்கு ஆகக் கூடிய தண்டனை ஆயுள் சிறைத் தண்டனை மட்டுமே. அவரைத் தடுத்து வைத்திருக்கும் சிறைக்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அவருக்கு மரணம் சம்பவிக்கச் செய்யும் சாத்தியம் உண்டு.ஐநாவின் பொய்நா கொண்ட நைனாமௌனமாக இருப்பாரா?அண்மையில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப் படமாட்டாது என்று கூறிய போது அமெரிக்கப் பேராசிரியர் பொய்ல் அவர்கள் ஒரு போர் குற்றம் நடந்த நாட்டில் போர்குற்ற விசாரணை நடக்காத போது ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். நேற்று சரத் பொன்சேக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்களை எங்கு வேண்டுமானாலும் தெரிவிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த பின் அவரை விசாரிக்கும் கடப்பாடு ஐநாவிற்கு உண்டு. அதை ஐநாவின் பொய்நா கொண்ட நைனா செய்வாரா?


மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரனையில் வெளிபடுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகர. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகரவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர் குற்றம் மிகப் பாரியது.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


காடு மலைகளின் அடிமடி ஆழத்தில், தங்கம்-வைரம்-பாக்சைட்- செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு ...

காடு மலைகளின் அடிமடி ஆழத்தில், தங்கம்-வைரம்-பாக்சைட்- செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் ! எல்லா வளமும் அள்ளி எடுக்குது டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால் தரகு முதலாளிக் கும்பல்களும் போஸ்கோ, லபார்க், வேதாந்தா அன்னிய முதலாளிகளும் !
ஒரு டன் இரும்பு உலகச் சந்தையில் 10,000 ரூபாய் ! முதலாளிகளுக்கு அரசு விற்பதோ 27 ரூபாய் !
சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம் உலகச் சந்தையில் ஏலம் போகுது ! பத்து, நூறு, ஆயிரம் அல்ல, லட்சம் ஏக்கர் பறிபோகுது ! கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !
இந்தியாவின் மானம் காக்க மண் காக்க போராடும் உழைக்கும் மக்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ ! பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’ மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’ வேட்டைகள் தொடர அனுமதியோம் !
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் ! பன்னாட்டு கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள தேசத்துரோக ஒப்பந்தங்களை கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
உண்மை என்ன, உண்மை என்ன ? மண்ணைப்பறிக்கும் மறுகாலனியத்திற்கு எதிராய் மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் ! மக்களை அடக்கி ஒடுக்கி மண்ணை விற்குது இந்திய அரசு ! இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !
ஒரு லட்சம் இராணுவத்தை சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும் தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே இந்திய அரசு போரை நடத்துது !
பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் ! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !
பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால் மீண்டும் ஒரு சுதந்திரப் போரை உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !
நேற்று வரை ‘சல்வாஜீடும்’ இன்று முதல் ‘காட்டுவேட்டை’ 700 கிராமங்கள் எரிப்பு, 3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு, 50,000 மக்கள் முகாம் சிறைகளில்.
இனியும் பொறுக்கப் போகிறோமா ? சும்மா இருக்கப் போகிறோமா ?
மாபெரும் பொதுக்கூட்டம் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
தொடர்புடைய இடுகைகள் :
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.அனைவரும் வாருங்கள்
இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்
தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!
இன்றைய சூழலில் உங்களால் நடுநிலை வகிக்க முடியுமா ? அருந்ததிராய் எழுப்பும் கேள்வி!
இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!
ஆப்ரேஷன் கிரீன் ஹன்ட்டை அம்பலமாக்கும் கருத்தரங்கம் சென்னையில்.


தேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது!
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


* பிரபல எழுத்தாளரும் சக பதிவருமான திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரை யுடன் இணைந்து பதிவுலகத்திலிருந்து தொகுத்து, ...





சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர் கண்டி ...



முத்துக்குமார் ஷோக்குகளும் ஷேக்குகளும்
பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள். இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.
“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.
தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள் வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //
// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று. கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை.
முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில் கொள்கைகளோடு அவனும் எரிக்கப்பட்டான்.
வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா? ஷோக்குகளும் ஷேக்குகளும்
முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.// புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும் ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள். போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//
நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான் “என்உடலை ஆயுதமாக்குங்கள்” அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.
// புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.
செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?
// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?
போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத “கடவுள்” தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின் நல்ல மண்டையில் உதித்தது.
எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.
//
//
Tagged: இனவாதிகள், ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், நக்சல்பாரி, பி.ஜே, பேக்குகள், ம க இ க, முத்துக்குமார், விடுதைப்புலிகள், ஷேக்குகள்



இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் ...

இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமேஇப்பகுதிபயணிக்கும்எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.
இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘சிங்கபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.
பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.
நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.
இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘சிங்கபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சிங்கபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். சிங்கபுர மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த சிங்கபுர மீதான தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் சிங்கபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.
தொடரும்...


சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் என, முன்னாள் ...

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பகல் தெரிவித்திருந்திருந்த நிலையில், இராணுவக் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.தொடர்ந்து வாசிக்க




இதை நாம் வலைப்பூவிற்கு மாற்றியிருக்கின்றோம் அது கீழே
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.
தமிழ் வடமொழிகருங்குழலி கிருஸ்ணவேணிகாரரசி கிருஸ்ணராணிகாரரசன் கிருஸ்ணராசாபொன்னடியான் கனகதாஸ்ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.
CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்DR. LE. DE. FOREST - (FOREST - காடு)FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)பழம் பெரும் பொருளியலறிஞர்.GARY BECKER - (BECK - மலையருவி)1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.SIR RICHARD STONE - (STONE - கல்)1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.FREDERICK NORTH - (NORTH - வடக்கு)இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.)(COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.DR. LIAM FOX - (FOX - நரி)இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.மேலும் சில பெயர்கள் :-ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDERபொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.- தமிழ் வளர்ச்சிக் கழகம் -[23 - 06 - 1997]
காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது

இலங்கை சுதந்திரம் பெற்ற 62 ஆவது ஆண்டு நிறைவை சிங்கள தேசம் கண்டியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. இலங்கையின் வட – கிழக்கு மாகாணங்களை சிங்களப் பேரினவாத அரசு தனது மேலாண்மைக்குள் வேகமாகக் கொண்டு வருகிறது. இலங்கைத் தீவின் வரலாற்றில் அது என்றுமே ஒரு நாடாக, ஒரே அரசாக இருந்தில்லை.
இராசரட்டை, உறுகுணரட்டை, மாயரட்டை என இலங்கை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை வெவ்வேறு குறுநில அரசர்கள் ஆண்டார்கள்.
முதலாவது விஜயபாகு, ஆறாவது விக்கிரமபாகு இவர்கள் காலத்திலேயே இலங்கை ஒரு குடைக்குள் ஆளப்பட்டது எனக் கொள்ளலாம். குடியேற்ற நாடுகளில் ஒன்றான போர்த்துக்கேசியர் புயலில் சிக்குண்டு கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கரை தட்டியபோது இலங்கையில் மூன்று அரசுகள் வரையறை செய்யப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தன.
1)தெற்கே கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கோட்டை இராச்சியம்.
2)வடக்கே யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம்.
3)மத்தியில் கண்டியைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராச்சியம்.
யாழ்ப்பாண இராச்சியம்; கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை யாழ்ப்பாண மன்னர்களால் தனிநாடாக ஆளப்பட்டது. அதன் எல்லைகள் புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை விரிந்திருந்தது
ஒல்லாந்தர்; இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.
இலங்கையில் போர்த்துக்கேயரது ஆட்சி 1656 வரை நீடித்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒல்லாந்தருக்குக் கைமாறியது. ஒல்லாந்தரிடம் இருந்து 1796 இல் ஆங்கிலேயர் கைக்கு மாறியது.
1815 இல் மத்தியில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனை ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்து அங்கிருந்து லேலூருக்கு அவனும் அவனது குடும்பமும் அனுப்பி வைக்கப்பட்டனர். 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை மூலம் அந்த இராச்சியம் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்த ஆங்கிலேயர் 1833 இல் நிருவாக வசதிக்காக மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை) ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது செயற்கையாக அய்க்கியப்படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.
ஒன்றுபட்ட இலங்கையில் தங்களை முதலில் இலங்கையர் என்றும் பின்னர் தமிழர் என்றும் கருதிய தமிழர்கள் ஆங்கிலேயரிடம் தங்களது மூதாதையர் போர்முனையில் இழந்த அரசைப் பிரித்துத் தருமாறு கேட்கத் தவறிவிட்டனர்.
சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் போன்றோர் சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக தேசிய இனங்கள் (Founding Nations) என்றே நம்பினார்கள். தங்களைச் சிறுபான்மை இனம் என அவர்கள் நினைக்கவில்லை. கடைசிக் காலத்தில்தான் சிங்களவர்கள் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்ற திரைக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவரச் சதி செய்தார்கள் என்பதையும் தம்மை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள்.
அண்டை நாடான இந்தியாவில் முஸ்லீம் லீக் தலைவர் மொகமது ஜின்னா மாட்டை வழிபடும் இந்துக்களும் மாட்டை அடித்துச் சாப்பிடும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழமுடியாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு வாதாடி பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பிரித்து எடுத்துக் கொண்டணர். 'பிரிட்டிஷ்காரரே வெளியேறுங்கள் ஆனால் முதலில் இந்தியாவைப் பிரித்து விட்டு வெளியேறுங்கள்' என்று ஜின்னாவின் முழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் காதில் போட மறுத்துவிட்டார்கள்.
சோல்பெரி ஆணைக்குழு முன் தோன்றி 50 க்கு 50 க்கு வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதில் சிறுபான்மை இனத்தவர்களது நலன்களைப் பாதுகாக்க சோல்பெரி யாப்பில் விதி 29 சேர்க்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக்கா நிறைவேற்றினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
1947 இல் நடந்த தேர்தலில் மலையக மக்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தார்கள். இதனை சிங்கள இனவாதியான டி.எஸ். சேனநாயக்காவால் செரிக்க முடியவில்லை. இரண்டாவதாக மலையக மக்களின் வாக்குப் பலத்தால் மேலும் 20 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெற்றிருந்ததை சேனநாயக்கா தனது அரசியல் இருப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நினைத்தார்.
1952 இல் நடந்த தேர்தலில் வாக்குரிமை பிடுங்கப்பட்ட மலையக மக்களால் ஒருவரைக் கூட நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போய்விட்டது. அறுபதுகளில் சிறிமா – சாத்திரி உடன்பாட்டின் கீழ் 525,000 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரிக்கவும் தமிழர் எண்ணிக்கை குறையவும் ஏதுவாயிற்று.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எப்படிச் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் மாறியதை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.
இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார்.
1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து அந்த சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வழிகோலினார்.
கிழக்கில் 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலம் கல்லோயா மேம்பாட்டு அவையின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. 1960 இல் அம்பாரை (டிகமடுல்ல) என்ற புதிய தொகுதி சிங்களவர்களுக்கு உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.
எண்பதுகளில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மதுர ஒயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடியேற்றப்பட்டார்கள்.
இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் அல்லை – கந்தளாய் என்ற பாரிய குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.
இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் இனவாரிஙாந மக்கள்தொகை விழுக்காடு மாறத் தொடங்கியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1827-1981 இடையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
இதுபோன்று சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும், சிங்கள மரபணுவில் ஊறியுள்ள இந்த இனவெறியை நாம் இலங்கை அரசுடன் கூடி நின்று செயலாற்றி வெல்லமுடியுமா ? இலங்கை தேசிய நீரோட்டத்தில் கலக்க நினைக்கும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வரலாறுப் பாடம். இனியாவது தெளிவுபெற இது ஏதுவாக அமையும்

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தமிழ்நட்டில் ஆடித் தள்ளுபடி என்று செய்யும் வியாபாரம் இலண்டனில் நீல புள்ளடித் தினம் என்று நடக்கும். கடைகள் சாதாரண விலையிலும் பார்க்கா ...

தமிழ்நட்டில் ஆடித் தள்ளுபடி என்று செய்யும் வியாபாரம் இலண்டனில் நீல புள்ளடித் தினம் என்று நடக்கும். கடைகள் சாதாரண விலையிலும் பார்க்கா அதிக விலை குறித்து முதலில் பொருட்கள விற்பனைக்கு வைக்கும். பின்பு ஒரு வியாழக்கிழமை நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day) என்று அறிவிக்கும். வியாழக்கிழமைகளில்தான் மக்கள் கைகளில் அதிக பணம் இருக்கும். அன்று நீலப் புள்ளடி இட்ட பொருட்கள் வழமையான விலையிலும் பார்க்க 20% அல்லது அதற்கு மேல் குறைத்து விற்கப் படும். அத்தினம் நிறைய விற்பனை நடக்கும். மறுநாள் பொருட்கள் வழமையான விலைக்குத்தான் விற்கப்படும்.இலங்கையிலும் தமிழ் மக்கள் மோசமான கெடுபிடிகளுக்கு 1972இல் இருந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சிங்களவனின் அடக்கு முறைகள் அட்டூழியங்கள் போதாது என்று ராஜீவ் காந்தி என்ற அரசியல் அறிவில்லாதவன் ஒரு சாத்தான் படைகளை அனுப்பி தமிழ் மக்கள் மீது மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். தமிழனுக்கு உதவ இந்தியா இருக்கிறது என்று பயந்து இருந்த சிங்களவன் தமிழனின் மிகமோசமான விரோதி இந்தியாதான் என்பதை உணர்ந்து கொண்டான். காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்த கள்ளக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பேரினவாத ஆரியப் பேயான ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளுக்குப் பிறகு சிங்களவர்கள் தமிழர்கள் மீதான கெடுபிடியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றனர். மூர்க்கமாக தமிழர்கள் சிங்களவன் முறைகளை எதிர்த்தபோது இந்தியா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை வற்புறுத்தி தமிழர்கள் போராட்டம் ஒரு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தச் செய்தது. அதைத் தொடர்ந்து தமிழர்கள் போராட்டத்தை சர்வதேச சமூகம் என்னும் பன்னாட்டு ரவுடிக் கும்பல் ரவுண்டு கட்டித் தாக்கி மழுங்கடித்தது.சிங்களவன் ராஜபக்ச தான் போரில் வென்றதாக மார்தட்டி தேர்தல் களத்தில் இறங்கினான். அவனுக்கு தமிழர்களின் வாக்கு தேவைப்பட்டது. தமிழர்களின் வாக்குகளை வேண்டி ஒரு "ஆடித் தள்ளுபடி" அல்லது "நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day" அறிவித்தான். சில தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு என இருந்த நடமாடும் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன, சோதனைச் சாவடிகள் நீக்கப் பட்டன. தேர்தல் முடிய கெடுபிடிகள் மீண்டும் முன்னரைவிட மோசமாக மேற்கொள்ளப்படுகிறது.தமிழ் மக்கள்மீன்பிடிப்பதற்கான தடை இப்பொது முன்னைவிடமோசமாக அமூல்படுத்தப்படுகிறது.கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள். இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன், உடலங்களை சிறீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பகுதியில் தமிழர்களை மீள் குடியேற்றாமல் தடுக்க செய்த பயமுறுத்தலா? அங்கு சிங்கள மயப் படுத்தி தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் முயற்ச்சியா?யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் சட்டவிரோதமாக தெருக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்வதைத் சுட்டிக்காட்டி எழுதிய பத்திரிகை ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது.
அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?
இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!
எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும், மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி, நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த "கணனி மாயாஜால மன்னராகிய" நீங்கள் இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.
சுதந்திரதினத்திற்கு ஓர் வாரத்திற்கு முன்பாக, தோதல் ஆணையாளர் சுதந்திரமாக பலவற்றை சொன்னார். நடைபெற்ற தேர்தல் சுதந்திரதான தேர்தலல்ல. மக்கள் வாக்காளிக்காத பெட்டிகளையே எண்ணினோம், வெற்றியாக்கினோம். இவ்வெற்றிக்கனி இலங்கை வரலாறில் யாருக்குமே கிடைக்காத அதிஸ்ட வெற்றிதான். இவ்வகையில் மகிந்தா ஓர் பாக்கியசாலியும்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் ...






%20of%20Thinakkural%2017-01-10%20about%20me.jpg)




icon near each post or send an email to