தமிழ்மணம் தேர்தல் 2009
புதுப்பிக்கப்பட்ட நேரம் : March 18, 2010, 5:40 pm
சமீபத்தில் எழுதப்பட்ட தேர்தல் இடுகைகள்


பெண்ணியம் என்பது ஆண்கள் எவ்வாறு பெண்ணைப் பார்க்கிறார்கள் என்பதல்ல. இச்சமூகத்தில் பெண் எவ்வாறு தன்னை உணர்கிறாள் என்பதே. நமது சமூகக் கட்டமைப்பின் படி ஏதோவொரு வகையில் ஆணும் ...மேலும் வாசிக்க
பெண்ணியம் என்பது ஆண்கள் எவ்வாறு பெண்ணைப் பார்க்கிறார்கள் என்பதல்ல. இச்சமூகத்தில் பெண் எவ்வாறு தன்னை உணர்கிறாள் என்பதே. நமது சமூகக் கட்டமைப்பின் படி ஏதோவொரு வகையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். தேவையுடையவர்களாய் இருக்கிறார்கள். பாரதியும் பெண்ணியம் பாடியவன் தான். இன்று பெண்ணியம் பேசும் பலர் பொதுவான சுதந்திரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றனர். பெண்ணியம் பேசும் பெரும்பாண்மையான படைப்புகள் ஆணின் பார்வையில் பெண் எனும் ஒரே அங்கத வர்ணணைக் கோட்பாட்டில் நிர்வாணமாய்ப் பயணிக்க எத்தனிப்பதுடன், புணர்ச்சியையும், பாலியலையும், பெண்ணின் அங்க வர்ணணைகளையும் மட்டுமே பாடிப் பரவசப் படுத்தும் போக்கைக் கையாள்வது வருந்தத் தக்கது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரான்சின் பிரதேசசபைத்தேர்தல் 2010 கடந்த பங்குனி 14ம் திகதி முதற்கட்டமாகவும், எதிர்வரும் 21ம் திகதி 2ம் கட்டமாகவும் நடைபெறுகின்றது. முதற்கட்ட வாக்களிப்பில் ஆளும் கட்சியான UMP ...மேலும் வாசிக்க

பிரான்சின் பிரதேசசபைத்தேர்தல் 2010 கடந்த பங்குனி 14ம் திகதி முதற்கட்டமாகவும், எதிர்வரும் 21ம் திகதி 2ம் கட்டமாகவும் நடைபெறுகின்றது. முதற்கட்ட வாக்களிப்பில் ஆளும் கட்சியான UMP யும், எதிர்கட்சியாக இருந்த PS கட்சியும் முதல் இரண்டம் இடங்களில் இருக்கும் அதேவேளை, ஏனைய பழைய கட்சிகளையும் வென்று மூன்றாவது இடத்தில் பசுமைக்கட்சியினர் (Europe Ecologie) தெரிவாகியுள்ளனர்.

இதில் குறிப்பிட்டு சொல்வதானால் Ile de Franceற்குள் 93 பிரதேசத்தில் போட்டியிட்டவரும் தமிழ் மக்களின் அன்புக்கும், மதிப்புக்கும், நன்றிக்குமுரிய சேவரோன் முதல்வர் Stéphane Gatignon அதிக வாக்குகள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போதைய நிலைப்பாட்டின்படி எதிர்வரும் 21ம் திகதி இறுதி 2ம் கட்ட வாக்களிப்பை மூன்று கட்சிகள் இல் பிரான்சுப் பகுதியில் ஜோன் போல் குசோன் (Jean Paul Huchon) சோசலிச கட்சி (PS) தலைமையில் சிசில் டுவ்லோ (Cécile Duflot) தலைமையிலான பச்சைக் கட்சியும் (Europe Ecologie) பியேர் லோறன்(Pierre Laurent) தலைமையிலான இடதுசாரி முன்னனிக் கட்சியும்(Front de Gauche) இணைந்து கூட்டாக, HUCHON 2010 – LA GAUCHE ET LES ECOLOGISTES RASSEMBLES POUR L’ILE-DE-FRANCE (LUG) என்ற அமைப்பின் பெயரின் கீழ் இணைந்து எதிர்கொள்கின்றன. இதில் குறிப்பிடும்படியாக பசுமைக்கட்சியில் 93 பிரதேசத்தில் போட்டியிட்ட பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும், பேச்சாளரும் மருத்துவக்கல்லூரி மாணவியான செல்வி.கிருசாந்தி சக்திதாசன்( சாலினி) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது தமிழ்மக்கள் நாம் பெருமைப்படவும், மகிழ்ச்சி கொள்ளவுள்ளதாகவும் அமைகின்றது.

முதற்கட்ட வாக்களிப்பில் தனது பசுமைக்கட்சிக்கு வாக்களித்த அனைத்து தமிழ்மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் முதல்வர் அவர்கள் எதிர்வரும் 21ம் திகதி 2ம் கட்ட வாக்களிப்பில் தமது கூட்டுகட்சிகளுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதோடு, தாங்கள் வேலை செய்யும் தளங்களில், பாடசாலைகளில், அயல் வீடுகளில் உள்ள தமிழ் மக்களையும், ஏனைய பல்லின மக்களையும், நண்பர்களையும் இக்கட்சிகளுக்கு வாக்களிக்கச் செய்து தமிழர்கள் நாமும் ஏனைய நாடுகள் போன்று வரலாறு படைக்க முன்வாருங்கள் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

பிரான்சு வாழ் தமிழ் மக்கள் அமைப்புகள்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோரி ஐக்கியதேசியக் கட்சியினால் எழுத்து மூலம் தேர்தல்தலைமை அதிகாரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளார். ...மேலும் வாசிக்க

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோரி ஐக்கியதேசியக் கட்சியினால் எழுத்து மூலம் தேர்தல்தலைமை அதிகாரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான கோரிக்கையினை தேர்தலில் நியமனப் பத்திரம் கையளிக்கும்போது விடுத்திருக்க வேண்டும் எனவும் தற்போது அதனை நடைமுறைபடுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அரச திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் ...மேலும் வாசிக்க

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அரச திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த தபால் மூல வாக்காளர் அட்டைகள் காவல்துறையின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வாக்காளர் அட்டைகள் நேற்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றதேர்தல் தபால் மூல வாக்களிப்பில் 4,15,432பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கனடா தமிழ்ப் படைப்பாளிகள் சங்கம் எனும் பெயரில் நேற்று முன்தினம் (14.03.2010) ரொரன்டோவில் சம்பந்தருக்கு நிதி வசூலித்தார் நக்கீரன் என்றழைக்கப்படும்; திரு.தங்கவேலு ஐயா. ...மேலும் வாசிக்க
கனடா தமிழ்ப் படைப்பாளிகள் சங்கம் எனும் பெயரில் நேற்று முன்தினம் (14.03.2010) ரொரன்டோவில் சம்பந்தருக்கு நிதி வசூலித்தார் நக்கீரன் என்றழைக்கப்படும்; திரு.தங்கவேலு ஐயா.


கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் 100 கனடிய டொலர்கள் அறவிடப்பட்டதாம். இந்தப்பணம் சம்பந்தரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் செலவுக்காக நாட்டுக்கு அனுப்பப்பட போகின்றதாம்.

இது பற்றி ஓர் உணர்வாளர் சங்கதிக்குத் தெரிவித்த கருத்தானது, ‘எங்களது மக்கள் ஒரு வேளைக் கஞ்சிக்கு தவிக்கும் போது இவர்களது தேர்தல் விளம்பரத்துக்கு அப்படித் தேவை என்ன வேண்டி இருக்கிறது? என ஒரு வினாவைத் தொடுத்தார்.

மேலும், நாட்டில் எதிலிகளாக மக்கள் வீதிகளிலும் முகாங்களிலும் அலைகின்ற வேளையில் நக்கீரன் ஐயாவுக்கு தாயக மக்கள் பற்றிய உணர்வு எங்கு போனது? ஒரு வேளைக் கஞ்சிக்காவது எப்போதாவது எவரிடமாவது பேசியிருப்பாரா?

சம்பந்தர் முகாமிலுள்ள மக்களுக்கு என்ன செய்தார்? எத்தனையோ தமிழ் உணர்வாளர்களும் கலைஞர்களும் வதை முகாம்களுள்ளே வதைபடும் நிலையில், அவர்களது விடுதலை குறித்து ஏதாவது முயற்சி எடுத்தாரா?

எத்தனையோ கைக்குழந்தைகள் ஒரு வேளை பாலுக்காக ஏங்குகின்ற நிலையில், அக்குழந்தைகளுடன் எத்தனையோ தாய் மார் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் இவற்றையெல்லாம் சம்பந்தரும், நக்கீரர் ஐயாவும் சிந்திப்பார்களா?' என பல கேள்விகளை தொடுத்தார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விட்டதைப் பிடிக்க துடிக்கும் பாமக-பாடம் கற்குமா அதிமுக? ஒரே ஒரு தோல்விதான். ஆனாலும் இமயமலையே கவிழ்ந்து போனதைப் போன்ற ஒரு பெரும் ...மேலும் வாசிக்க

விட்டதைப் பிடிக்க துடிக்கும் பாமக-பாடம் கற்குமா அதிமுக?

ஒரே ஒரு தோல்விதான். ஆனாலும் இமயமலையே கவிழ்ந்து போனதைப் போன்ற ஒரு பெரும் கவலையுடன், இழந்த செல்வாக்கை மீண்டும் பறிக்கும் நோக்கில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பாமகவின் வைராக்கியம் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பென்னாகரம் இடைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு இன்னொரு இடைத் தேர்தல். எதிர்க்கட்சியான அதிமுக வோ, தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியே தென்படாமல் சோம்பிப் போய்க் கிடக்கிறது. ஆனால் அனைவரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்திருப்பது பாமகதான்.
கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் ரேஞ்சுக்கு படு வேகமாக செயல்பட்டு வருவது பாமக மட்டுமே.

பாமகவின் இந்த சுறுசுறுப்பான, மின்னல் வேக பணிகள் வியக்க வைத்துள்ளது. இழந்த பெருமையை தட்டி எழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இதையடுத்து எப்படி வந்தது இந்தத் தோல்வி, எங்கே போனார்கள் நமக்காக வாக்களித்து வந்த வன்னியர்கள் என்ற கேள்விகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள், ஊர் ஊராகப் போய் மக்களின் கருத்தை அறிவது என தீவிரமாக இறங்கினார் ராமதாஸ்.

இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தல் வந்துவிட தனது இழந்த செல்வாக்கை நிலைநாட்ட படு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதியின் முக்கிய வாக்கு வங்கியே வன்னியர்கள்தான். எனவே இங்கு வெற்றி பெற்றால் தான் அடுத்த தேர்தலில் திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணியில் சேர்ப்பார்கள் இல்லாவிட்டால், அதோ கதி தான் என்பதை ராமதாஸ் தெளிவாகவே உணர்ந்துள்ளார்.

பாமகவின் எதிர்காலமே இந்த இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்தது தான் என்பதால் அக் கட்சியினரும் படு வேகமாக உள்ளனர்.
வெற்றி அல்லது குறைந்தபட்சம் 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற இலக்குடன் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர்.

பாமக முதன் முதலாக 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சுப்ரமணியம், 32 சதவீத வாக்குகளையும் அள்ளி 2வது இடத்தைப் பிடித்தார்.

1996ல் நடந்த தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜி.கே.மணி அபார வெற்றி பெற்றார். 2001ல் நடந்த தேர்தலி்ல கூட்டணி வைத்து போட்டியிட்டது பாமக. அப்போதும் மணிதான் வென்றார்.

2006ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு பென்னாகரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மணி மேட்டூருக்கு மாறினார். இத்தொகுதியில் பெரியண்ணன் போட்டியிட்டு வென்றார். இவர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியின் சுமார் 2 லட்சம் வாக்காளர்களில், ​ஒவ்வொரு வாக்காளரின் ஆதரவையும் தங்கள் கட்சிக்குத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு,​​ தேர்தல் வியூகம் அமைத்து,​​ பாமக​ செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 100 வாக்காளருக்கும் ஒரு களப் பணியாளர் வீதம்,​​ 2,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக தொகுதியை சுற்றி வருகின்றனர்.

அப்பணியாளர்களை ஒருங்கிணைக்க 30 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு மையத்துக்கும் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர,​​ தொகுதி முழுவதையும் சுற்றி வரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்,​​ மொத்தமுள்ள 48 பஞ்சாயத்துகளில்,​​ குறிப்பிட்ட பஞ்சாயத்துகளை தங்கள் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு தேர்தல் பணி செய்கின்றனர்.​ குறிப்பாக,​​ டாக்டர் ராமதாஸே, தனக்கென 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

அதேபோல, அன்புமணி ராமதாஸ்,​​ ஜி.கே.​ மணி,​​ காடுவெட்டி குரு,​​ வேல்முருகன் உள்ளிட்டோரும் தலா 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழுத் தலைவராக செயல்படும் எம்.எல்.ஏ வேல்முருகன் கூறுகையில், எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 3 மாதங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்கள்,​​ அனைத்து வீதிகளுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.​

மேலும் எங்கள் களப்பணியாளர்கள் மூலம்,​​ ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 30 தடவைக்கு மேல் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளோம்.​ வன்னிய மக்களுக்கு ராமதாஸ் செய்த சாதனைகள் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியால் சந்தித்த வேதனைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி வருகிறோம்.​ எனவே,​​ திமுகவின் பணபலத்தையும் மீறி,​​ நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்.

பாமகவின் இந்த துடிப்பான பணிகளைப் பார்க்கும்போது மறுபக்கம் அதிமுகவின் சவக் களையான முகம் தான் நினைவுக்கு வருகிறது.

பாமகவுக்கு கிடைத்தது ஒரு தோல்வி. ஆனால் அதிமுகவோ கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும், அனைத்து இடைத் தேர்தல்களிலும் தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. ஆனாலும் அந்தக் கட்சி அதைத் துடைக்கும் வகையிலோ, தோல்விக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலோ ஒரு கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கட்சியினரை உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் எந்த முயற்சியிலும் ஜெயலலிதா ஈடுபடவில்லை. அதை விட கொடுமையாக, பென்னாகரத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாமகவினரின் துடிப்பையும், தவிப்பையும் பார்த்தாவது அதிமுக பாடம் கற்குமா என்று தெரியவில்லை.



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நேற்றைய கும்மியின் பயனாக இன்று நானும் எங்கள் அன்பு நமீதா வருங்கால அமைச்சர் (எந்த நாட்டுக்கு என்று கேட்டு ...மேலும் வாசிக்க

நேற்றைய கும்மியின் பயனாக இன்று நானும் எங்கள் அன்பு நமீதா வருங்கால அமைச்சர் (எந்த நாட்டுக்கு என்று கேட்டு என்னை வம்பில் மாட்டக்கூடாது.) கௌரவ அதி மேன்மை தங்கிய கான்கொன்னுடன் வெள்ளவத்தை பீச்சுக்கு செல்ல திட்டம் தீட்டினோம். என்னடா பெரிய திட்டம் என கேட்கப்படாது ஒன்றும் இல்லை, உடனடியா நடக்கும் என்ற ஒரு விஷயம் கொஞ்சம் தமதமாகிப்போக தூக்கமும் இல்லை கனவும் இல்லை கலரும் இல்லை என போகும் வெறுத்த என் வாழ்க்கைக்கு இன்றாவது ஒரு விடிவெள்ளி(மாலையில் எப்பிடிடா என கேட்கப்படாது) கிடைக்காதா என தேடிப்பார்க்க என வைத்துக்கொள்ளுங்கள்.


போக முன் ஒரு அரை மணிநேரத்துக்கு முன்னர் எனக்கு அழைப்பெடுப்பதாக சொன்ன எங்கள் அன்புத் தம்பி. மன்னிக்கவும் தலைவர். சொன்னபடி எடுத்து தோளைத்துவிட்டார். இவன் எங்க டைமுக்கு வரப்போறான் என்ற நினைப்பில் நானும் ஆறுதலா வெளிக்கிட வந்திட்டானப்பா நேரத்துக்கு. அரசியலில் இறங்கப்போகும் தம்பியே ஆரம்பமே தப்பா இருக்கே. இப்பிடி நேரத்துக்கு வரக்கூடாது. ஒரு மாதிரி நடைராசா வாகனத்தில் நாங்களும் பிரயாணம் செய்து பீச்சுக்கு வந்தோம். தம்பி, வழக்கமா இப்படி கடல் ஐ பார்க்க (கடலை அல்ல என்பதை அடிக்கடி சொன்னார்.) வருவதாக சொன்னார். கொஞ்சநேரம் இருக்காது தொலைவில் வந்த காதல் ஜோடி ஒன்றை பார்த்து நான் எப்போ இப்படி வாறது என்ற பெருமூச்சுடன் நிற்க இன்னொரு நண்பர் எங்களோடு இணைந்து கொண்டார். அவர் வருகை எனக்கு பலமாகிப் போனது. காரணம் எங்கள் சிங்கத்தின் வீரச்செயல்களை அடுக்கி வைத்தார் அந்த நபர்.





பல விடயங்களை அலசி ஆராய்ந்த எங்கள் பொதுக்குழு(எல்லாம் பில்ட் அப்தான். ) பல விசயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த வழியால் சென்ற புகையிரதம் எண்களை குழப்பியது. கொதித்தெழுந்த எங்கள் தன்மான சிங்கம். தான் அரசியலில் நுழைந்து முதல் வேலையாக இந்த தண்டவாளங்களை இந்த பீச்சில் இருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தன் முக்கியமான பிரதான கோட்பாட்டை முன்வைத்தார். பாவம் வழக்கமா வருபவருடன் வரும் போது கஷ்டப்பட்டிருப்பார் போல. விடுங்கப்பா அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்,





அதை விட இன்னொரு கருத்து பாருங்க இப்படிப்பட்ட அரசியல் வாதி கண்டிப்பா எந்த நாட்டில் இருக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்க இந்தியாவின் லாலு பிரசாத் யாதவ்வை அழைத்து வந்துதான் இதை செய்யணும் என்ற கதை வேறு. (இப்போ சொல்லுங்க இவர் எந்த நாட்டு அரசியல் வாதி என நான் சந்தேகப்பட்டது சரிதானே.) என்ன செய்றது எத்தனையோ பேர் அரசியலுக்கு வரும் போது இப்படிப்பாட அறிவாளி நல எண்ணம் படைத்த எங்கள் அன்புத் தளபதி, நமீதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வருவதில் என்ன தப்பு. ஒருவாறு மழைக்குள் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.(நிறைய நாட்களின் பின் தான் குளிக்கின்றேன் என்ற உண்மையை சொன்னார். நீர்வள போக்குவரத்து அமைச்சராக இருக்க தகுதியான்a எங்கள் தலைவரின் பேட்டி இதோ.



நானும் ரொம்ப நாளை ஒரு மொக்கை பதிவு போட்டு மொக்கை பதிவராகனும் என பார்த்தால் நடக்கிதில்லையே. ஏன்பா யாரங்கே என்னையும் கவனியுங்கப்பா.


அப்புறம் அந்த வானொலிப் பதிவு இன்னும் இழுபடுகின்றது. இன்றோ நாளையோ இட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தட்டச்சுகின்றேன். பார்க்கலாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் ...மேலும் வாசிக்க
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இது தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி இன்று வெளியிடுகிறது.

இம் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் பெயரில் உள்ள தமிழீழம், அரசாங்கம் ஆகிய இருபதங்களுக்குப் பதிலாக ஈழத் தமிழர், பேரவை போன்ற பதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. (உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பெயர்களில் ஒன்று: நாடு கடந்த ஈழத்தமிழர் பேரவை - Transnational Assembly of Eelam Tamils). தமிழீழம், அரசாங்கம் என்ற பதங்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் என்பதுவும் மரபுசார் அர்த்தத்தில் இவை நிலப்பரப்பினை ஆட்சி செய்யும் தகமையினைக் குறித்துநிற்கும் என்பதுவும் இது சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களாகும்.

இவற்றை ஆய்வு செய்த மதியுரைக்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரினையே தொடர்ந்து பேணுவது என முடிவு செய்துள்ளது. ’தமிழீழம்’ எனும் பதம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாகவும், உருவாக்கப்படும் அமைப்பின் செயற்பாட்டு இலக்காகவும் இருப்பதனால் அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனவும் ஆட்சி (governence) தொடர்பாக அரசுகளின் பாத்திரத்தைக் கடந்த புதிய அரசியற் கோட்பாட்டை உருவாக்கவும் ’அரசாங்கம்’ என்ற பதம் பேணப்படுவது துணைபுரியும் எனவும் மதியுரைக்குழு கருதுகிறது. மேலும், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோயாயங்களையும் இப் பதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில் சிந்திப்பதே சிறந்தது எனவும் மதியுரைக்குழு கருதுகிறது.

2. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைப்பதனூடாக உருவாக்கப்பபட்டு, அதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்ளும் என மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நடைமுறைக்கு மாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே யாப்பு உருவாக்கப்பட்டு இவ் யாப்பின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

மதியுரைக்குழு இவ்விரண்டு நடைமுறைகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மீளாய்வுக்கு உட்படுத்தியது. மதியுரைக்குழு ஆய்வுக்கெடுத்துக்கொண்ட பல்வேறு விடயங்களில் இதுவே
மிக முக்கியமானதாகவும் இருந்தது. இம் மீளாய்வின் அடிப்படையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் யாப்பு உருவாக்கப்படுதலே ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதாகவும் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஏற்புடமை கொண்டதாகவும் அமையும் என்பதனால் அந்நடைமுறையினையைப் பின்பற்றுதலே மீளமைக்கப்பட்ட அறிக்கையிலும் பரிந்துரைக்கப்படுகிறது.

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனிஅரசினை அமைத்தல் இலக்காக இருக்கும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் இலக்கினை அடைவதற்கான மூலோபாயமாக தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளுக்கு முதலில் அங்கீகாரம் பெற்று – பின்னர் அவ் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகித்து இறைமையினை வென்றெடுத்தல் அமையும் எனும் அர்த்தத்தில் ’படிப்படி அணுகுமுறை’ பின்பற்றப்படுதல் குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இப் பதப்பிரயோகம் வெவ்வேறு வகையான வியாக்கியானங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதனால் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் ’படிப்படி அணுகுமுறை’ என்பது நீக்கப்படுகிறது.

4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நோக்கு வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களுக்கும், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் முன்கூட்டியே தெளிவாக வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகப்பண்பின் அடிப்படையில் அவசியமாக உணரப்பட்டமையாலேயே மதியுரைக்குழுவின் அறிக்கையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

5. ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை என்பது இம் முறையின் குறைபாடாகவும் கருதப்படுகிறது. இதனால் இதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறை குறித்த சிந்தனையும் நடைமுறையும் தற்போது கவனத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை பிரதிநிதித்துவத்திலிருந்து மக்கள் ’மீளப்பெறும்’ நடைமுறை கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறித்தும் அவர்கள் வழி தவறி நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை மீளப்பெறும் அதாவது பிரதிநிதித்துவத் தகமையிலிருந்து விடுவிக்கும் பொறிமுறையொன்றும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு என்பது இணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் மதியுரைக்குழு, நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றினைக் கொண்ட கூட்டுத்தொகுதியாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு செயற்குழுவில் மேலதிகப் பிரதிநிதிகளை இணைப்பது என்பதற்குப் பதிலாகவே இப் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இச் செயற்குழுக் கட்டமைப்புக்களதும் இணைப்பாளரதும் பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் நிர்வாகக் கட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் போது முடிவுக்கு வரும். அவை குறித்து மீளமைக்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

7. ஒரு இனம் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாகிறது என நிரூபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு (Self defence), தற்காப்பு (Self preservation) ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ள சூழலில் எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிரூபிப்பதன் ஊடாக சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்கும் அணுகுமுறை தொடர்பாகவும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வரும் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முடிவு செய்தலே கூடுதல் பொருத்தமானது என்று மதியுரைக்குழு கருதுகிறது. இது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக முன்வைக்கப்பட்ட பல்வேறு மக்கள் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கை மீளமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இவ் அறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.03) வெளியிடப்படும்.

இம் மீளளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும். இம் மீளமைக்கப்பட்டஅறிக்கை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்களை மதியுரைக்குழு மேலதிக ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளாது. இக் கருத்துக்கள் செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்குரியவையாகவே இனி கொண்டு வரப்படும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2 ஆம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம் மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும்.

இத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம்.

இத் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கோருகிறோம்.

திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடாத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் தமிழ் பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

ஒப்பம் வி.ருத்ரகுமாரன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது ...மேலும் வாசிக்க


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இது தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி இன்று வெளியிடுகிறது.

இம் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் பெயரில் உள்ள தமிழீழம், அரசாங்கம் ஆகிய இருபதங்களுக்குப் பதிலாக ஈழத் தமிழர், பேரவை போன்ற பதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. (உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பெயர்களில் ஒன்று: நாடு கடந்த ஈழத்தமிழர் பேரவை - Transnational Assembly of Eelam Tamils). தமிழீழம், அரசாங்கம் என்ற பதங்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் என்பதுவும் மரபுசார் அர்த்தத்தில் இவை நிலப்பரப்பினை ஆட்சி செய்யும் தகமையினைக் குறித்துநிற்கும் என்பதுவும் இது சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களாகும்.

இவற்றை ஆய்வு செய்த மதியுரைக்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரினையே தொடர்ந்து பேணுவது என முடிவு செய்துள்ளது. ’தமிழீழம்’ எனும் பதம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாகவும், உருவாக்கப்படும் அமைப்பின் செயற்பாட்டு இலக்காகவும் இருப்பதனால் அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனவும் ஆட்சி (governence) தொடர்பாக அரசுகளின் பாத்திரத்தைக் கடந்த புதிய அரசியற் கோட்பாட்டை உருவாக்கவும் ’அரசாங்கம்’ என்ற பதம் பேணப்படுவது துணைபுரியும் எனவும் மதியுரைக்குழு கருதுகிறது. மேலும், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோயாயங்களையும் இப் பதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில் சிந்திப்பதே சிறந்தது எனவும் மதியுரைக்குழு கருதுகிறது.

2. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைப்பதனூடாக உருவாக்கப்பபட்டு, அதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்ளும் என மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நடைமுறைக்கு மாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே யாப்பு உருவாக்கப்பட்டு இவ் யாப்பின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

மதியுரைக்குழு இவ்விரண்டு நடைமுறைகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மீளாய்வுக்கு உட்படுத்தியது. மதியுரைக்குழு ஆய்வுக்கெடுத்துக்கொண்ட பல்வேறு விடயங்களில் இதுவே
மிக முக்கியமானதாகவும் இருந்தது. இம் மீளாய்வின் அடிப்படையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் யாப்பு உருவாக்கப்படுதலே ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதாகவும் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஏற்புடமை கொண்டதாகவும் அமையும் என்பதனால் அந்நடைமுறையினையைப் பின்பற்றுதலே மீளமைக்கப்பட்ட அறிக்கையிலும் பரிந்துரைக்கப்படுகிறது.

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனிஅரசினை அமைத்தல் இலக்காக இருக்கும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் இலக்கினை அடைவதற்கான மூலோபாயமாக தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளுக்கு முதலில் அங்கீகாரம் பெற்று – பின்னர் அவ் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகித்து இறைமையினை வென்றெடுத்தல் அமையும் எனும் அர்த்தத்தில் ’படிப்படி அணுகுமுறை’ பின்பற்றப்படுதல் குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இப் பதப்பிரயோகம் வெவ்வேறு வகையான வியாக்கியானங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதனால் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் ’படிப்படி அணுகுமுறை’ என்பது நீக்கப்படுகிறது.

4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நோக்கு வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களுக்கும், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் முன்கூட்டியே தெளிவாக வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகப்பண்பின் அடிப்படையில் அவசியமாக உணரப்பட்டமையாலேயே மதியுரைக்குழுவின் அறிக்கையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

5. ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை என்பது இம் முறையின் குறைபாடாகவும் கருதப்படுகிறது. இதனால் இதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறை குறித்த சிந்தனையும் நடைமுறையும் தற்போது கவனத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை பிரதிநிதித்துவத்திலிருந்து மக்கள் ’மீளப்பெறும்’ நடைமுறை கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறித்தும் அவர்கள் வழி தவறி நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை மீளப்பெறும் அதாவது பிரதிநிதித்துவத் தகமையிலிருந்து விடுவிக்கும் பொறிமுறையொன்றும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு என்பது இணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் மதியுரைக்குழு, நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றினைக் கொண்ட கூட்டுத்தொகுதியாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு செயற்குழுவில் மேலதிகப் பிரதிநிதிகளை இணைப்பது என்பதற்குப் பதிலாகவே இப் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இச் செயற்குழுக் கட்டமைப்புக்களதும் இணைப்பாளரதும் பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் நிர்வாகக் கட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் போது முடிவுக்கு வரும். அவை குறித்து மீளமைக்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

7. ஒரு இனம் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாகிறது என நிரூபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு (Self defence), தற்காப்பு (Self preservation) ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ள சூழலில் எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிரூபிப்பதன் ஊடாக சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்கும் அணுகுமுறை தொடர்பாகவும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வரும் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முடிவு செய்தலே கூடுதல் பொருத்தமானது என்று மதியுரைக்குழு கருதுகிறது. இது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக முன்வைக்கப்பட்ட பல்வேறு மக்கள் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கை மீளமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இவ் அறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.03) வெளியிடப்படும்.

இம் மீளளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும். இம் மீளமைக்கப்பட்டஅறிக்கை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்களை மதியுரைக்குழு மேலதிக ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளாது. இக் கருத்துக்கள் செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்குரியவையாகவே இனி கொண்டு வரப்படும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2 ஆம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம் மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும்.

இத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம்.

இத் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கோருகிறோம்.

திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடாத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் தமிழ் பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

ஒப்பம் வி.ருத்ரகுமாரன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


செ.கஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும் 15.03.2010 ...மேலும் வாசிக்க


செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்
15.03.2010


கடந்த 14.03.2010 அன்று சில தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது.

மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒன்று இருந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்கு தமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.

புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல.

கடந்த 12.03.2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13.03.2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்


அதிர்வின் குறிப்பு:

இந்தக் கட்டுரை அதிர்வு இணையத்திற்கும் அனுப்பப்பட்டது. இருப்பினும் இதில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியும், அரசியல் ஆளுமையும் வல்லமையும் மிக்க தமிழ்ச்செல்வன் அண்ணாவை குற்றவாளியாக்கியும் இக் கட்டுரை எழுதப்பட்டதால் நான் அதனை பிரசுரிக்கவில்லை. மாறாக மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு இது உண்மையிலேயே வன்னியில் இருந்து தான் அனுப்பப்பட்டதா என தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்தபோது, அது சுவிசில் இருந்து அனுப்பப்பட்டதை நாம் ஆதாரபூர்வமாக அறிந்தோம். அதனால் அது வன்னியில் இருந்து அனுப்பப்படவில்லை, மற்றும் போலியானது என அறிந்துகொண்டோம். தமிழ் வின் இணையம் தமிழீழ விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது. புலிகள் மீது இறந்த மாவீரர்கள் மீதும் சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழ் மக்களின் மனதில் விசத்தைக் கலக்கிறது. இப்படியான ஈனத்தனமான செயலில் புதினம் இணையத்தளம் ஈடுபட்டு பின்னர் செயல்படாமல் போனது மக்களுக்கு நன்கு தெரியும். முடங்கிப் போயிருக்கும் போராட்டத்தினைப் பற்றி பேசுவதற்கோ அல்லது அதை கொச்சைப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அதனைப் பயன்படுத்தி கேவலமான அரசியலை நடத்தவேண்டாம். இறந்த மாவீரர்களைப் போற்றவேண்டும், தயவுசெய்து தூற்றாமல் இருங்கள்!. அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

பின்னூட்டல்கள்

comments by: Theepika

தற்போது தமிழ் வின் இணையத்தளம் புலம் பெயர் மக்களையும் நாட்டிலுள்ள எமது மக்களையும் பிரிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது .. . பல்வேறு பொய்யான பெயர்களில் பல கட்டுரைகளை ஒவ்வொரு தமிழ் தேசியவாதிகளுக்கும் எதிராக எழுதி வருகின்றது . அண்மையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்களுக்கு எதிராக பல அநாவசியமான , சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அவர்களது உறவினர் போட்டியிட தொடங்கியதும்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகின்றது. அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பவர்களையும் மிகவும் கீழ்த்தரமான முறையில் பல பொய்யான கட்டுரைகள் மூலம் தாக்கியும் வருகின்றது.

எமது வடக்கு கிழக்கு மக்கள் வெளிநாட்டில் உள்ள இது போன்ற இணையதளங்களில் வரும் செய்திகளையே உண்மையென நம்புகின்றனர். அந்த மக்களை இந்த தமிழ் வின் இணையத்தளம் நிச்சயம் தவறாக வழிநடாத்துகின்றது.


comments by: Ganeshamoorthy
Its correct, Tamil win, misled people


comments by: Rohan
அண்மைக்காலமாக தொடர்ந்து தமிழ் வின் இணையத்தளத்தில் " இந்தியாவே எமது ஒரே நம்பிக்கை " என்ற ரீதியில் பல செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றது. அதாவது புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவுதான் போராடினாலும் இந்தியாவின் கருணை இருந்தால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும் என்றே தொடர்ந்து எழுதி வருகின்றது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினை அவமதிக்கும் செயலாகும்.

பாரிஸ் ஈழநாடு என்ற பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை கொச்சைப்படுத்தி எழுதிய ப. ரங்கநாதன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி சில நாட்களுக்கு முன்னரே புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த நபரின் பாசெபூக் பக்கமும் சில நாட்களுக்கு முன்னமே தொடங்கப்பட்டு உள்ளது. அதுவும் போலியானது.

அதேபோல் காந்தன், ஜோய் தனபாலன் போன்ற பெயர்களுக்கும் அதே நிலைமையே. இவர்களின் பெயர்களில் உள்ள மின்னஞ்சல் , பாசெபூக் முகவரிகளும் தற்போது புதிதாக திறக்கப்பட்டவையே... தமிழ் வின் நிர்வாக குழுவினரே !! தொழிநுட்பம் எவ்வளவோ முன்னேறி விட்டது... . இனியும் பொய்யான பெயர்களில் தங்களின் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள தேர்தல் ...மேலும் வாசிக்க
 எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார் எனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி கண்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் குருநாகல், கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா இரு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“பேப்பர்லியே போட்டுட்டான் .பிறவு என்ன உண்ணையாய் இருக்கும்” என்பது கிராமத்து டீக்கடை பெஞ்சு மக்களின் அன்றாட கூற்றாகும் ஆனால் அப்படி பட்ட அப்பாவி வாசகர்களை ...மேலும் வாசிக்க

“பேப்பர்லியே போட்டுட்டான் .பிறவு என்ன உண்ணையாய் இருக்கும்” என்பது கிராமத்து டீக்கடை பெஞ்சு மக்களின் அன்றாட கூற்றாகும் ஆனால் அப்படி பட்ட அப்பாவி வாசகர்களை ஏமாற்றும் செய்திதாள் நிறுவனங்களை ஆசிரியர்களை மற்றும் தொலைகாட்சிகளை என்ன செய்ய? இது ஒரு வகையான சோரம் தான். முரசொலி என்றால் திமுக செய்திதாள், மக்கள்குரல் என்றால் அதிமுக செய்திதாள், தமிழ்முரசு என்றால் பாமக செய்திதாள என்றால் ஜனசக்தி என்றால் பொதுவுடைமை கட்சி செய்தி தாள என நமக்கு தெரியும் அவற்றில் வரும் கட்சி சார்பாக இருககும். சில செய்திதாள்கள் சாதி அடிப்படையில் செய்திகள் வெளியிட்டாலும் அவைகள் நடுநிலையானவை மக்கள் நம்புகிறார்கள்.
Paid News (வாங்கிய செய்தி)என்றால் ஒன்றும் பிரமாதமாய் இல்லையங்க. அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்கள் ஒரு மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொள்ளும் போது அவர் சார்ந்த அரசியல் கட்சிகள் சில செய்திதாள் அல்லது தொலைகாட்சி நிறுவனங்களை அழைத்து பெரும் தொகையினை கொடுத்து நல்லபடியாய் செய்தி போடும்படி கூறுவது. இந்நிறுவனங்களும் கூட்டமே இல்லாட்ட கூட பெரும் திரளான மக்கள் வந்த மாதிரியும் மக்கள் அந்த கட்சிக்குத்தான அந்த தொகுதியில் வாக்களிப்பார்கள். அந்த கட்சிக்கு தான வெற்றி பெறும் எனும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். இவ்வாறு வாங்கிய செய்தி வசதியை பயன்படுத்தியதாக போன தேர்தலில் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக சுஷ்மா ஜெயராஜ் ஒத்து கொண்டு உள்ளார். செய்திவழங்குபவர் அமைப்புகளும் இதை ஒத்து கொண்டு உள்ளன. ஆனாலும் இதற்கு தாங்கள மட்டும் பொறுப்பல்ல அரசியல் கட்சிகளும் காரணம் என்று கூறி தப்பிக்கும் விதமாக சொல்லி உள்ளன. மத்ய அரசின் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இந்த குற்றச்சாட்டு கொண்டு செல்லப்பட்டு மக்கள்பிரதிநிதி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து வாங்கிய செய்திகளை (paid news)பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டத்தை மீறி செய்ல் பட்டதாக கருதி நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டுமென சில அமைப்புகள் கேட்டு கொண்டு உள்ளன. எனவே என்னருமை வாக்காள பெருமக்களே கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் .செய்திதாளில் வரும் செய்திகளும் பொய், தீரவிசாரித்து உறுதிபடுத்துவது பகுத்தறிவினை பயன்படுத்துவது தான் சால சிறந்தது. இது எல்லாம் மற்ற மாநிலத்தவர்க்கு நம்ம மாநிலத்தில் இந்த மாதிரி இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை நேரடியாக வா(டி)க்காளர்களை சந்தித்து வாக்குகளை ரூ1000 த்துக்கும் க்வ்ட்டர் மற்றும் பிரியானி கொடுத்து கொள்முதல் செய்யும் முறையினை கொண்டுவந்து சிறப்பாக தேர்தல் நடத்துவது என மற்ற மாநிலத்தைக்கு முன்மாதிரியாகவும் அறிவியல் பூர்வமாக (தொழில்ஙட்பத்தில்) தேர்தலை சந்திப்பதில சிறந்தவர்கள் நாம் என நம்மை நிலை நிறுத்தியாகி கிட்டதட்ட ஒராண்டு ஆகப்போகிறது. பின்ன என்னத்துக்கு இந்த செய்தி போட்டிங்கன்னு கேட்டால் யாராவது ஒன்றிரண்டு பேர் ஆராய்ந்து வாக்களிக்க மாட்டார்களா என்ற அற்பஆசை தான் காரணம்



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் ...மேலும் வாசிக்க

சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடனான நேர்காணல்.

யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜன் தொடர்பாக சிறு குறிப்பு:

திரு சி. வரதராஜன் அவர்கள் மிகச் சிறந்த தேசப்பற்றாளர் அவர் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியிருந்தார். பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், 1997 – 1998 ஆம் காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார்.

நாலாவது ஈழப்போர் காலத்தில் 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற அவரின் கொள்கைப்பற்று தற்போது அவரை யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளது.அவர் எமக்கு அளித்த நேர்காணல் வருமாறு:

கேள்வி: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளராகிய உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சனைகள் இரண்டையும் முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இது தொடர்பில் உங்களின் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளன?

பதில்: ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகள் எமது விடுதலைப் போராட்டம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. மனிதாபிமானப் பிரச்சனைகள் என்பது இவ் விடுதலைப் பேராட்டத்தின் விளைவாகத் தோன்றியதாகும். மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளத் தீர்த்துவிடமுடியாது.

ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதன்மூலம் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கமுடியும். இதுதான் உண்மை. ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் காலம் வரை தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒத்திவைக்க முடியாதவாறு அது இன்று பூதாகரமாக வளர்ந்துவிட்டது.

எனவே நாம் இன்று இவ்விரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற பலமான மூன்று தூண்களே ஈழத் தமிழினத்தைத் தாங்கி நிற்கின்றன. இத் தூண்கள் தகர்க்கப்படுமாயின் இத் தீவில் எமது இனம் முற்றாகவே அழிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

உதாரணமாக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அண்மைக் காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர் என்றும் அதனை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அடிக்கடி கூறிவருகின்றார்.

ஆனால் இது உண்மையல்ல. இறுதியாக எடுக்கப்பட்ட 2001ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி கொழும்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான 22,51,274 பேரில் 17,24,459 பேர் சிங்களவர்களாகும். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 76.6 சதவீதமாகும். இம் மாவட்டத்தில் தமிழர்களின் மொத்தத் தொகை 2,72.660 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12.1 சதவீதமாகும்.

இவ்வாறு உண்மையில்லாத ஒன்றை அடிக்கடி கூறுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவர் கூறும் செய்தி என்னவென்றால், யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படப் போகின்றார்கள் நீங்கள் அதனை எதிர்க்காதீர்கள் என்பதேயாகும். இதனை முறியடிக்க வேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் சொல்லளவில் மட்டுமன்றி செயலளவிலும் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற கோட்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதன் மூலமே எமது அரசியற் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணமுடியும். அதைவிடுத்து இவையெல்லாம் வெறும் கோசங்கள், கனவுகள், யதார்த்தமற்றவை என்றெல்லாம் கூறி இவற்றைக் கைவிடுதல் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்குச் சமம். பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற வினாவும் எழுந்துள்ளது.

1970கள் வரை இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியடைந்த பின்னர் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அவற்றை அடையமுற்பட்டு அதுவும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற சந்தேகம் எழுவது இயற்கையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்திய 30 வருட அகிம்சைப் போராட்டம் தமிழ் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர – சர்வதேசமயப்படுத்தப்படத் தவறிவிட்டது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போல ஒரு வட்டத்திற்குள் நாங்கள் இருந்து கொண்டோம். ஆனால் கடந்த 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழ் அரசியற் பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு சென்று அதனை நியாயப்படுத்தி உள்ளது. எனவே இந்த இடத்திலிருந்து கொண்டு ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற அரசியல் ஊடாக தீர்வுகாணமுற்படுவது சாத்தியமானது. ஆனால் இதனை மேற்கொள்வதற்கு விட்டுக்கொடுப்புக்கள், மற்றும் சமரசங்களுக்குச் செல்லாத ஒரு பலமான – உறுதியான அரசியற் தலைமை – ஓர் அரசியல் இயக்கம் இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

இவ்வாறான ஒரு உறுதியான அரசியற் தலைமையின்கீழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என நம்புகின்றோம். இடம்பெயர் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதலும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் எம்முன்னுள்ள முக்கிய பிரச்சனைகளாகும். சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழ் மக்களினதும் ஒத்துழைப்புடன் இதனை மேற்கொள்ளமுடியும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்மைப்பின் கொள்கைகளில் இருந்து நீங்கள் எந்த வகையில் வேறுபட்டு நிற்கின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்றது. கேட்டு எதனையும் பெறமுடியாது – தருவதை வாங்கிக்கொண்டு திருப்திப்படுவோம் என்ற நிலைக்கு கூட்டமைப்பு வந்துவிட்டது.

தமிழ் மக்களின் மனதில் ஓர் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி தமிழ் இனத்தை ஒரு தோல்வியடைந்த சமூகமாகக் காட்டி கிடைக்கின்றதை மட்டும் கொண்டு வாழப் பழகிக்கொள் என்ற நிலைக்கு எம்மக்களைக் கொண்டு செல்லமுற்படுகின்றது.ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த என்ன செய்வது? என்ற வேதனையில் இருந்த மக்களை ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு எடுத்தமுடிவு தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் அனாதையாக்கியது.

நாட்டின் ஜனாதிபதி யார் என்பதைத் தமிழ் மக்கள் தான் தீர்மானிக்கப் போகின்றார்கள் என்று உசுப்பேத்தி இறுதியில் தமிழ் மக்கள் இரண்டு முறை வாக்களித்திருந்தால் கூட ஜனாதிபதியைத் தெரிந்தெடுத்திருக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.

அரசியல்ரீதியாகவும் தமிழ் மக்கள் பலமற்றவர்கள் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது எனத் தமிழ்க் காங்கிரஸ் எடுத்த முடிவையொற்றி கூட்டமைப்பும் பகிஸ்கரிப்பது என்ற முடிவை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் வெல்ல வைத்திருக்க மாட்டார்கள்.

அப்போது தமிழ் மக்களின் வாக்குப்பலம் முக்கியத்துவம் வாய்ந்தாகப் பேசப்பட்டிருக்கும். கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தவறான முடிவினை மேற்கொண்டு தமிழ் மக்களைதோல்வி மனப்பான்மைக்குள் வீழ்த்தி, இனிமேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது -இந்தியா சொல்வதைக் கேட்போம் என்ற நிலைக்குத் தமிழ் மக்களைக் கொண்டு வந்து விட்டு விட்டது. தற்போது கூட்டமைப்பு 30 வருடங்களுக்கும் முன்னால் உள்ள காலப்பகுதிக்கு எமது அரசியல் இலக்குகளைக் கொண்டு செல்ல முற்படுகின்றது.

ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். எமது கருத்தின்படி நாம் தோற்றுப்போன சமூகமல்ல. மாறிவரும் சர்வதேச ஒழுங்குகளுக்கேற்ப பாராளுமன்ற அரசியலின் ஊடாக எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி : இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாயகத்து அரசியல் பயணம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியம் தொடர்பில் உங்களின் கருத்துக்கள் என்ன?

பதில்: 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய கருத்து ‘புலம்பெயர் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

” எமது மக்களின் அரசியற் பிரச்சனையைத் தீர்ப்பதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் எம்மால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற அரசியலிற்குள் தற்போது நாம் புகுந்து அதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு மட்டுமன்றி மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும்கூட தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையே காரணம்.

புலம்பெயர் தமிழர்கள் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஜனநாயகமுறையில் பாராளுமன்ற அரசியலுக்குட்பட்டவகையில் தாயகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழ் மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரசியல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பாக ஓர்; உறுதியான தீர்வினைப் பெறக்கூடியதாக இருக்கும்.

கேள்வி : நீங்கள் யாழ் குடாநாட்டில் பிரதம வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள், உங்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களும், தேசியத்திற்கு ஆதரவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?

பதில்: இவ்விடத்தில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவேண்டிய நிலை உள்ளது. நான் ஒரு அரசியல்வாதியல்ல. அரசியல் எனது தொழிலும் அல்ல. நான் ஒரு பொருளியல் ஆசிரியன்.

இதுவரைகாலமும் ஒரு அரசியல் நடவடிக்கையாளனாக மட்டுமே இருந்தவந்த நான், தற்போது நேரடி அரசியலில் ஈடுபடமுன்வந்ததற்குக் காரணம், தமிழர்களின் அரசியற் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமேயாகும். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 30 வருடங்களிற்கும் முன்னுள்ள நிலைக்கும் அப்பால் கொணடு செல்ல முற்படுகின்றது.

“தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியங்களை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்;லை” என்பது எனது நம்பிக்கை. தமிழர்களின் இலட்சியங்களை கூட்டமைப்பு வெறும் கோஷங்களாகவே இன்று பார்க்கின்றது. சலுகைகள் எல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளாக மாறக்கூடிய ஒரு அபாயம் இன்று நிலவுகின்றது.

இந்நிலைமையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறையாகவே எனது நேரடி அரசியற் பிரவேசத்தைப் பார்க்கின்றேன்.நான் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியுள்ளேன்.

பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்தேன். தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் சிறையிலிருந்தேன்.

1997 – 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் இருந்தேன். 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானேன். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசித்ததற்குக் கிடைத்த வெகுமதிகளாகவே நான் இவற்றைக் கருதுகின்றேன்.

எமது அணியில் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் நேரடி அரசியலுக்குப் புதுமுகமான என்னை முதன்மை வேட்பாளராகத் தெரிவு செய்தமை தேசியத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் என்னுடைய மாணவர்கள்.

நாங்கள் தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்கள் – நேசிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளர்கள்.அவர்களில் ஒருவர் தான் தோற்றாலும் பரவாயில்லை. சேர் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற தனது மனவிருப்பத்தை தனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் யாழ் மக்களின் ஒட்டுமொத்தமான கருத்தும் ஆகும். எனவே எமது வெற்றியை நாளைய சரித்திரம் கூறும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நான்கு பிரிவுகளாக பிளவடைந்துள்ளது. இந்த நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில்: ஆரம்ப கட்டத்தில் இப் பிளவுகள் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியமை மக்கள் மனதில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஏனைய பிளவுகள் தனி மனிதர்களின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரசின் வெளியேற்றம் ஒரு கட்சியின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது.

ஊடகங்களின் உதவியுடன் எம்மீது பல அவதூறுகளை கூட்டமைப்பு மேற்கொண்டது – மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தற்போது காங்கிரசின் வெளியேற்றத்தின் நியாயத்தன்மையை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனடிப்படையில் அவர்கள் ஒர் தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கேள்வி : தற்போதைய பொதுத்தேர்தலில் உங்களின் கட்சி யாழ்மாவட்டத்திலும், திருமலையிலும் மட்டுமே போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் போட்டியிடவில்லை, அதற்கு சிறப்பு காரணங்கள் ஏதும் உண்டா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு தலைமை வகிப்பவர்கள் மூன்றுபேர். அவர்களில் ஒருவர் திருகோணமலையில் போட்டியிடுகின்றார்.

ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். இந்த மூவரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்களேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான பாதைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இங்கு சில தனி மனிதர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் களமிறங்கியுள்ளோம் எனக் கருதவேண்டாம். உண்மையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே நாம் இவ்விரு மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளோம்.

கேள்வி : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களில் சிலர் வெற்றி பெற்ற பின்னர் உங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படும் திட்டங்கள் உண்டா?

பதில்: நிச்சயமாக. எமது நீண்டகால செயற்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கூட்டமைப்பின் தவறான தலைமைகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும்போது தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்றவர்களோடு ஒருங்கிணைந்து செயற்படுவதில் எதுவித தடைகளும் இல்லை. இதுவே எமது விருப்பமும்கூட.

கேள்வி : திருமலையில் உங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் முன்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை சிலர் முன்வைப்பது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?பதில்: திருமலை நகரசபைத் தலைவர் திரு.கௌரி முகுந்தன் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பாகவே இச் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

உள்ளுராட்சி சபைகள் தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும். எனவே இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்றோரை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.

இதனை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. இது ஒருபுறமிருக்க, கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் (இவர் தற்போது கூட்டமைப்பின் வேட்பாளரும் கூட) வட பகுதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதை அடிப்படையாகக் கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டமுடியுமா?

கேள்வி : யார் வெற்றி பெற்றாலும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா அவர்களுடன் பேசியே தீரவேண்டும் என்பது தற்போது கட்டாயமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியாவுடன் உங்களின் அனுகுமுறைகள் எவ்வாறு அமையப் போகின்றது?

பதில்: இந்தியத் தரப்போடு பேசவேண்டும் என்பதில் எமக்குக் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – தோற்றுப் போய்விட்டோம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் சராணாகதி அடையமாட்டோம். எமக்கு என்ன தேவை என்பது தொடர்பாக இந்தியாவோடு பேசுவோம்.

மாறாக இந்தியாவின் மனதை நோகடிக்கக்கூடாது – இந்தியா எமக்குத் தர விரும்புவதையே நாம் அவர்களிடம் கேட்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் நாம் இல்லை.

கேள்வி : தமிழ் மக்களிடம் உங்கள் கட்சிக்கு உள்ள ஆதரவுகள் எவ்வாறு உள்ளன?பதில்: பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் எம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

எம்முடன் கலந்துரையாடுகின்ற மக்கள் எம்மிடம் விடுக்கின்ற ஓரேயொரு வேண்டுகோள் என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட – தற்போது மேற்கொண்டுவருகின்ற நயவஞ்சகமான நடவடிக்கைகளை மக்கள் முன் வெளிப்படுத்துங்கள் என்பதேயாகும்.

கேள்வி : யாழ் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாள 324 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அங்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிகள் எவ்வாறு இருக்கும் என எண்ணுகிறீர்கள்?

பதில்: 16 அரசியற் கட்சிகளும் ஏறத்தாழ 11 சுயேச்சைக் குழுக்களும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவற்றில் பல அரசியற் கட்சிகள் – சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றின் பெயர்கள், அவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவற்றின் சின்னங்கள் என்பன எதுவுமே மக்களுக்குத் தெரியாது.

5 அரசியற் கட்சிகள் பற்றிய விபரங்களை மட்டுமே மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவாஜிலிங்கத்தின் தலைமையில் போட்டியிடும் இடதுசாரி முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஈ.பி.டி.பி), ஐக்கிய தேசியக் கட்சி என்பனவே அவையாகும். இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட இரண்டு கட்சிகளும் சிங்களக் கட்சிகள் என்றவகையில் மக்களின் ஆதரவைப் பெருமளவிற்கு இழந்தவையாகவே உள்ளன.

குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தனிப்பட்ட நபர்களுக்காக சில வாக்குகளைப் பெறமுடியும். அடுத்து சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் 3205 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.எனவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் (தமிழக் காங்கிரஸ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான நேரடிப் போட்டியாகவே யாழ் தேர்தல் களம் அமைந்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

இப் போட்டியில் நாம் முன்னிலை பெற்று வருகின்றோhம் என்பதே மக்களின் கருத்தாகும். நாம் மக்களுக்குள் இறங்கிக் கடுமையாக வேலை செய்தால் – எமது முன்னணியின் கொள்கைகளை மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினால் மாபெரும் வெற்றியை நாம் அடையமுடியும் என மக்கள் கருதுகின்றனர்.

2004ம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற ஆசனங்களைப் போன்று இம்முறையும் பெறுவீர்களா என்று கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரிடம் கொழும்பு பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் இடம்பெற்ற பேட்டியொன்றில் கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் கூறிய பதில் அதைவிட சில ஆசனங்கள் குறைவாகவே பெறுவோம் என்பதாகும்.

அதற்கு அவர் கூறிய காரணம் கடந்த தேர்தலில் யுத்த நிறுத்தம் நிலவியது – மக்கள் சுந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அன்று யுத்தநிறுத்தம் இருந்தது.

இன்று யுத்தமே இல்லையல்லவா. இவ்வாறான சூழ்நிலையில் முன்னரிலும் கூடுதலான ஆனங்களையல்லவா பெறவேண்டும். எனவே எங்களைப் பற்றிய பயமே தாங்கள் குறைந்த ஆசனங்களையே பெறுவோம் என்று கூறியதற்குக் காரணமாகும்.

கேள்வி : யாழ்குடாநாட்டில் உள்ள பிரபல ஊடகங்களில் ஒன்றான உதயன் பத்திரிகையின் உரிமையாளர், தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும், வீரகேசரியின் ஊடகவியலாளர் ஐ.தே.கவிலும் போட்டியிடும் நிலையில் அங்கு ஒரு ஊடகப்பரப்புரை உங்களுக்கு எதிராக வலுப்பெறும் சாத்தியங்கள் உண்டா? அவ்வாறாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று அப் பத்திரிகைகள் சார்ந்த ஊடகவியலாளர்கள் போட்டியிடுவதனால் அப் பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து தடம்புரண்டு பக்கச் சார்புடன் செயற்படுவதாக மக்கள் உணர்கின்றனர்.

எமது செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும், சில அறிக்கைகளை – செய்திகளை மிகவும் காலம் தாழ்த்தி வெளியிடுவதுமான நடவடிக்கைகளில் பெரும்பாலான பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன.

நாம் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சியாகப் போட்டியிடுகின்றபோதிலும்கூட எம்மை ஒரு சுயேச்சைக் குழு என்றும், வரதர் அணி என்றும் கொச்சைப்படுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

நாம் அன்றாடம் மக்களைச் சந்திப்பவர்களாக இருப்பதனால் செவி வழியாக எம்மைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன. குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் தினமும் மாணவர்களை வகுப்பறையில் நேரடியாகச் சந்திக்கின்றேன். இதன் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது.

கேள்வி : நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: பெரும்பாலான புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவுகளை தொடர்ந்து எமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது பழைய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமெங்கும் பரவியுள்ளனர்.

நான் தேர்தலில் போட்டியிடுவததை அறிந்தவுடன் தமது மகிழ்ச்சியையும் ஆதரவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பணபலம், ஊடகபலம் வாய்ந்த சக்திகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். மக்கள் பலத்தை மட்டும் நம்பியே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

இப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். இணையத் தளங்களினூடாக தங்கள் ஆதரவுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்படவேண்டும். தாயகத்திலுள்ள தங்களின் உறவுகளுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி எமக்குப் பின்னால் அணி திரளச் செய்யவேண்டும். பொருளாதாரரீதியான ஆதரவையும் நாம் நாடி நிற்கின்றோம்.

கேள்வி : வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை மற்றும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து இயங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்: வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் வேறுபட்டவை.

எனினும் இவ்விரண்டு பகுதி மக்களுக்கும் பொதுவான சில அரசியற் பிரச்சனைகளும் குறிப்பாகப் பொருளாதாரப் பிரச்சனைகளும் உள்ளன. இவற்றினடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதுவித தடைகளும் இல்லை.

மறைந்த மலையகத் தலைவர் திரு. தொண்டைமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

நன்றி: ஈழம் இ நியூஸ்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் ...மேலும் வாசிக்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

தேர்தல் விஞ்ஞாபனம் - 2010

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம்

பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின் வருகைக்கு முன்னதாக இலங்கைத் தீவிலே மூன்று இராஜதானிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வடக்கிலே தமிழருக்குச் சொந்தமாக இருந்தது. மத்திய மலையகத்திலே இருந்த கண்டி இராச்சியம் தான் கடைசியானதாக 1815ல் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது. 1833ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக இந்த மூன்று இராஜதானிகளையும் பிரித்தானியர் ஒன்றிணைத்தனர். அன்றிலிருந்து இலங்கை ஒரே நிலப்பரப்பாக ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு காலனித்துவ ஆளுகையிலிருந்து சுதந்திரம் பெற்ற வேளையில் சாதாரண பெரும்பான்மைத்துவம் கொண்ட ஒற்றை ஆட்சித் தன்மையான அரசியல் அமைப்பு ஒன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பின் 29(2) உறுப்புரையில் குறித்ததொரு சமூகத்தையோ சமயத்தையோ பாதிக்கின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற சட்டமோ அல்லது குறித்த ஒரு சமூகத்துக்கோ சமயத்துக்கோ மற்றவர்களுக்கு இல்லாத சலுகையை கொடுக்கும் சட்டத்தையோ நிறைவேற்றக்கூடாதென்ற தடைவிதிக்கப்பட்டது.

சமஷ்டி அரசியல் அமைப்பிற்கான கோரிக்கை

1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமானோருடைய குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியாக மாற்றப்பட்டது. 29(2) உறுப்புரை இப்படியானவற்றை தடுப்பதற்காக இயற்றப்பட்டிருந்தாலும் கூட இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அதுவரை காலமும் இருந்த அரசாங்க கொள்கைக்கு மாறான செயலுமாகும். இந்த கால கட்டத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு பிரதேசங்களில் அந்த பிரதேசங்களில் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் முழு மூச்சோடு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களவரிடம் இருந்து பிறிதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை 1951 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்தியம்பியது. இந்த சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் ஒரு சமஷ்டி முறையான ஆட்சியை தமிழரசுக்கட்சி வலியுறுத்தியது. ஆரம்பத்தில் வெளிநாட்டுப் படையெடுப்புக்களினாலும் பின்னர் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத பெரும்பான்மையினரின் மேலாதிக்க வாதத்தை உறுதி செய்யும் அரச முறை ஒன்றின் மூலம் தமிழ் மக்கள் இழந்து விட்ட சுயநிர்ணய உரிமையை திரும்பவும் வென்றெடுப்பதற்காக 1950 களிலிருந்து 1960 களின் இறுதிவரை தமிழ் அரசுக்கட்சி பல அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது.

பண்டா – செல்வா ஒப்பந்தம்.

அரச கரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்காவிற்கும் தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையில் 1957 ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அரச காணிகளுக்கு மேலான தனி அதிகாரத்தையும் மற்ற அரச அதிகாரங்களையும் பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்தது. ஆனால் பெரும்பான்மை சமூகத்தினர் இதனை எதிர்க்கிறார்கள் என்று காரணம் காட்டி பண்டாரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை.

டட்லி – செல்வா ஒப்பந்தம்.

பின்னர் 1960 ம் ஆண்டில் வடக்கு கிழக்கு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடை செய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் பிரதமர் டட்லி சேனநாயக்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965 ம் ஆண்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது.

அரச குடியேற்றங்கள்

வடக்கு கிழக்கை தங்களுக்கு பாரம்பரிய தாயகமாகவும் அதிலே தமது சுயநிர்ணய உரிமையை உடையதாகவும் கருதுகின்ற எமது மக்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை பாதிக்கும் வகையிலான அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் பெரிதும் பாதிப்படைந்தனர். 1940 களுக்கும் 1980 களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் அரச காணி பகிர்ந்தளிக்கின்ற கொள்கையினாலும் குடிசனப் பரம்பல் வீதம் பாரியளவில் மாற்றம் அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது கிழக்கு மாகாணத்தில் 9 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 1981ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின்படி 25 வீதமாக உயர்ந்திருந்தது. அதே சமயம் 1947ற்கும் 1981ற்கும் இடைப்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகை 238மூ ஆக உயர்ந்த வேளையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சிங்கள மக்களின் சனத்தொகை 883மூ ஆக அதிகரித்தது. வடக்கு கிழக்கின் குடிசனப்பரம்பலை இவ்விதமாக மாற்றும் அரசின் நிகழ்ச்சி நிரல் முழுத் தீவிரமாக இன்று வரை நடைபெற்று வருகின்றது.

கடந்த 60 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசன திட்டங்கள் தவிர வேறு எந்தவிதமான முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலப்பகுதியில் எமது மக்களும் எமது நிலமும் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டன.

குடியரசு அரசியலமைப்பு உருவாகத்தில் தமிழ் மக்கள் பங்குபற்றாமை

1970 ம் ஆண்டு இலங்கைக்கு இலங்கை மக்களே உருவாக்குகின்ற அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதற்காக அரசியல் யாப்பு நிர்ணயசபை ஒன்று கூட்டப்பட்டது. இதிலே தமிழரசுக் கட்சியும் ஆரம்பத்தில் பங்குபற்றி சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது. ஆனால் அந்த பிரேரணைகள் யாவும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த அரசியல் யாப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர். அதைப் போலவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கும் தமிழ் மக்கள் தமது ஒப்புதலை வழங்கவில்லை. முதலாம் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் ஒற்றையாட்சி முறையை உறுதிப்படுத்தி சிங்கள மொழிக்கு மட்டும் அரச கரும மொழி என்ற அந்தஸ்த்தையும் பௌத்த மதத்திற்கே முதலிடம் என்ற அந்தஸ்த்தையும் கொடுத்தன. சோல்பரி அரசியல் யாப்பில் 29(2) இல் சிறுபான்மை மதங்களுக்கும் மக்களுக்கும் எதிராக சட்டம் இயற்றக்கூடாது என்ற தடையையும் இந்த அரசியல் யாப்பு நீக்கியது. ஆகவே 1972ஆம் 1978ஆம் அரசியல் யாப்புக்கள் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டதாகும்.

தரப்படுத்தல்

பல்கலைக்கழக அனுமதிகளைத் தரப்படுத்தும் திட்டமொன்று அறிமுகப்படுத் தப்பட்டதன் மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாமலும் அவர்களை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறவும் வழிவகுக்கப்பட்டது. இது தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுத்து அவர்களுடைய விரக்தியை அதிகரித்தது. 1970 ம் ஆண்டுகளில் இதற்கெதிராக அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட 40 ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி சில வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்

தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகளுக்கும் மற்ற அநீதிகளுக்கும் மேலாக 1956, 1958, 1961, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பங்களில் நாட்டின் மற்றப் பாகங்களில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்கம் கப்பல்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பியதன் மூலம் இந்த இரு மாகாணங்களும் எமது பாரம்பரிய தாயகம் என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கையின் விளைவாக அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் தமிழ் மக்கள் இழந்துவிட்ட இறையாண்மையை மீண்டும் வென்றெடுப்பதற்காகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

இழந்துபோன இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான அழைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து 1976 ம் ஆண்டிலே இழந்த எமது இறையாண்மையை மீளப் பெறவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இது 1956 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணையை அரசு புறக்கணித்ததாலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வந்தமையாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். சிங்கள அரசாங்கங்களுக்கும் தமிழ் தலைவர்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கூட மதிக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறையும் பாராபட்சமும் எந்தவிதமான கட்டுப்பாடின்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இழந்து போன இறையாண்மையை மீளப் பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலிலே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது.

அதிகாரத்தை பகிர்வதற்கான ஒழுங்குமுறைகள்

1983ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குப் பின்னர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று தமிழ் பேசும் மக்களுக்கு கூடிய சுயாட்சி வழங்குகின்றதோர் மாற்று அரசியல் திட்டத்தினூடாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்பட்டன. 1987 ம் ஆண்டு ஏற்படுத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரதிபலனாக வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக ஒன்றிணைத்து ஒரு அரசியல் நிர்வாக அலகு தோற்றுவிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த மாற்றங்கள் வழிவகுத்தன. ஆனால் இந்த நாடு ஒற்றையாட்சி முறையின் கீழேயே தொடர்ந்தும் இருந்தது. அத்தோடு அதிகாரங்களைப் பகிரவந்த 13வது திருத்தச்சட்டம் மத்திக்கான அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்தல் பகிர்ந்தனுபவிக்கும் இறைமை.

1995 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கம் அரசியல் சாசனத்திற்காக ஒரு தொகுதி பிரேரணைகளை அறிவித்தது. இலங்கை ஒரு பல மொழி பல மதங்களைக் கொண்ட பன்மத்துவ சமூகம் என்ற அடிப்படையில் ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் ஒரு அரசியல் வரைவை பிரிக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் 1996 ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. 2000 ம் ஆண்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படை முன் வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை

எரிந்து கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எந்த முன்னேற்றமும் ஏற்படாத அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதோடு பின்னர் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் ஒஸ்லோ உடன்பாடு என்ற பெயரில் இரு தரப்பினரும் சில அடிப்படைக் கொள்கை விதிகளை ஏற்றுக் கொண்டனர்.

அது பின்வருமாறு:

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டெடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.

இராணுவத் தாக்குதல்களும் அதன் பின் விளைவுகளும்

இந்தப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படாமல் அரசாங்க இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போராட்டம் திரும்பவும் ஆரம்பமாகி 2009 மே மாதம் 19ம் திகதியோடு அனைத்து இராணுவ மோதல்களும் முடிவுக்கு வந்தன. இந்த 30 வருட போராட்ட காலம் தமிழ் தாயகத்தையும் தமிழ் மக்களையும் முற்று முழுதாக சூறையாடி ஏதுமற்ற ஏதிலிகளாக்கியுள்ளது. பத்து இலட்சம் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தும், இன்னொரு ஐந்து இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த போராட்ட காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத் தாக்குதலில் கடைசிக் கட்டங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச நிறுவனங்களினாலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு பலர் அங்கங்களை இழந்தும் பாரதூரமான காயங்களிற்குள்ளாகியும் மன உளைச்சல்களிற்குள்ளாகியும் துன்பப்படுகின்றனர். இதைவிட வன்னியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடு வாசல் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தும் பின்னர் எல்லா முறைமைகளையும் மீறி தடுப்பு முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுமிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் இந்த முகாம்களிலே கைதிகளாக வாழ்கின்றனர்.

பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வேறாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட மற்றவர்களை எந்தவித நிவாரணமோ வாழ்வாதாரமோ இன்றி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர். தங்களுடைய என்று சொல்லிப் போக வீடொன்று கூட அவர்களுக்கு கிடையாது. இந்த மக்களுடைய திட்டவட்ட மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் எமது தாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதும் இந்த மணித்துளியின் உடனடித் தேவையாக உள்ளது. தமிழ் மக்களுடைய வணக்கஸ்தலங்கள் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் பல அசுத்தப்பட்டு இடித்தழிக்கப்பட்டிருகின்றன. அரசாங்கத்தின் மிக உயர் நிலைகளுக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எமது மக்கள் சுரண்டப்பட்டு எமது நிலம் சூறையாடப்படுகின்றது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் குறிப்பாக யாழ். குடாநாட்டிலும் சம்பூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கிலும் ஏராளமான நிலப்பரப்பு பலவருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தப்பட்டு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகத் தமிழ் மக்களுக்கு தங்களுக்குச் சொந்தமான பிரத்தியேக வீடுகளில் வாழ்வதற்கும் தங்களது சொந்தக் காணிகளில் பயிர் செய்வதற்கும் மீன்பிடித்தல் மற்றும் வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. தொழில்துறை சுற்றுலாத்துறை வட கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களின் குடிசனப் பரம்பலை மாற்றி சிங்களக் குடியேற்றங்களாக ஆக்குவதற்கு பல முன்னெடுப்புக்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கரையோரப் பகுதியில் மீன்பிடித்தலுக்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. பனை வள அபிவிருத்திச் சபை அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருப்பதன் காரணமாக தங்கள் வாழ்வுக்கு பனை வளத்தில் தங்கியிருக்கின்ற மக்கள் மிக மோசமாகச் சுரண்டப்படுகிறார்கள். தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டு அவர்களுடைய சமத்துவத்திற்கான உரிமை பல வழிகளில் மீறப்படுகின்றது. பல வருடங்களிற்கு முன்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் குற்றச்சாட்டின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எமது மக்களில் பெரும்பாலானோரது வாழ்க்கை நிலைகள் பரிதாபமானதாகக் காணப்படுகின்றது.

2010 ஜனாதிபதித் தேர்தல்

ஜனவரி ஜனாதிபதித் தேர்தலிலே எமது மக்களுடைய அவல நிலையைக் குறித்தும் எமது அரசியல் உரிமைகளைப் பரிசீலிப்பதிலும் அரசாங்கத்திற்கு இருந்த அக்கறையற்ற போக்கை எமது மக்களுக்கு விளக்கிச் சொன்னோம். சர்வகட்சி பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்ட பொழுது கூட வடக்கு கிழக்கில் இருந்து தெரிவான 23 தமிழ் பிரதிநிதிகளில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினரால் கொடுக்கப்பட்ட சிபார்சுகளும் கூட கருத்திலெடுக்கப்படவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவும் ஏனைய பல காரணங்களுக்காகவும் ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருப்பதற்கு இரண்டாவது தவணைக்காக கேட்ட மக்களாணையை நிராகரிக்கும் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும் சந்தேகமற்ற முறையிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு புதிய மக்காளணைக்கான ஜனாதிபதியின் கோரிக்கைக்கெதிராக மிகப் பாரியளவில் தமிழ் மக்கள் வாக்களித்தன் மூலம் முதலாவது தவணையின் பொழுது ஜனாதிபதியின் ஆட்சிமுறையை தாங்கள் விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டியிருக்கின்றார்கள். அதைவிட முக்கியமானதாக தமக்கு வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது.

கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மிக அடிப்படையானவை:

• தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

• தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.

• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

• அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

• அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

• புதிய தொழிற்துறைகளை உருவாக்கவும் மற்றும் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், வடக்கு – கிழக்கில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

• பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு அவர்களுக்குரித்தான அவசியமான துறைகளில் உயர் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தல்.

எமது மக்களின் உடனடித் தேவைகள்

எமது மக்களிற்கு நிலைத்து நிற்கக்கூடியதும் சமாதானமுமான வாழ்வொன்றிற்காக செயற்படுகின்ற அதேவேளையில் அவர்களுடைய உடனடியானதும், தற்போது நிலவக் கூடியதுமான முக்கிய பிரச்சினைகளை கையாள்வதிலும் விரைந்து செயற்படுவோம். இப்பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமும், இராணுவ தளபாடங்களும் அகற்றப்படுதல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மூலமும் 1983 ம் ஆண்டிற்கு முந்திய நிலைக்கு எமது பிரதேசத்தை இட்டுச் செல்லக் கூடிய அர்த்தமுள்ள இராணுவ விலகல் அவசியமானது.

• போரினால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவாக தமக்குரிய சொந்த இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டும், வாழ்வாதாரங்கள் மீளமைக்கப்பட்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படுகின்றதுமான வகையில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

• இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் உடல் ஊனங்களுக்கும், சொத்திழப்புக்களுக்கும் போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

• தேசிய நல்லிணக்கத்திற்கான முதற்படியாக எந்தவித குற்றமும் சுமத்தப்படாத, தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏனையவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட வேண்டும்.

• கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை விட்டு வெளியேறிவர்கள் மீண்டும் தமது இல்லங்களுக்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென்பதுடன், அதற்கேற்ப சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.

• புலம் பெயர்ந்த தமிழ் மக்களதும், சர்வதேச சமூகத்தினதும் செயலூக்கமிக்க பங்களிப்பின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் முழுமையான மீள் குடியேற்றமும், புனர்வாழ்வு, மற்றும் அபிவிருத்தி ஆகியன முன்னெடுக்கப்படும்.

• அகதிகள் என்ற நிலை அடியோடு நீக்கப்பட வேண்டும் - அதுவரை அகதிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் இன்றைய உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

• சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமூகங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் மற்றும் தொழில் துறையினை மேம்படுத்தவும் உத்தரவாதப்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டு ஆணையம் ஒன்றின் அவசியத்தை வற்புறுத்தி நிற்கின்றோம்.

• கரையோர மக்கள், மீனவ சமூகம் சுதந்திரமாகத் தங்கள் தொழிலை நடத்துவதற்கும், தங்கள் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும், அவர்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுப்போம்.

• அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படவும், தனியார் துறை ஊழியர், அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.

• நம் சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை பேணவும், போர் காரணமாக அநாதரவாக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்கள், முதியோர், சிறுவர் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வுத் திட்டங்கள் உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

• வேலையற்ற பட்டதாரிகள், மற்றும் வேலையற்றோர் தொழில் வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

2010 பொதுத் தேர்தலில் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகள்

ஒன்றுபட்ட நாட்டிற்குள் தமது தலைவிதிகளைத் தாமே தீர்மானிக்கக் கூடிய தமிழ் மக்களின் மறுக்க முடியாததும், பிரிக்க முடியாததுமான உரிமைகளை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளன. 1956ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் இறைமைக்கான கோரிக்கைகள் அனைத்தும் நியாயப்படுத்த முடியாத வகையில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

30 ஆண்டுகால அஹிம்சைவழிப் போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான அடக்குமுறை மூலம் நசுக்க முற்பட்டமையே ஓர் தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அடுத்து வந்த முப்பதாண்டுகளில் ஆயுத ரீதியான எதிர்ப்பை அடக்குதல் என்ற பேரில் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மோசமாய் பறிக்கப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் மீது விமானக்குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தப்பட்டும், சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டும் மேலும் மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன் அநேகர் கொல்லப்பட்டும் ஊனமுற்றும் சொத்துக்களை இழந்துமுள்ளனர். மிகக் கடுமையான மனித உரிமை வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் மூலம் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட போதும் அது ஆக்கபூர்வமான தீர்வொன்றிற்கு இட்டுச் செல்லாமல் முடிவிற்கு வந்தது.
அரசகாணி சம்பந்தமாகவும் மற்றைய வளங்கள் சம்பந்தமாகவும், குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது அப்பட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்துவிட்டதாகக் கூறுகின்றது. வியன்னா பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது என்ற வகையில் இந்திய இலங்கை உடன்பாட்டை இலங்கை மீற முடியாது. அரசாங்கத்தின் நீதித்துறையானது பாரபட்சமானதும், அதிகாரத்துப் போக்குடையதுமான பல்வேறு நடவடிக்கைகளின் அனுபவங்கள் தமிழ் மக்கள் அரசின் நீதித்துறையையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இந்த நாட்டின் நிர்வாகத் துறையின் கொள்கைகள் தமிழ் மக்களை இந் நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகையில் பெருமளவு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இன்றிருக்கக்கூடிய ஆட்சி முறை ஒன்றில் மத்திய சட்டவாக்கமைப்பு பெரும்பான்மைத்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது மிகத் தெளிவான ஒரு இன ஒழிப்புத் திட்டமே.

ஆனால் எவரும் இதுவரை இதனைத் தடுத்து நிறுத்தவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் இது தொடர்பாக எழுப்பிய கரிசனைகளை இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகள் எவையும் தமக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ முடியாதென நாகரீகமடைந்த தேசங்களைக் கொண்ட சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாகவே பிரகடனம் செய்கிறது. இப்போக்கு தொடருமானால் திட்டமிட்டபடி அரசின் இன ஒழிப்பு வெற்றி பெறும். இத் தீவில் இருந்து தமிழர் என்ற மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள்.

இப்பொதுத் தேர்தல் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்கக் கூடிய வகையில் ஆட்சி முறையை மீளக் கட்டியமைப்பதற்கான பேச்சுவார்த்தையை எம்முடன் நடாத்த வைப்பது முதலாவது கட்டம். கடந்த காலத்தைப் போல அரசாங்கம் எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை தொடர்ந்து புறக்கணிக்குமானால் இவ்விடயத்தை நாம் நேரடியாக இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொண்டு செல்வோம். தமிழ் மக்களுக்கெதிரான இவ் இன ஒழிப்புத் திட்டம் தொடர்பாக உரிய பார்வையைச் செலுத்தி பொருத்தமானதும் தாக்கமானதுமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத் தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக இருக்கும்.

தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகளை சந்திப்பதற்கும் எமது அரசியல் இலக்கை அடைவதற்கும், தமிழ் மக்களுக்கிடையிலான ஐக்கியம் மிகவும் முக்கியமானதென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நான்கு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த போதும் கடந்த பாராளுமன்றத்தில் அது பிளவு படவோ அல்லது ஓர் உறுப்பினரேனும் வெளியேறாத ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். எனினும் அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் செல்வாக்கைப் பலவீனப்படுத்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பெருமளவிலான சுயேட்சைக் குழுக்களை ஒழுங்கு செய்ததனூடாக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய அவசியத் தேவை எமது ஒற்றுமையை பாதுகாத்தலும் வெளிப்படுத்தலுமாகும். எமது மக்களையும் அவர்களின் நிலங்களையும் அழிப்பதற்கு அங்குலம் அங்குலமாக அரசு முன்னேறும் வேகத்தை நிறுத்துவதற்கான முதற்படி இதுவேயாகும். எமக்கிடையேயான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதுடன் இக் குறிக்கோளை நோக்கி தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனர். இவ்வொற்றுமையை மேலும் உறுதியானதாக்கவும் நிலை நாட்டவும் நாம் ஈடுபாட்டுடன் செயற்படுவோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் திட்டமிட்ட வகையில் விரைவில் மீள்குடியேற்றுவதிலும் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

கௌரவமான மனிதர்கள் என்ற எமது தனித்துவமான அடையாளத்தினைப் பேணும் வகையில் எமது மக்களின் வாழ்வு மீள் கட்டியெழுப்பப்படும். நாங்கள் தனி மக்கள் என்ற வகையில் எமது உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே இத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் வாக்களிப்பதன் மூலம் துணிச்சலுடன் எழுந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களைக் கோருகின்றோம்.

இரா சம்பந்தன் - தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மாவை. சேனாதிராசா - பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுக்கட்சி.
பிரசன்னா இந்திரகுமார் - பொதுச் செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சார அலுவலகங்களை அமைப்பது முழுமையான சட்டவிரோத நடவடிக்கையென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. ...மேலும் வாசிக்க

தேர்தல் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சார அலுவலகங்களை அமைப்பது முழுமையான சட்டவிரோத நடவடிக்கையென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தமது பெயரில் பல தேர்தல் பிரச்சார அலுவலகங்களை நடாத்திச் செல்வதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

இதுவே தேர்தல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதற்கு பிரதான காரணம் என தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒரு கட்சிக்கோ அல்லது சுயேச்சைக்குழுவுக்கோ தேர்தல் நிலைய அதிகாரத்திற்குட்பட்ட பகுதிக்குள் ஒரு அலுவலகம் மட்டுமே நிறுவ முடியும்.

அவர்களுக்கு மாவட்ட மத்திய அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களை திரிவுபடுத்தும் வகையில் சகல வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார அலுவலகங்களை அமைப்பது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

Google Buzz

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தருமபுரி மாவட்டம்.. பென்னாகரம் மற்ற இடைத்தேர்தல்களில் பற்றிய பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது. ...மேலும் வாசிக்க

தருமபுரி மாவட்டம்.. பென்னாகரம் மற்ற இடைத்தேர்தல்களில் பற்றிய பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது.
தினமும் பாமகவின் நிறுவனர் இராமதாஸ் அறிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்கிறார்.

பணம்தான் இத்தேர்தலில் முக்கியமாக இருக்கிறது எனவும். இப்படியே போனால் தொகுதிகளை எலம்விட்டுவிடலாம் என்று கூறியுள்ளார். பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகனோ அத்துமீறம்.. போலீஸ் மிரட்டல்... பணம்..அதிகாரம் தொகுதி முழுக்க விளையாடுவதாக நாளாந்தம் கூறிவருகிறார்.
அதிமுகவோ சந்தையில் தொலைந்த குழந்தைப் போல திருதிரு என முழித்துக் கொண்டு இருக்கிறது.
10 கிராமங்களுக்கு ஒரு அமைச்சர்...
அவரின் இலக்கு அக்கிராமத்தில் இருக்கும் வாக்குகளை பெற்றுத்தர என்ன முயற்சி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளவேண்டும். ஆம் அவரின் பதவி வேண்டுமென்றால் செய்துதான் ஆகவேண்டும்.
வந்தவாசித்தொகுதியில் இதுதான்  கைக்கொடுத்த்து ...வென்றது...
திமுகவுவின் பல இலவசத்திட்டங்களின் சாதனைகளுக்கும் பென்னாகரம் பெரும் தலைவலியே.
திமுக தோற்றால் நிலையே வேறு... மக்களின் நம்பிக்கையினை இழந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூற ஆரம்பித்துவிடும்.
மிக பிற்பட்ட மாவட்டமான தருமபுரி பென்னாகரம் வாக்காளர்கள் பெரும்பாலும் வன்னியர்களே. பாமக கூட்டு இல்லாமலேயே தனியாக வென்றத் தொகுதி. இவர்களின் மூலதனம் சாதி ஓட்டே.
கைக்கொடுக்குமா?
திமுகவுடன் கூட்டுக்கு தயாராகிவிட்ட பாமவுக்கு இது சங்கடமே. வென்றால்  பேரத்தை உரிமையாக செய்யலாம்.
ஆனால் பாமகவின் அரசியல் நம்பகத்தன்மை மக்களை யோசிக்க வைத்துள்ளது. இவர்கள் எந்தபக்கம் வேண்டுமானாலும் செல்வார்கள் என்று இன்றும் பேசி கிண்டலடிக்கும் நிலையில் தான் மக்கள் உள்ளார்கள்.
போதாதகாலம் பாமவுக்கே..
மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சியோ வழக்கம் போல வரலாற்று போற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
ஆம் இவர்கள் மேடையில் மட்டுமே அதிமுகவுக்கு  வாக்குகளை கேட்பார்களாம்.
திமுகவோ பன்முணை தாக்குதல் தொடுத்தால் தான் வெற்றியை ஈட்டமுடியும்.
வாக்குகளுக்கு கொடுக்கும் கரன்சிகளின் எண்ணிக்கை 500...1000...1500... என்று கூட உயரலாம் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பணம்.. இலவசங்கள்... சாதியம்... அதிகாரம்... அத்துமீறல்..
வழக்கம் போல மக்கள் தோற்க...
இவர்கள் வெல்லப் போகிரார்கள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடும் இந்து ...மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தம்மால் முடியுமான முயற்சிகளை எடுத்துவருகின்றன.

ஆனால் அவர்கள் எல்லோரதும் முயற்சிகள்; விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்பதில் ஒரே புள்ளியில் சந்தித்தன. ஏனெனில் இலங்கையை பூரணமாக கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அங்கு ஒரு ஆட்சி நிலவவேண்டும் அவ்வாட்சியாளர் தமது நலன்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. விடுதலைப்புலிகளின் தனிநாட்டை அங்கீகரித்தால் இலங்கையின் வடகிழக்கு தவிர்ந்த பெரும்பகுதியை சீனாவிடம் இழக்கவேண்டி வரும் என்ற நப்பாசையால் அவை விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமது ஆளுகையை இலங்கையில் ஏற்படுத்த முனைந்தன.

பேரினவாதத்தின் சாணக்கியம்

ஆனால் விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர் அவை எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை மாறாக மகிந்த அரசு தொடர்ந்தும் சீனாவுடனே தனது உறவுகளை வளர்த்து கொண்டது. இதனால் கலக்கமடைந்த இந்தியா தான் பெரிதும் உதவிகளை புரிந்து இலங்கையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்பியது. இதற்கு உதாரணமாக பாரிய முள்ளிவாய்க்கால் மனிதபடுகொலை விவகாரம் ஜ.நா சபைக்கு கொண்டுவரப்பட்டபோது இந்தியா இலங்கைகைக்கு சார்பாக இருந்தமையை குறிப்பிடலாம். மாறாக மகிந்த அரசு இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதாக காட்டிக்கொண்டே தனக்கு தேவையான நகர்வை மேற்கொள்வதால் இந்தியா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்தியாவின் இரட்டை தந்திரம்

இந்நிலையில் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக மகிந்த அரசிற்கு ஒருவழியில் தனது முழுமையான ஆதரவை வழங்கிகொண்டு மறுபுறத்தில் மகிந்த அரசை அச்சுறுத்தும் பாணியிலான அல்லது தங்களுடன் நல்லுறவை பேணாத சமயத்தில் சிக்கல் ஏற்படுத்தப்படும் என்று கூறும் பாணியிலான செயற்பாடுகள் அமைகின்றன. எவ்வாறெனில் முன்னர் இலங்கையை அச்சுறுத்த தமிழ் இயக்கங்களை வளர்த்தமையை போன்று தற்போது தமிழர்களின் பிரதிநிதிகளை தமது கட்டுபாட்டில் வைத்திருந்து அவர்கள் மூலம் தனக்கு தேவையான சமயத்தில் அச்சுறுத்தும்; செயற்பாடுகள் முனைப்பாக ஆரம்பிக்கப்படுகின்றன.

முன்னர் பிள்ளையானை இந்தியா இவ்வாறு நடத்தமுயன்றபோது மகிந்த அரசு அதனை இலகுவாக வெற்றிகொள்ள முடிந்தமையை கூறலாம். தற்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பை இவ்வாறு தனது கைக்குள் எடுப்பதில் பெருவெற்றியடைந்துள்ளது. ஏனெனில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் நிழலில் உருவாக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்று கூறத்தக்கவாறு இருந்தபோது எவ்வளவோ கடினமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்திய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கமுடியாமல் போனமையும் பின்னர் முள்ளிவாய்க்கால் சமருக்கு சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எந்த உறவும் இல்லை என பகிரங்கமாக அறவித்தமை அச்செய்தி சண்டே ரைம்ஸில் வந்தமையும் முள்ளிவாய்க்கால் சமருக்கு பின்னர் இதுவரை இலங்கையில் சீனப்பிரசன்னம் பற்றி கதைக்காதவர் பின்னர் நடந்த பாராளுமன்ற அமர்வில் இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி காரசாரமாக விவாதித்திருந்தமையும் குறிப்பிடலாம்.

அதன் பின்னர் கூட்டமைப்பினர் அடிக்கடி இந்தியாவில் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். மேலும் தமிழீழப்பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டிராத தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகத்தை அமைப்பதில் ஆர்வத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமது கட்டுபாட்டில் இருக்கத்தக்க ஒரு அணியை மகிந்தவுக்கு சவாலாக வைத்துக் கொண்டு தனது காரியங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் குறிக்கோளாக இருந்துவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மகிந்தவுக்கு தனது நிபுணர்கள் குழு போன்றவற்றை வழங்கி தனது மறைமுக ஆதரவை வழங்கிய இந்தியாஇ அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சரத் பொன்சேகா பக்கம் திருப்பி மகிந்தவுக்கு சவால் விட்டதோடு சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை இதன் மூலம் எடுத்தது.

தற்போது இந்தியா மகிந்தவுடன் நல்லுறவை பேண பரிதாபத்திற்குரிய கூட்டமைப்பு இனி எதுவும் பெறவேண்டுமாயின் மகிந்தவின் காலில் விழவேண்டிய நிலையுள்ளது. கூட்டமைப்பின் தொடக்க காலத்தில் இரு தேசிய இனம் என்ற கொள்கையை முன்வைத்து கிளம்பியவர்கள் அவ்வாறே சம்பந்தனை தேர்தலில் நிறுத்தியோ அல்லது பேரினவாதிகள் இருவருக்கும் வாக்களிக்காமல் விட்டோ தமிழ் மக்களின் பிரச்சினையை யார் வந்தாலும் முன்னகர்த்தியிருக்க வேண்டியவர்கள் துரதிர்ஷ்ட வசமாக பேரினவாதிகள் ஒருவரிற்கு வாக்களித்து தமிழ் மக்களை மேலும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டுள்ளனர்.

மேற்குலகின் நிலைப்பாடு

இலங்கை நாட்டை முழுமையாக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகம் பின்னர் பொன்சேகாவை ஆட்சியமர்த்தியாவது தமது செல்வாக்கை செலுத்த தன்னாலான முயற்சிகளை எடுத்தது. ஆனால் இவையெல்லாம் பொய்யாகிப்போன நிலையில் மகிந்தவை அசைக்க தற்போது தமிழர் பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவற்றை கையில் எடுத்துள்ளது. இவற்றின் மூலம் எப்படியாவது தமது இருப்பை உறுதிப்படுத்த முனைகின்றன. இதற்கு உதாரணமாக புலம்பெயர் தமிழர்களின் வட்டுகோட்டை தனிநாட்டு தீர்மானத்தின் மீதான தேர்தல் நாடுகடந்த அரசு ஆகியவற்றை மறைமுகமாக அனுசரிப்பதோடு இவற்றிற்கு எவ்விதமான இடையூறும் கொடுப்பதாக தெரியவில்லை. இறுதியாக லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் மேற்குலகின் முக்கிய பிரதிநிதிகள் பங்குபற்றியமையை குறிப்பிடலாம்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்

தமிழீழ மக்கள் மிகப்பெரிய பேரவலத்திற்கு உட்பட்டு ஒரு வருடம் கூட கழிந்திராத நிலையில் அவர்களுடைய வாழ்க்கை சுமூகமான நிலைக்கு வராத நிலையில் அவர்கள் மீது இத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதற்கெதிரான செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக இவர்களும் ஊடகங்களும் இதனை கணக்கெடுத்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல்களம்

தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை போன்று அல்லாது மக்கள் தாம் எப்படியும் வாக்களிக் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்hர்கள். ஏனெனில் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்காவிடின் எப்படியும் விரும்பத்தகாதவர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக வந்துவிடுவார்கள்.

தமிழ்மக்களின் தெரிவு

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தற்போது தாயகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப அரசியல் ரீதியாக தமிழ் மக்களை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்களுக்கு வலுவான விலைபோகாத பிரதிநிதிகள் ஒரணியில் தேவை. ஆனால் மகிந்த அரசு தமிழ் மக்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சிதறடிப்பதற்கு ஏராளம் சுயேட்சை குழுக்களை களம் இறக்கியுள்ளது. மறுபுறத்தில் இந்தியா தனக்கு கீழ் சேவை செய்யக்கூடிய தமிழ் மக்களின் பலமாக கூட்டமைப்பை நாடி நிற்கின்றது. இதில் பெரிதும் துரதிஷ்டம் என்னவென்றால் இந்நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சில ஊடகங்களும் கட்டுபட்டு நிற்பது தான்.

இப்பாரிய சிக்கலுக்குள் மாட்டியுள்ள தமிழ் மக்கள் முடிவெடுப்பது என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் தமது மரபுஇ தனிப்பட்ட பழக்கமஇ; பொதுவான கருத்து என்பவற்றை மீறி வாக்களிப்பது என்பது அரசியல் ஆர்வமுள்ளவர்களை தவிர்ந்த சாதாரண பொது மக்களுக்கு கடினமானதாகவே காணப்படும்.

விழிப்புணர்வு தேவை

எம்மவர்களில் விடயமறிந்த கற்றறிந்த பெரும்பான்மையானோர் அரசியல் விடயங்களை கதைப்பது விரும்பத்தகாத ஒன்றாகவே கருதுகின்றனர். ஆரம்ப காலத்தில் தமிழர்களுக்காக அரசியல் செய்தவர்களின் செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு காலமும் எங்களுக்கு விலைபோகாத தலைமை இருந்தபோது நாம் எங்களிடமிருந்த பொறுப்புக்களை தட்டிக்கழித்தவாறு தற்போதும் இருக்கமுடியாது. ஏனெனில் இக்காலப்பகுதியிலேயே மாபெரும் தியாகங்களுக்கு பின் பொறுப்பானது எல்லோர் தோள்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழரின் கடமை

புலம்பெயர் சமூகத்தின் கட்டமைப்புக்கள் தனிநாடு கோரி பயணிக்க தாயகத்தில் அரசியல் வேறு வழியில் பயணிப்பது பெர்ரும் ஆபத்தான விடயம் மட்டுமல்லாது தாயகத்தில் வலுவான கட்டமைப்புக்கள் இல்லாதவிடத்து புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்காலத்தில் வெறும் மாயத்தோற்ற நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.நாடுகடந்த அரசாங்கம் வட்டுகோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பவற்றின் மூலம் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர் சமூகம் தாயகத்திலுள்ள நிலைமையினை புரிந்து கொண்டு இங்குள்ள தமது உறவுகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை தமது அன்றாட தொடர்புகளினூடாக வழங்குவது இந்நிலையில் முக்கியமாகின்றது

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ...மேலும் வாசிக்க

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தம்மால் முடியுமான முயற்சிகளை எடுத்துவருகின்றன.

ஆனால் அவர்கள் எல்லோரதும் முயற்சிகள்; விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்பதில் ஒரே புள்ளியில் சந்தித்தன. ஏனெனில் இலங்கையை பூரணமாக கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அங்கு ஒரு ஆட்சி நிலவவேண்டும் அவ்வாட்சியாளர் தமது நலன்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. விடுதலைப்புலிகளின் தனிநாட்டை அங்கீகரித்தால் இலங்கையின் வடகிழக்கு தவிர்ந்த பெரும்பகுதியை சீனாவிடம் இழக்கவேண்டி வரும் என்ற நப்பாசையால் அவை விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமது ஆளுகையை இலங்கையில் ஏற்படுத்த முனைந்தன.

பேரினவாதத்தின் சாணக்கியம்

ஆனால் விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர் அவை எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை மாறாக மகிந்த அரசு தொடர்ந்தும் சீனாவுடனே தனது உறவுகளை வளர்த்து கொண்டது. இதனால் கலக்கமடைந்த இந்தியா தான் பெரிதும் உதவிகளை புரிந்து இலங்கையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்பியது. இதற்கு உதாரணமாக பாரிய முள்ளிவாய்க்கால் மனிதபடுகொலை விவகாரம் ஜ.நா சபைக்கு கொண்டுவரப்பட்டபோது இந்தியா இலங்கைகைக்கு சார்பாக இருந்தமையை குறிப்பிடலாம். மாறாக மகிந்த அரசு இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதாக காட்டிக்கொண்டே தனக்கு தேவையான நகர்வை மேற்கொள்வதால் இந்தியா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்தியாவின் இரட்டை தந்திரம்

இந்நிலையில் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக மகிந்த அரசிற்கு ஒருவழியில் தனது முழுமையான ஆதரவை வழங்கிகொண்டு மறுபுறத்தில் மகிந்த அரசை அச்சுறுத்தும் பாணியிலான அல்லது தங்களுடன் நல்லுறவை பேணாத சமயத்தில் சிக்கல் ஏற்படுத்தப்படும் என்று கூறும் பாணியிலான செயற்பாடுகள் அமைகின்றன. எவ்வாறெனில் முன்னர் இலங்கையை அச்சுறுத்த தமிழ் இயக்கங்களை வளர்த்தமையை போன்று தற்போது தமிழர்களின் பிரதிநிதிகளை தமது கட்டுபாட்டில் வைத்திருந்து அவர்கள் மூலம் தனக்கு தேவையான சமயத்தில் அச்சுறுத்தும்; செயற்பாடுகள் முனைப்பாக ஆரம்பிக்கப்படுகின்றன.

முன்னர் பிள்ளையானை இந்தியா இவ்வாறு நடத்தமுயன்றபோது மகிந்த அரசு அதனை இலகுவாக வெற்றிகொள்ள முடிந்தமையை கூறலாம். தற்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பை இவ்வாறு தனது கைக்குள் எடுப்பதில் பெருவெற்றியடைந்துள்ளது. ஏனெனில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் நிழலில் உருவாக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்று கூறத்தக்கவாறு இருந்தபோது எவ்வளவோ கடினமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்திய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கமுடியாமல் போனமையும் பின்னர் முள்ளிவாய்க்கால் சமருக்கு சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எந்த உறவும் இல்லை என பகிரங்கமாக அறவித்தமை அச்செய்தி சண்டே ரைம்ஸில் வந்தமையும் முள்ளிவாய்க்கால் சமருக்கு பின்னர் இதுவரை இலங்கையில் சீனப்பிரசன்னம் பற்றி கதைக்காதவர் பின்னர் நடந்த பாராளுமன்ற அமர்வில் இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி காரசாரமாக விவாதித்திருந்தமையும் குறிப்பிடலாம்.

அதன் பின்னர் கூட்டமைப்பினர் அடிக்கடி இந்தியாவில் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். மேலும் தமிழீழப்பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டிராத தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகத்தை அமைப்பதில் ஆர்வத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமது கட்டுபாட்டில் இருக்கத்தக்க ஒரு அணியை மகிந்தவுக்கு சவாலாக வைத்துக் கொண்டு தனது காரியங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் குறிக்கோளாக இருந்துவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மகிந்தவுக்கு தனது நிபுணர்கள் குழு போன்றவற்றை வழங்கி தனது மறைமுக ஆதரவை வழங்கிய இந்தியாஇ அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சரத் பொன்சேகா பக்கம் திருப்பி மகிந்தவுக்கு சவால் விட்டதோடு சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை இதன் மூலம் எடுத்தது.

தற்போது இந்தியா மகிந்தவுடன் நல்லுறவை பேண பரிதாபத்திற்குரிய கூட்டமைப்பு இனி எதுவும் பெறவேண்டுமாயின் மகிந்தவின் காலில் விழவேண்டிய நிலையுள்ளது. கூட்டமைப்பின் தொடக்க காலத்தில் இரு தேசிய இனம் என்ற கொள்கையை முன்வைத்து கிளம்பியவர்கள் அவ்வாறே சம்பந்தனை தேர்தலில் நிறுத்தியோ அல்லது பேரினவாதிகள் இருவருக்கும் வாக்களிக்காமல் விட்டோ தமிழ் மக்களின் பிரச்சினையை யார் வந்தாலும் முன்னகர்த்தியிருக்க வேண்டியவர்கள் துரதிர்ஷ்ட வசமாக பேரினவாதிகள் ஒருவரிற்கு வாக்களித்து தமிழ் மக்களை மேலும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டுள்ளனர்.

மேற்குலகின் நிலைப்பாடு

இலங்கை நாட்டை முழுமையாக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகம் பின்னர் பொன்சேகாவை ஆட்சியமர்த்தியாவது தமது செல்வாக்கை செலுத்த தன்னாலான முயற்சிகளை எடுத்தது. ஆனால் இவையெல்லாம் பொய்யாகிப்போன நிலையில் மகிந்தவை அசைக்க தற்போது தமிழர் பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவற்றை கையில் எடுத்துள்ளது. இவற்றின் மூலம் எப்படியாவது தமது இருப்பை உறுதிப்படுத்த முனைகின்றன. இதற்கு உதாரணமாக புலம்பெயர் தமிழர்களின் வட்டுகோட்டை தனிநாட்டு தீர்மானத்தின் மீதான தேர்தல் நாடுகடந்த அரசு ஆகியவற்றை மறைமுகமாக அனுசரிப்பதோடு இவற்றிற்கு எவ்விதமான இடையூறும் கொடுப்பதாக தெரியவில்லை. இறுதியாக லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் மேற்குலகின் முக்கிய பிரதிநிதிகள் பங்குபற்றியமையை குறிப்பிடலாம்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்

தமிழீழ மக்கள் மிகப்பெரிய பேரவலத்திற்கு உட்பட்டு ஒரு வருடம் கூட கழிந்திராத நிலையில் அவர்களுடைய வாழ்க்கை சுமூகமான நிலைக்கு வராத நிலையில் அவர்கள் மீது இத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதற்கெதிரான செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக இவர்களும் ஊடகங்களும் இதனை கணக்கெடுத்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல்களம்

தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை போன்று அல்லாது மக்கள் தாம் எப்படியும் வாக்களிக் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்hர்கள். ஏனெனில் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்காவிடின் எப்படியும் விரும்பத்தகாதவர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக வந்துவிடுவார்கள்.

தமிழ்மக்களின் தெரிவு
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தற்போது தாயகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப அரசியல் ரீதியாக தமிழ் மக்களை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்களுக்கு வலுவான விலைபோகாத பிரதிநிதிகள் ஒரணியில் தேவை. ஆனால் மகிந்த அரசு தமிழ் மக்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சிதறடிப்பதற்கு ஏராளம் சுயேட்சை குழுக்களை களம் இறக்கியுள்ளது. மறுபுறத்தில் இந்தியா தனக்கு கீழ் சேவை செய்யக்கூடிய தமிழ் மக்களின் பலமாக கூட்டமைப்பை நாடி நிற்கின்றது. இதில் பெரிதும் துரதிஷ்டம் என்னவென்றால் இந்நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சில ஊடகங்களும் கட்டுபட்டு நிற்பது தான்.

இப்பாரிய சிக்கலுக்குள் மாட்டியுள்ள தமிழ் மக்கள் முடிவெடுப்பது என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் தமது மரபுஇ தனிப்பட்ட பழக்கமஇ; பொதுவான கருத்து என்பவற்றை மீறி வாக்களிப்பது என்பது அரசியல் ஆர்வமுள்ளவர்களை தவிர்ந்த சாதாரண பொது மக்களுக்கு கடினமானதாகவே காணப்படும்.

விழிப்புணர்வு தேவை

எம்மவர்களில் விடயமறிந்த கற்றறிந்த பெரும்பான்மையானோர் அரசியல் விடயங்களை கதைப்பது விரும்பத்தகாத ஒன்றாகவே கருதுகின்றனர். ஆரம்ப காலத்தில் தமிழர்களுக்காக அரசியல் செய்தவர்களின் செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு காலமும் எங்களுக்கு விலைபோகாத தலைமை இருந்தபோது நாம் எங்களிடமிருந்த பொறுப்புக்களை தட்டிக்கழித்தவாறு தற்போதும் இருக்கமுடியாது. ஏனெனில் இக்காலப்பகுதியிலேயே மாபெரும் தியாகங்களுக்கு பின் பொறுப்பானது எல்லோர் தோள்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழரின் கடமை

புலம்பெயர் சமூகத்தின் கட்டமைப்புக்கள் தனிநாடு கோரி பயணிக்க தாயகத்தில் அரசியல் வேறு வழியில் பயணிப்பது பெர்ரும் ஆபத்தான விடயம் மட்டுமல்லாது தாயகத்தில் வலுவான கட்டமைப்புக்கள் இல்லாதவிடத்து புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்காலத்தில் வெறும் மாயத்தோற்ற நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.நாடுகடந்த அரசாங்கம் வட்டுகோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பவற்றின் மூலம் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர் சமூகம் தாயகத்திலுள்ள நிலைமையினை புரிந்து கொண்டு இங்குள்ள தமது உறவுகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை தமது அன்றாட தொடர்புகளினூடாக வழங்குவது இந்நிலையில் முக்கியமாகின்றது.

Google Buzz

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 ...மேலும் வாசிக்க


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

தேர்தல் விஞ்ஞாபனம் - 2010

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம்

பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின் வருகைக்கு முன்னதாக இலங்கைத் தீவிலே மூன்று இராஜதானிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வடக்கிலே தமிழருக்குச் சொந்தமாக இருந்தது. மத்திய மலையகத்திலே இருந்த கண்டி இராச்சியம் தான் கடைசியானதாக 1815ல் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது. 1833ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக இந்த மூன்று இராஜதானிகளையும் பிரித்தானியர் ஒன்றிணைத்தனர். அன்றிலிருந்து இலங்கை ஒரே நிலப்பரப்பாக ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு காலனித்துவ ஆளுகையிலிருந்து சுதந்திரம் பெற்ற வேளையில் சாதாரண பெரும்பான்மைத்துவம் கொண்ட ஒற்றை ஆட்சித் தன்மையான அரசியல் அமைப்பு ஒன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பின் 29(2) உறுப்புரையில் குறித்ததொரு சமூகத்தையோ சமயத்தையோ பாதிக்கின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற சட்டமோ அல்லது குறித்த ஒரு சமூகத்துக்கோ சமயத்துக்கோ மற்றவர்களுக்கு இல்லாத சலுகையை கொடுக்கும் சட்டத்தையோ நிறைவேற்றக்கூடாதென்ற தடைவிதிக்கப்பட்டது.

சமஷ்டி அரசியல் அமைப்பிற்கான கோரிக்கை

1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமானோருடைய குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியாக மாற்றப்பட்டது. 29(2) உறுப்புரை இப்படியானவற்றை தடுப்பதற்காக இயற்றப்பட்டிருந்தாலும் கூட இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அதுவரை காலமும் இருந்த அரசாங்க கொள்கைக்கு மாறான செயலுமாகும். இந்த கால கட்டத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு பிரதேசங்களில் அந்த பிரதேசங்களில் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் முழு மூச்சோடு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களவரிடம் இருந்து பிறிதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை 1951 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்தியம்பியது. இந்த சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் ஒரு சமஷ்டி முறையான ஆட்சியை தமிழரசுக்கட்சி வலியுறுத்தியது. ஆரம்பத்தில் வெளிநாட்டுப் படையெடுப்புக்களினாலும் பின்னர் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத பெரும்பான்மையினரின் மேலாதிக்க வாதத்தை உறுதி செய்யும் அரச முறை ஒன்றின் மூலம் தமிழ் மக்கள் இழந்து விட்ட சுயநிர்ணய உரிமையை திரும்பவும் வென்றெடுப்பதற்காக 1950 களிலிருந்து 1960 களின் இறுதிவரை தமிழ் அரசுக்கட்சி பல அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது.

பண்டா – செல்வா ஒப்பந்தம்.

அரச கரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்காவிற்கும் தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையில் 1957 ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அரச காணிகளுக்கு மேலான தனி அதிகாரத்தையும் மற்ற அரச அதிகாரங்களையும் பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்தது. ஆனால் பெரும்பான்மை சமூகத்தினர் இதனை எதிர்க்கிறார்கள் என்று காரணம் காட்டி பண்டாரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை.

டட்லி – செல்வா ஒப்பந்தம்.

பின்னர் 1960 ம் ஆண்டில் வடக்கு கிழக்கு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடை செய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் பிரதமர் டட்லி சேனநாயக்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965 ம் ஆண்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது.

அரச குடியேற்றங்கள்

வடக்கு கிழக்கை தங்களுக்கு பாரம்பரிய தாயகமாகவும் அதிலே தமது சுயநிர்ணய உரிமையை உடையதாகவும் கருதுகின்ற எமது மக்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை பாதிக்கும் வகையிலான அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் பெரிதும் பாதிப்படைந்தனர். 1940 களுக்கும் 1980 களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் அரச காணி பகிர்ந்தளிக்கின்ற கொள்கையினாலும் குடிசனப் பரம்பல் வீதம் பாரியளவில் மாற்றம் அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது கிழக்கு மாகாணத்தில் 9 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 1981ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின்படி 25 வீதமாக உயர்ந்திருந்தது. அதே சமயம் 1947ற்கும் 1981ற்கும் இடைப்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகை 238மூ ஆக உயர்ந்த வேளையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சிங்கள மக்களின் சனத்தொகை 883மூ ஆக அதிகரித்தது. வடக்கு கிழக்கின் குடிசனப்பரம்பலை இவ்விதமாக மாற்றும் அரசின் நிகழ்ச்சி நிரல் முழுத் தீவிரமாக இன்று வரை நடைபெற்று வருகின்றது.

கடந்த 60 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசன திட்டங்கள் தவிர வேறு எந்தவிதமான முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலப்பகுதியில் எமது மக்களும் எமது நிலமும் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டன.

குடியரசு அரசியலமைப்பு உருவாகத்தில் தமிழ் மக்கள் பங்குபற்றாமை

1970 ம் ஆண்டு இலங்கைக்கு இலங்கை மக்களே உருவாக்குகின்ற அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதற்காக அரசியல் யாப்பு நிர்ணயசபை ஒன்று கூட்டப்பட்டது. இதிலே தமிழரசுக் கட்சியும் ஆரம்பத்தில் பங்குபற்றி சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது. ஆனால் அந்த பிரேரணைகள் யாவும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த அரசியல் யாப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர். அதைப் போலவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கும் தமிழ் மக்கள் தமது ஒப்புதலை வழங்கவில்லை. முதலாம் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் ஒற்றையாட்சி முறையை உறுதிப்படுத்தி சிங்கள மொழிக்கு மட்டும் அரச கரும மொழி என்ற அந்தஸ்த்தையும் பௌத்த மதத்திற்கே முதலிடம் என்ற அந்தஸ்த்தையும் கொடுத்தன. சோல்பரி அரசியல் யாப்பில் 29(2) இல் சிறுபான்மை மதங்களுக்கும் மக்களுக்கும் எதிராக சட்டம் இயற்றக்கூடாது என்ற தடையையும் இந்த அரசியல் யாப்பு நீக்கியது. ஆகவே 1972ஆம் 1978ஆம் அரசியல் யாப்புக்கள் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டதாகும்.

தரப்படுத்தல்

பல்கலைக்கழக அனுமதிகளைத் தரப்படுத்தும் திட்டமொன்று அறிமுகப்படுத் தப்பட்டதன் மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாமலும் அவர்களை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறவும் வழிவகுக்கப்பட்டது. இது தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுத்து அவர்களுடைய விரக்தியை அதிகரித்தது. 1970 ம் ஆண்டுகளில் இதற்கெதிராக அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட 40 ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி சில வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்

தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகளுக்கும் மற்ற அநீதிகளுக்கும் மேலாக 1956, 1958, 1961, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பங்களில் நாட்டின் மற்றப் பாகங்களில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்கம் கப்பல்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பியதன் மூலம் இந்த இரு மாகாணங்களும் எமது பாரம்பரிய தாயகம் என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கையின் விளைவாக அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் தமிழ் மக்கள் இழந்துவிட்ட இறையாண்மையை மீண்டும் வென்றெடுப்பதற்காகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

இழந்துபோன இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான அழைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து 1976 ம் ஆண்டிலே இழந்த எமது இறையாண்மையை மீளப் பெறவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இது 1956 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணையை அரசு புறக்கணித்ததாலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வந்தமையாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். சிங்கள அரசாங்கங்களுக்கும் தமிழ் தலைவர்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கூட மதிக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறையும் பாராபட்சமும் எந்தவிதமான கட்டுப்பாடின்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இழந்து போன இறையாண்மையை மீளப் பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலிலே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது.

அதிகாரத்தை பகிர்வதற்கான ஒழுங்குமுறைகள்

1983ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குப் பின்னர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று தமிழ் பேசும் மக்களுக்கு கூடிய சுயாட்சி வழங்குகின்றதோர் மாற்று அரசியல் திட்டத்தினூடாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்பட்டன. 1987 ம் ஆண்டு ஏற்படுத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரதிபலனாக வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக ஒன்றிணைத்து ஒரு அரசியல் நிர்வாக அலகு தோற்றுவிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த மாற்றங்கள் வழிவகுத்தன. ஆனால் இந்த நாடு ஒற்றையாட்சி முறையின் கீழேயே தொடர்ந்தும் இருந்தது. அத்தோடு அதிகாரங்களைப் பகிரவந்த 13வது திருத்தச்சட்டம் மத்திக்கான அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்தல் பகிர்ந்தனுபவிக்கும் இறைமை.

1995 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கம் அரசியல் சாசனத்திற்காக ஒரு தொகுதி பிரேரணைகளை அறிவித்தது. இலங்கை ஒரு பல மொழி பல மதங்களைக் கொண்ட பன்மத்துவ சமூகம் என்ற அடிப்படையில் ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் ஒரு அரசியல் வரைவை பிரிக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் 1996 ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. 2000 ம் ஆண்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படை முன் வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை

எரிந்து கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எந்த முன்னேற்றமும் ஏற்படாத அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதோடு பின்னர் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் ஒஸ்லோ உடன்பாடு என்ற பெயரில் இரு தரப்பினரும் சில அடிப்படைக் கொள்கை விதிகளை ஏற்றுக் கொண்டனர்.

அது பின்வருமாறு:

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டெடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.

இராணுவத் தாக்குதல்களும் அதன் பின் விளைவுகளும்

இந்தப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படாமல் அரசாங்க இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போராட்டம் திரும்பவும் ஆரம்பமாகி 2009 மே மாதம் 19ம் திகதியோடு அனைத்து இராணுவ மோதல்களும் முடிவுக்கு வந்தன. இந்த 30 வருட போராட்ட காலம் தமிழ் தாயகத்தையும் தமிழ் மக்களையும் முற்று முழுதாக சூறையாடி ஏதுமற்ற ஏதிலிகளாக்கியுள்ளது. பத்து இலட்சம் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தும், இன்னொரு ஐந்து இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த போராட்ட காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத் தாக்குதலில் கடைசிக் கட்டங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச நிறுவனங்களினாலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு பலர் அங்கங்களை இழந்தும் பாரதூரமான காயங்களிற்குள்ளாகியும் மன உளைச்சல்களிற்குள்ளாகியும் துன்பப்படுகின்றனர். இதைவிட வன்னியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடு வாசல் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தும் பின்னர் எல்லா முறைமைகளையும் மீறி தடுப்பு முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுமிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் இந்த முகாம்களிலே கைதிகளாக வாழ்கின்றனர்.

பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வேறாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட மற்றவர்களை எந்தவித நிவாரணமோ வாழ்வாதாரமோ இன்றி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர். தங்களுடைய என்று சொல்லிப் போக வீடொன்று கூட அவர்களுக்கு கிடையாது. இந்த மக்களுடைய திட்டவட்ட மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் எமது தாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதும் இந்த மணித்துளியின் உடனடித் தேவையாக உள்ளது. தமிழ் மக்களுடைய வணக்கஸ்தலங்கள் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் பல அசுத்தப்பட்டு இடித்தழிக்கப்பட்டிருகின்றன. அரசாங்கத்தின் மிக உயர் நிலைகளுக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எமது மக்கள் சுரண்டப்பட்டு எமது நிலம் சூறையாடப்படுகின்றது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் குறிப்பாக யாழ். குடாநாட்டிலும் சம்பூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கிலும் ஏராளமான நிலப்பரப்பு பலவருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தப்பட்டு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகத் தமிழ் மக்களுக்கு தங்களுக்குச் சொந்தமான பிரத்தியேக வீடுகளில் வாழ்வதற்கும் தங்களது சொந்தக் காணிகளில் பயிர் செய்வதற்கும் மீன்பிடித்தல் மற்றும் வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. தொழில்துறை சுற்றுலாத்துறை வட கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களின் குடிசனப் பரம்பலை மாற்றி சிங்களக் குடியேற்றங்களாக ஆக்குவதற்கு பல முன்னெடுப்புக்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கரையோரப் பகுதியில் மீன்பிடித்தலுக்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. பனை வள அபிவிருத்திச் சபை அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருப்பதன் காரணமாக தங்கள் வாழ்வுக்கு பனை வளத்தில் தங்கியிருக்கின்ற மக்கள் மிக மோசமாகச் சுரண்டப்படுகிறார்கள். தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டு அவர்களுடைய சமத்துவத்திற்கான உரிமை பல வழிகளில் மீறப்படுகின்றது. பல வருடங்களிற்கு முன்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் குற்றச்சாட்டின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எமது மக்களில் பெரும்பாலானோரது வாழ்க்கை நிலைகள் பரிதாபமானதாகக் காணப்படுகின்றது.

2010 ஜனாதிபதித் தேர்தல்

ஜனவரி ஜனாதிபதித் தேர்தலிலே எமது மக்களுடைய அவல நிலையைக் குறித்தும் எமது அரசியல் உரிமைகளைப் பரிசீலிப்பதிலும் அரசாங்கத்திற்கு இருந்த அக்கறையற்ற போக்கை எமது மக்களுக்கு விளக்கிச் சொன்னோம். சர்வகட்சி பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்ட பொழுது கூட வடக்கு கிழக்கில் இருந்து தெரிவான 23 தமிழ் பிரதிநிதிகளில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினரால் கொடுக்கப்பட்ட சிபார்சுகளும் கூட கருத்திலெடுக்கப்படவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவும் ஏனைய பல காரணங்களுக்காகவும் ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருப்பதற்கு இரண்டாவது தவணைக்காக கேட்ட மக்களாணையை நிராகரிக்கும் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும் சந்தேகமற்ற முறையிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு புதிய மக்காளணைக்கான ஜனாதிபதியின் கோரிக்கைக்கெதிராக மிகப் பாரியளவில் தமிழ் மக்கள் வாக்களித்தன் மூலம் முதலாவது தவணையின் பொழுது ஜனாதிபதியின் ஆட்சிமுறையை தாங்கள் விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டியிருக்கின்றார்கள். அதைவிட முக்கியமானதாக தமக்கு வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது.

கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மிக அடிப்படையானவை:

• தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

• தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.

• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

• அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

• அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

• புதிய தொழிற்துறைகளை உருவாக்கவும் மற்றும் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், வடக்கு – கிழக்கில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

• பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு அவர்களுக்குரித்தான அவசியமான துறைகளில் உயர் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தல்.

எமது மக்களின் உடனடித் தேவைகள்

எமது மக்களிற்கு நிலைத்து நிற்கக்கூடியதும் சமாதானமுமான வாழ்வொன்றிற்காக செயற்படுகின்ற அதேவேளையில் அவர்களுடைய உடனடியானதும், தற்போது நிலவக் கூடியதுமான முக்கிய பிரச்சினைகளை கையாள்வதிலும் விரைந்து செயற்படுவோம். இப்பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமும், இராணுவ தளபாடங்களும் அகற்றப்படுதல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மூலமும் 1983 ம் ஆண்டிற்கு முந்திய நிலைக்கு எமது பிரதேசத்தை இட்டுச் செல்லக் கூடிய அர்த்தமுள்ள இராணுவ விலகல் அவசியமானது.

• போரினால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவாக தமக்குரிய சொந்த இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டும், வாழ்வாதாரங்கள் மீளமைக்கப்பட்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படுகின்றதுமான வகையில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

• இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் உடல் ஊனங்களுக்கும், சொத்திழப்புக்களுக்கும் போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

• தேசிய நல்லிணக்கத்திற்கான முதற்படியாக எந்தவித குற்றமும் சுமத்தப்படாத, தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏனையவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட வேண்டும்.

• கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை விட்டு வெளியேறிவர்கள் மீண்டும் தமது இல்லங்களுக்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென்பதுடன், அதற்கேற்ப சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.

• புலம் பெயர்ந்த தமிழ் மக்களதும், சர்வதேச சமூகத்தினதும் செயலூக்கமிக்க பங்களிப்பின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் முழுமையான மீள் குடியேற்றமும், புனர்வாழ்வு, மற்றும் அபிவிருத்தி ஆகியன முன்னெடுக்கப்படும்.

• அகதிகள் என்ற நிலை அடியோடு நீக்கப்பட வேண்டும் - அதுவரை அகதிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் இன்றைய உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

• சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமூகங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் மற்றும் தொழில் துறையினை மேம்படுத்தவும் உத்தரவாதப்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டு ஆணையம் ஒன்றின் அவசியத்தை வற்புறுத்தி நிற்கின்றோம்.

• கரையோர மக்கள், மீனவ சமூகம் சுதந்திரமாகத் தங்கள் தொழிலை நடத்துவதற்கும், தங்கள் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும், அவர்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுப்போம்.

• அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படவும், தனியார் துறை ஊழியர், அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.

• நம் சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை பேணவும், போர் காரணமாக அநாதரவாக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்கள், முதியோர், சிறுவர் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வுத் திட்டங்கள் உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

• வேலையற்ற பட்டதாரிகள், மற்றும் வேலையற்றோர் தொழில் வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

2010 பொதுத் தேர்தலில் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகள்

ஒன்றுபட்ட நாட்டிற்குள் தமது தலைவிதிகளைத் தாமே தீர்மானிக்கக் கூடிய தமிழ் மக்களின் மறுக்க முடியாததும், பிரிக்க முடியாததுமான உரிமைகளை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளன. 1956ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் இறைமைக்கான கோரிக்கைகள் அனைத்தும் நியாயப்படுத்த முடியாத வகையில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

30 ஆண்டுகால அஹிம்சைவழிப் போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான அடக்குமுறை மூலம் நசுக்க முற்பட்டமையே ஓர் தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அடுத்து வந்த முப்பதாண்டுகளில் ஆயுத ரீதியான எதிர்ப்பை அடக்குதல் என்ற பேரில் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மோசமாய் பறிக்கப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் மீது விமானக்குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தப்பட்டும், சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டும் மேலும் மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன் அநேகர் கொல்லப்பட்டும் ஊனமுற்றும் சொத்துக்களை இழந்துமுள்ளனர். மிகக் கடுமையான மனித உரிமை வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் மூலம் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட போதும் அது ஆக்கபூர்வமான தீர்வொன்றிற்கு இட்டுச் செல்லாமல் முடிவிற்கு வந்தது.
அரசகாணி சம்பந்தமாகவும் மற்றைய வளங்கள் சம்பந்தமாகவும், குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது அப்பட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்துவிட்டதாகக் கூறுகின்றது. வியன்னா பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது என்ற வகையில் இந்திய இலங்கை உடன்பாட்டை இலங்கை மீற முடியாது. அரசாங்கத்தின் நீதித்துறையானது பாரபட்சமானதும், அதிகாரத்துப் போக்குடையதுமான பல்வேறு நடவடிக்கைகளின் அனுபவங்கள் தமிழ் மக்கள் அரசின் நீதித்துறையையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இந்த நாட்டின் நிர்வாகத் துறையின் கொள்கைகள் தமிழ் மக்களை இந் நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகையில் பெருமளவு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இன்றிருக்கக்கூடிய ஆட்சி முறை ஒன்றில் மத்திய சட்டவாக்கமைப்பு பெரும்பான்மைத்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது மிகத் தெளிவான ஒரு இன ஒழிப்புத் திட்டமே.

ஆனால் எவரும் இதுவரை இதனைத் தடுத்து நிறுத்தவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் இது தொடர்பாக எழுப்பிய கரிசனைகளை இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகள் எவையும் தமக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ முடியாதென நாகரீகமடைந்த தேசங்களைக் கொண்ட சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாகவே பிரகடனம் செய்கிறது. இப்போக்கு தொடருமானால் திட்டமிட்டபடி அரசின் இன ஒழிப்பு வெற்றி பெறும். இத் தீவில் இருந்து தமிழர் என்ற மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள்.

இப்பொதுத் தேர்தல் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்கக் கூடிய வகையில் ஆட்சி முறையை மீளக் கட்டியமைப்பதற்கான பேச்சுவார்த்தையை எம்முடன் நடாத்த வைப்பது முதலாவது கட்டம். கடந்த காலத்தைப் போல அரசாங்கம் எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை தொடர்ந்து புறக்கணிக்குமானால் இவ்விடயத்தை நாம் நேரடியாக இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொண்டு செல்வோம். தமிழ் மக்களுக்கெதிரான இவ் இன ஒழிப்புத் திட்டம் தொடர்பாக உரிய பார்வையைச் செலுத்தி பொருத்தமானதும் தாக்கமானதுமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத் தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக இருக்கும்.

தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகளை சந்திப்பதற்கும் எமது அரசியல் இலக்கை அடைவதற்கும், தமிழ் மக்களுக்கிடையிலான ஐக்கியம் மிகவும் முக்கியமானதென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நான்கு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த போதும் கடந்த பாராளுமன்றத்தில் அது பிளவு படவோ அல்லது ஓர் உறுப்பினரேனும் வெளியேறாத ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். எனினும் அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் செல்வாக்கைப் பலவீனப்படுத்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பெருமளவிலான சுயேட்சைக் குழுக்களை ஒழுங்கு செய்ததனூடாக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய அவசியத் தேவை எமது ஒற்றுமையை பாதுகாத்தலும் வெளிப்படுத்தலுமாகும். எமது மக்களையும் அவர்களின் நிலங்களையும் அழிப்பதற்கு அங்குலம் அங்குலமாக அரசு முன்னேறும் வேகத்தை நிறுத்துவதற்கான முதற்படி இதுவேயாகும். எமக்கிடையேயான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதுடன் இக் குறிக்கோளை நோக்கி தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனர். இவ்வொற்றுமையை மேலும் உறுதியானதாக்கவும் நிலை நாட்டவும் நாம் ஈடுபாட்டுடன் செயற்படுவோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் திட்டமிட்ட வகையில் விரைவில் மீள்குடியேற்றுவதிலும் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

கௌரவமான மனிதர்கள் என்ற எமது தனித்துவமான அடையாளத்தினைப் பேணும் வகையில் எமது மக்களின் வாழ்வு மீள் கட்டியெழுப்பப்படும். நாங்கள் தனி மக்கள் என்ற வகையில் எமது உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே இத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் வாக்களிப்பதன் மூலம் துணிச்சலுடன் எழுந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களைக் கோருகின்றோம்.

இரா சம்பந்தன் - தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மாவை. சேனாதிராசா - பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுக்கட்சி.
பிரசன்னா இந்திரகுமார் - பொதுச் செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே! ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ...மேலும் வாசிக்க

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே! ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ஈழப்போராளி தியாகி திலீபன் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்றான். ஆகவே அரசோ அன்றி அதற்கான போராட்டமோ மக்கள் மயப்பட்டாலே வெற்றிபாதையில் பயணிக்கும் என்பது திண்ணமாகும்.

ஈழத்தமிழர் நாம் எம்மை நாமே சரிவரக் கட்டமைத்து எமது நிலைகுலையாது செப்பனிட்டு பயணிப்பதே இன்றைய தேதிக்கு காலம் எமக்கிட்டுள்ள கட்டளையாகும். இதை உணர்ந்த ஒவ்வொரு தமிழனும் எங்கு வாழ்ந்தாலும், எங்கு வளர்ந்தாலும் எம்மினத்தின் வேரைக்காப்பதற்கு ஓரணியில் திரண்டு தேசிய ஒருமைப்பாட்டுடன் உழைக்கவேண்டியது வரலாற்றுக்கடைமையாகும்.

அதிமுக்கியம்வாய்ந்த இத்தேவைகளின் அடிப்படையிலும், சுவிஸ் வாழ் தமிழர்களாகிய நீங்கள் இவ்வாண்டு தை மாதம் 23ம் 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பில் ஏகோபித்த ஆதரவுடன் வழங்கிய மக்களாணையின் அடிப்படையிலும் எமது சமூக பொருளாதார அரசியல் நலன்களைத் தீர்மானிப்பதற்கு மக்களாகி உங்கள் வாக்குகளுடன் நேரடி சனநாயக வழிமுறையினூடாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு சுவிஸ் ஈழத்தமிழர் அவை ஒன்று உருவாக்கப்படவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இத்தேர்தலில் சுவிஸில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வேட்பாளர் உரிமையும் வாக்களிக்கும் உரிமையும் உண்டு. இத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை காலம் தாமதிக்காது எதிர்வரும் 12. 03. 2010 திகதிக்குள் தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பிவகைகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான தராதரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை சுவிஸ்தேர்தல் இணையத்தளமான www.tamilelection.chல் பெற்றுக்கொள்ளலாம்.

சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் குழு

மேலதிக விபரங்களிற்கு

Malathy: 078 948 44 50

Sanath: 079 917 87 67

info@tamilelection.ch

Google Buzz

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

 
சூடான தேர்தல் இடுகைகள்