திரைமணம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : March 11, 2010, 8:50 am
திரைவிமர்சனம்

( I Served the King of England)18++ உலக ...


ஜாக்கி சேகர்








Daybreakers (2010)


ஹாலிவுட் பாலா







தனி மனிதன்


கனவுகளின் காதலன்




 
சிறப்பு பதிவுகள்
 
 
சமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்


சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் கலந்து ...மேலும் வாசிக்க

சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் கலந்து கட்டி வரும். சில படஙக்ளை பார்க்கும் போது தூக்கு மாட்டி சாகலாமா என்ற எணணம் மேலோங்கும். இந்த படம் அந்த வரிசையில்.

தமிழ் படத்தில் கிண்டல் செய்ததை எல்லாம் சீரியஸாக படமாக்கியிருக்கிறார்கள். ரொமப் கொடுமைடா சாமி.. முடியல..

TEOTEO1சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் ஹீரோ..சனாகானை காதலிக்க, ஹீரோவின் அப்பாவின் நண்பர் அவர் பெண்ணை கட்டித்தர முன்வந்து நிச்சயம் செய்துவிட, இவர் மறுக்க, அவர் உண்மையை உடைக்கிறார்.பரத அவரது பிள்ளையில்லை என்று.. பின்ன என்ன அவருடய ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடிக்க வளர்ப்பு அப்பா டிக்கெட் எடுத்து கொடுக்க.. அடப்போங்கப்பா.. போய் வேற வேலைய பாருங்க.

தம்பிக்கு இந்த ஊரு – சரி இருக்கட்டும்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பச்ச மஞ்சள் சுட்டது - தமிழ் ...மேலும் வாசிக்க
பச்ச மஞ்சள் சுட்டது - தமிழ்
தமிழ்படம் – சிரிக்க வைக்கும் படம்

என்ன தமிழ் படமா…?
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவையும் கலாய்த்து காயபோட்டு இருக்கிறார்கள்.


சிவா, தீஷாபாண்டே, எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறை ஆடை மூர்த்தி, மனோபாலா, டெல்லிகனேஷ், பரவை முனியம்மா, கஸ்தூரி.

இசை : கண்ணன்

இயக்கம் : அமுதன்

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எடுக்காத புதுமுயற்ச்சியை இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி-ல் தொடங்கி மாதவன் வரை அனைவரின் நடிப்பயையும் யார் மனதும் புண்படாமல் நகைச்சுவையாக எடுத்துள்ளனர். காதல், செண்டிமண்ட் , வில்லன் , நட்பு என ஒரு படத்திற்கு உள்ள அத்தனையையும் இந்த ஒரே படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் எடுத்திருக்கும் படம் தான் இந்த ’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் கதை. ஆன்குழந்தை விரும்பாத கிராமத்தில் பிறக்கும் பிறக்கும் படத்தின் நாயகன் சிவாவை கள்ளிப்பால் கொடுப்பதிலிருந்து காப்பாற்றி சென்னைக்கு அனுப்புகிறார் சிவாவின் பாட்டியாக வரும் பரவை முனியம்மா படத்தின் முதல் காட்சியிலே கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியுள்ளனர்.

சென்னைக்கு வந்து இறங்கியவுடன் ஆட்டோவில் இருந்து தொடங்கும் சிரிப்பலை படம் முடியும் வரை நீடிக்கிறது. நாயகனின் நண்பர்களாக எம்.எஸ்.பாஸ்கர் , வெ.ஆ.மூர்த்தி, மனோபாலா அனைவரின் நடிப்பும் பாராட்டும் படி இருக்கிறது. இப்போது வரும் படங்களில் எல்லாம் ஹிரோவுக்கு வைக்கும் ஒபனிங் பாடலில் இயக்குநர் ஒரு காட்சியிலாவது வந்து ஆட்டம் போடவேண்டும் என்று நினைப்பு இனி இருக்காது.

எம்.எஸ்.பாஸ்கர் நாயகனுக்கு மட்டும் பலம் அல்ல படத்திற்கும் பலம் தான். அதே போல் வெ.ஆ.மூர்த்தி-ஐ படத்தில் இளமையாக காட்டியுள்ளனர் அவர் அடிக்கும் ஒவ்வொரு காமெடியும் பளிச். அடுத்து மனோபாலா பெண்களை கவர அவர் சைக்கிளில் சென்று கீழே விழுவதில் இருந்து அவருக்கு படத்தில் கொடுத்திருக்கும் ஆடைகள் வரை அத்தனையும் சூப்பர். நாயகன் சிவாவை பற்றி சொல்ல வேண்டுமானால் படத்திற்கு சரியான நடிகர் இவர் தான் என்று சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு காட்சிகளிலும் எந்த நடிகரை அவர் காட்சியில் கொண்டு வருகிறாறோ அதற்கு தகுந்த மாதிரி உடல் அசைவிலும் நம் உடலை அசைத்து சிரிக்க வைக்கிறார்.அடுத்து படத்தின் நாயகி மும்பை தீஷாபாண்டே வழக்கமாக தமிழ்பட நாயகிகள் செய்யும் வேலையை சரியாக செய்துள்ளார். கிராபிக்ஸ் காட்சியும் படத்தில் இருக்கிறது கஸ்தூரி ஆடும் ஒரு பாடல் காட்சியில் சென்சார் என்று ஒரு கிராபிக்ஸ் வருகிறது. இயக்குநர் அமுதன் பதியவர் என்று சொல்ல முடியாத வகையில் திரைக்கதையின் வேகத்திலும் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் ஏதுவும் போரடிக்காமல் சென்றுள்ளார்.

பச்ச மஞ்சள் சுட்டது - தமிழ் படம்

ஒரே பாட்டில் நாயகன் பணக்காரர் ஆவதிலிருந்து வில்லன்களை எதிர்க்கும் ஒவ்வொரு காட்சிகளும் அருமை. இசையில் கண்ணனின் ஒமகசீயா.. பாடல் நன்றாக வந்துள்ளது மற்ற பாடல்களும் பரவாயில்லை. அடுத்து ஓளிப்பதிவில் நிரவ்ஷா சிவாவை மட்டுமல்ல தமிழ்சினிமாவின் அத்தனை நாயகர்களையும் காட்சிகளில் கொண்டுவந்துள்ளார்.படத்தின் அத்தனை காட்சிகளும் நகைச்சுவை பின்னனியுடன் தான் வருகிறது இது தான் படத்திற்கு மிகப்பெரிய பலம். ’கோவா’-வை தாண்டி ’தமிழ்படம்’ செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் இந்த தமிழ்படம் ஒரு சிரிப்பு கலாட்டா.

வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"ஆலிஸின் அற்புத உலகம்" திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. லூயி கரோலின் அந்த புத்தகத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்து உள்ளன. இருப்பினும் ...மேலும் வாசிக்க
"ஆலிஸின் அற்புத உலகம்" திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. லூயி கரோலின் அந்த புத்தகத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்து உள்ளன. இருப்பினும் 107 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படம், தற்சமயம் பிரித்தானிய திரைப்பட கழகத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப் பட்டு உள்ளது.

முதன் முதலாக விஷுவல் எபக்டுகள் இந்த படத்தில் கையாளப் பட்டு உள்ளன. ஆலிஸ் சிறியவளாக இருந்து பெரியவள் ஆவது போன்றவை உண்மையிலயே பிரமிப்பு ஊட்டுகின்றன. இப்போது இவற்றை செய்வது மிகவும் சுலபம் தான். ஆனால் மிகவும் குறுகிய நுட்பங்களை கொண்டே திரையில் அப்போதே ஆச்சர்யத்தை நிகழ்த்தி இருக்கின்றனர்.

அந்த படம் உங்கள் பார்வைக்கு :



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குது. என் வேலைய முடிச்சுட்டு ரூமுக்கு திரும்பிக்கிட்டிருந்தேன், பாசக்கார பயபுள்ள ஒருத்தன் கால் பண்ணி ...மேலும் வாசிக்க
இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குது. என் வேலைய முடிச்சுட்டு ரூமுக்கு திரும்பிக்கிட்டிருந்தேன், பாசக்கார பயபுள்ள ஒருத்தன் கால் பண்ணி விண்ணைதாண்டனும் கூட வாடான்னா. ஒரு தடவ தாண்டுனதுக்கே எனக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு, மறுபடியுமான்னு யோசுச்சேன்.

மனசு கிடந்துக்கிட்டு போ போ போயி எஞ்சாய் பண்ணுன்னு பாடம் எடுத்துச்சு. அன்னைக்கு புடிச்ச பைத்தியம் தெளிஞ்சு இப்போதான் நார்மலாயிருக்கு.


இந்த படத்துல அப்புடி என்னதான் ஸ்பெஷல்னு பார்த்தா கதை ரீதியாவோ, இல்ல படமாக்கிய விதத்துலயோ புதுசா ஏதும் இல்ல. ஆனா ஒரு FEEL இருந்துச்சு. என்னதாண்டா உன்னோட பீலிங்கு? ரொம்ப பிலிம் காட்டுறன்னு யோசிக்குறீங்களா. அதுகெல்லாம் அனுபவம் வேணும். உங்களுடைய முதல் காதல் அது உண்மையான காதலா(உண்மையான காதல்னா என்னங்க?) இருந்து அது நிறைவேறாமல் போயிருந்தா நான் சொல்லுற அந்த FEEL கிடைக்கும். (இந்த FEEL எனக்கு வரலங்க, நம்ம பிரண்டு FEELல பத்தி என்கிட்ட சொல்ல அத இங்க எழுதிட்டேன்..எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.)


3சா!!! இந்தப் பொண்ணுக்கு யாராச்சும் நடிக்க சொல்லித்தந்தா பரவாயில்ல. ரொம்ப கொடுமைடா சாமி. எல்லாத்துகும் முஞ்ச சுரிக்கிக்கிட்டு/சுளிச்சுக்கிட்டு/உதட ஊன்னு வச்சுக்கிட்டு ஒரு எக்ஸ்பிரசனக் காட்டுது. சிர்க்கிறத விட்டா அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.  சிலம்பரசன் நடிச்ச படத்த தியேட்டர்ல பார்த்ததே ஒரு புதுமைதான். நம்பி வந்த என்ன ஏண்டா வந்தன்னு என்னைய நானே கேட்டுக்காத அளவுக்கு நல்ல முன்னேற்றம். ரொம்பவே அடக்கி வாசிக்க வச்சிருக்காரு டிரைக்டரு.

காதலன்,காதலி,காதல் இவங்க முனு பேருமே முக்கால்வாசி படத்த ஆக்கிரமிச்சுட்டாங்க. காக்க காக்க காமேரா மேன் கணேஷ். செம வாய்ஸ், என்னோட clap's அவருக்கு. இந்த படத்தோட தயரிப்பாளர்கள்ல ஒருத்தரு போல. நார்மலாவே அவர் அப்புடித்தான் பேசுராறு. டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டு டைட்டில் வரைக்கும் ஏஆர் அந்த FEELல Maintain பண்ணியிருக்குறார். கேமேராமேன் பரமஹம்சா.(லென்சுக்கு நேரா வேளிச்சம் படக்கூடாது, படம் புடிக்குறப்போ) எப்பவோ யாரோ எனக்கு சொல்லி இன்னைக்கும் வரைக்கும் போட்டோ புடிக்குறப்போ பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். கண்களை உறுத்தாத படப்பிடிப்பு. படத்துல ஒரே ஒரு தேவையில்லாத செம பில்டப் காமெடி சண்டை. சாதரணமான கதைல டிபரண்டானா கிளைமாக்ஸ், இரைச்சல் இல்லாத இசை, கண்களுக்கு குளிர்ச்சியான கேரளம், பில்டப் இல்லாத ஹீரோன்னு  செய்சுட்டாரு டிரைக்டரு கவுதம்.


படம் முடிஞ்சு வெளிய வர்ரப்போ நண்பன் பெருசா ஒரு பெருமூச்சு விட்டான். என்னான்னு கேட்டேன். மச்சான் என் வாழ்க்கைலயும் "இரண்டு TRUE LOVE !!!!" இருக்குதுன்னு சொன்னான்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தம்பிக்கு இந்த ஊரு தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமாபைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனாநான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்ஆனா அதுக்குள்ள ராஜலீலை ...மேலும் வாசிக்க
தம்பிக்கு இந்த ஊரு தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமாபைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனாநான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்ஆனா அதுக்குள்ள ராஜலீலை படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை.சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்சபடத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டேன்.சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மின்னலே முதல், வாரணம் ஆயிரம் வரை அனைத்து கௌதம் மேனன் படங்களும், என் பார்வையில், தரமானவை. ஒரு தனித் தன்மையுடன் ...மேலும் வாசிக்க


மின்னலே முதல், வாரணம் ஆயிரம் வரை அனைத்து கௌதம் மேனன் படங்களும், என் பார்வையில், தரமானவை. ஒரு தனித் தன்மையுடன் தன் முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இங்க ரிலீஸ் ஆன அன்னிக்கே பாக்கணும்னு திட்டம் இருந்தது. ஹாரிஸுக்கு பதிலா ரஹ்மானை போட்டதில், ஹாரிஸின் பளிச் ஹிட் இல்லாத மாதிரி தெரிந்தாலும், ரஹ்மானின் பாடல்களை மீண்டு மீண்டும் கேட்டபோது ரொம்பவே பிடித்துப் போயிருந்தது.
ஹோசானா, இளமைத் துள்ளல்.
ஓமனப் பெண்ணே, கேக்கும்போதே, த்ரிஷாவை மனதளவில் ஓடவிட்டு கற்பனை பண்ணிப் பாத்தாச்சு.
கார்த்திக் குரலில், 'விண்ணைத்தாண்டி வருவாயா?'ன்னு ஒரு பாட்டும் காதுக்கு சுகமாய் இருந்தது.
கண்டிப்பா அம்சமா இருக்கும்னு முன் முடிவுடன் இருந்தேன்.

ஆனா, பாக்கலாமா வேணாமான்னு ஒரு தடுப்பு, சிம்பு.
சிம்புவின், attitudeஆ, இல்லை, டி.ஆரின் வித்தையான்னு தெரியல்ல, சிம்புவை பிடிப்பதில்லை. சிம்பு படத்தை $12 குடுத்து பாக்கணுமான்னு, மொத நாளு போகாம விட்டுட்டேன்.

சமீபத்தில் ஆணி மிக அதிகமாய் ஆகி, ஏகப்பட்ட குடைச்சல்கள் ஆபீஸில். ப்ரச்சனைகள் பெருகி வழிவதால், 24மணி நேரமும், ஆணி அடித்தல் தேவைப்பட்டது. ஒரே ஆளு, எவ்ளோ ஆணிதான் அடிப்பதுன்னு, மூணு பேரு, ஷிஃப்ட்டு கட்டி அடிச்சோம். இதனால், ஒரே நன்மை, சூர்யோதயத்துக்கு முன் ஆபீஸுக்கு போயி, மதிய வேளையில், மண்டை காஞ்சதும் வூட்டுக்கு வந்திடலாம்.

போன செவ்வாக்கிழமை மதியம் வீட்டுக்கு வரும்போது, சரி, மாட்னி ஷோ பாத்து ரொம்ப நாளாச்சேன்னு, விண்ணைத் தாண்டி வருவாயா போயிடலாம்னு முடிவு பண்ணி, தங்கமணியுடன் கெளம்பி போயாச்சு. தியேட்டர்ல நாங்க ரெண்டே பேருதான்.
செவ்வாய்க்கிழமை 4மணிக்கு, வேர யாரு இருப்பா?

ரெண்டு பேருக்காக படம் போடுவாங்களான்னு யோசிச்சேன். ஆனா, அதையெல்லாம் அவங்க கண்டுக்கலை, வெட்டாம ஒட்டாம, முழுசாவே போட்டாங்க.

படத்தின் ஆரம்பமே அமக்களம். 'ஆரோமலே' பாட்டின், கிட்டார் பிட்டு, படத்தில் ஆங்காங்கே தூவி விட்டுருக்காரு ரஹ்மான். ஒரு கிளர்ச்சியான பிட்டு அது. பரிச்சயமாகவும் இருந்தது. மேஜிக்கல் ம்யூஜிக்.

மாடி வீட்டுப் பெண்ணான மல்லு கிருஸ்துவ த்ரிஷாவை, கண்டதும் காதலிக்கும் ஹிண்டு சிம்புவின் கதை. காதலை வெறுக்கும் பெண்ணின் அப்பா. பல தடவை பல விதமாக எடுக்கப்பட்ட கதை. ஆனா, கௌதம் பாணியில், ஒரு பாலிஷ்டான பாணியில் புதுமையா வந்திருக்கு.

த்ரிஷா அழகு. கொஞ்சம் வயசு தெரியுது. ஆனாலும், அழகு. நடிப்பு பிரமாதம்.
சிம்பு. ஹ்ம் சொல்லவே கஷ்டமா இருக்கு. ஆனாலும் சொல்லிடறேன். யதார்த்தமா நல்லாவே நடிச்சிருக்காரு.
சிம்புவின் நண்பராக ஒரு கேமராமேன் வேடத்தில் ஒருத்தர் வராரு (கணேஷ்). பாக்க, கபாலி கணக்கா பயங்கரமா இருக்காரு. இன்னாடா, வேர ஆளே கெடைக்கலியா கௌதமுக்கு முதல் காட்சியில் நெனைச்சேன். அடுத்தடுத்த காட்சியிலிருந்து, என்னை விட யாருமே இப்படி ஜாலியா பண்ணியிருக்க முடியாதுன்னு நிரூபிச்சிட்டாரு மனுஷன். குட் சாய்ஸ். படத்தில் காமெடி ட்ராக் இல்லாத குறையை இவரு போக்கிடறாரு.குறிப்பா, 'என்னாடா தம்பி'ன்னு அடிக்கடி அவரு சிம்புவை கேட்பது, சூப்பரா பண்ணியிருக்காரு.

படத்தின் காமெராமேன், மனோஜ் பரமஹம்சாவாம். த்ரிஷாவை அழகா காமிச்சிருந்தாலும், பாட்டெல்லாம், கலர்ஃபுல்லா வந்திருந்தாலும் கூட, எனக்கு பெருவாரியான காட்சிகள் பிடிக்கலை. காமெராவை ஏன் இந்த ஆட்டு ஆட்டித் தொலையறாங்க? ஏன் இந்த ஃபாஸ்ட் எடிட்டிங்? வயசான(?) காலத்துல இப்படி பாத்தா தலைதான் வலிக்குது. அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல, இப்படி ஆட்டி ஆட்டி படத்தை காமிச்சா எப்படி ரசிச்சுப் பாக்கரது? ரம்யமான காதல் கதைக்கு, எல்லா காட்சியும் மயிலிறகு கணக்கா ரம்யமா இருக்க வேணாமா?
கேரளா ஆலப்புழாவும், backwatersம் டசக் டசக்னு வெட்டி வெட்டி ஒட்டிய எடிட்டிங்கிலும், வேகக் காமெராவிலும், அனுபவித்து உள்வாங்க முடியவில்லை.
காமெராமேன்களும், எடிட்டர்களும் கொஞ்சம் மாறுங்கப்பா. ராப் மூஜிக் வீடியோ மாதிரி, நம்ம ஊர் பாடல்களை ஏன் படம் பிடிக்கணும்? ஸ்ஸ்ஸ்.

படத்தில் எல்லா காட்சியிலும், த்ரிஷாவும் சிம்புவுமே வந்தாலும், அலுப்பு தெரியாமல், மெல்லமாய் போகிறது.
பெருசுகளுக்கு படம் பிடிக்காது. எம்மைப் போன்ற இளசுகளுக்குத்தான் பிடிக்கும் ;)

திரிஷாவுக்கு, தன் குடும்பம் பெருசா, சிம்பு பெருசான்னு அடிக்கடி குழுப்பம் வருது. அந்த குழப்பத்துடன் கூடிய நடிப்பை, அழகா வெளிப்படுத்தறாரு.
படத்தின் முடிவும் அமக்களம். குழப்பமான முடிவாய் வந்திருக்க வேண்டியது, நல்லபடியா காட்சிகளை அடுக்கி, நச்சுனு முடிச்சிருக்காரு கௌதம்.

நிறைய பேரு, இரண்டாம் பாகம் இழுவைன்னு சொல்லியிருந்தாங்க.

எனக்கென்னமோ, படம் முழுக்கவும் இதமா இருந்தது.
படம் முடியாம, அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இழுத்துக்கிட்டே இருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு தோணிச்சு.
த்ரிஷாவின் மீதான ஜொள்ளா? 'ஆரோமலே' பாட்டின், கிட்டாரா? எதுன்னு தெரியல்லை.

மொத்தத்தில், வசீகரமான படம்.

எளசுகள், கண்டிப்பாய் பார்க்கலாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை. ...மேலும் வாசிக்க

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை.

சரிதாவின் தங்கை இதில் ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் ரஜினியின் குடும்ப நண்பராக வந்து அழகா நடித்து இருப்பார்.

எனக்குப் பொதுவாக தேங்காய் சீனிவாசனுடைய காமெடி பிடிக்காது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினி-தேங்காய் மற்றும் ரஜினி- தேங்காய்-செளகாரை வைத்து பாலச்சந்தர் வயிறுவலிக்க சிரிக்க வைத்துள்ளார்.

எனக்கு இந்தப் படத்தில் சில பிடித்த விசயங்கள்

* ரஜினி - மாதவி ரொமாண்ஸ் உண்மையிலேயே படு சூப்பர்.

* மீசையில்லாத ரஜினியும், மாதவியும் பாடும் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு பாடல் ரொம்ப ரொம்ப ரொமாண்டிக்கா நல்லா இருக்கும். மாதவி படு செக்ஸி

* ரஜினி- பூர்ணம் விஸ்வநாதன் பேசும்போது சொல்லும் சில நிதர்சனங்கள்.

ரஜினி: என்னை ஏன் பிடிக்காது? என்னை எல்லாருக்கும் பிடிக்கும்!

பூர்ணம்: நீ எதுல குப்பை கூட்டுறயோ இல்லையோ நிச்சயமா நீ ஒரு நல்ல நடிகனா குப்பை கூட்டுவடா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தை on-line (திருட்டு வீடியோவானு என்னனு தெரியலை) ல பார்க்கனும்னா இங்கே க்ளிக் செய்யவும்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதனுக்கு காமம் அல்லது செக்ஸ் அவசியம். ஹார்மோன்கள் மனிதனை ஒரு வழிபண்ணி அவன் சிந்தனைகளைத்தூண்டி காமுறவைக்கிறது. அது இல்லாமல் பொதுவாக மனிதன் வாழமுடிவதில்லை. இதற்கு விதிவிலக்கு யாருமில்லைனு ...மேலும் வாசிக்க
மனிதனுக்கு காமம் அல்லது செக்ஸ் அவசியம். ஹார்மோன்கள் மனிதனை ஒரு வழிபண்ணி அவன் சிந்தனைகளைத்தூண்டி காமுறவைக்கிறது. அது இல்லாமல் பொதுவாக மனிதன் வாழமுடிவதில்லை. இதற்கு விதிவிலக்கு யாருமில்லைனு இந்த நித்தி- ரஞ்சிதா கேஸை வைத்து அடித்து சொல்லமுடியாது!

ஆனால் ஒருவன் தன்னை கடவுள் போல் சித்தரித்து, தன்னைப்பற்றி ஒரு பொய் இமேஜ் உருவாக்கி பலரை ஏமாற்றியதால்தான் இங்கே பிரச்சினையே!

இந்த பொறுக்கி ராஜசேகர் விசயத்தில் பிரச்சினை என்னவென்றால், இவன் தன்னை கடவுள் ஸ்தானத்திற்கு தானாகவே உயர்த்திக் கொண்டான். தான் சிற்றின்பங்களை எல்லாம் துறந்தவன் என்று சொல்லிக்கொண்டான்!

பலியாடான ரஞ்சிதா மேலே எல்லோருக்கும் ஒரு பரிதாபம் இப்போ. படுக்கை அறை விசயத்தைஎல்லாம் காட்டி அவரை அவமானப்படுத்தியதாக எல்லோரும் இந்த தனிமனித உரிமை மீறலைக் கண்டு அழுகிறார்கள். என்னைப்போல் இரக்கமில்லாதவர் ஒரு சிலரைத் தவிர!

பத்தினி தெய்வம் ரஞ்சிதாவுக்கு கோயில் கட்ட விரும்பும் பக்தர்களுக்கு சில கேள்விகள்!

* உலகமே சாமியாராக, கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுடன் படுத்து எந்திரிக்கும்போது, ரஞ்சிதாவுக்கு அது தப்பா தெரியலையா?

* எத்தனை பெண்கள் இவரை கடவுளாக நம்பி இவரை கடவுளாக வணங்கியுள்ளார்கள்னு தெரியாதா இவருக்கு?

* இல்லை கடவுளோட படுத்தெந்திரிப்பது மோச்சத்திற்கு வழி என்று நம்பினாரா?

* ரஞ்சிதா ஒரு சக நடிகருடனோ, இல்லை ஒரு சாதாரண பாய் ஃப்ரெண்டிடமோ இப்படி நடந்திருத்தால், அதை சன் டி வி வெளியிட்டு இருந்தால், சன் டி வி யை பாய் காட் பண்ணனும், உடைத்து நொறுக்கனும்னு நானே சொல்லுவேன்.

* தன்னைக்கடவுளாகக் காட்டிக்கொண்டு திருய்ம் ஒரு பித்தலாட்டக்காரனை அம்பலப்படுத்தனும்னா, சிலர் பலியாவதைத் தடுக்க முடியாது. ரஞ்சிதா ஒரு பாவமும் அறியாதவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே கும்பிடும் ஒரு "கடவுளுடன்" காமத்தில் இறங்குவது அவர் செய்த மிகப்பெரிய தப்பு!

* இந்த வீடியோ வெளியாடாமல் இந்த சாமியாரைப்பத்தி என்ன சொன்னாலும் மக்கள் நம்பப்போவதில்லை! இவன் தொடர்ந்து பல பெண்களை மோசடி செய்வான். ஏமாத்துவான்!

*அதுக்காக ஒரு அபலைப் பெண்ணை பலிகொடுக்கனுமா? என்று கேட்டால் அதை தவிர்ப்பது கடினம்.

* அவர் வீடியோவை வெளியிட்டது தப்பு என்று நினைக்காமல், உலகமே கடவுளாக நினைத்த் ஏமாந்து கொண்டிருந்த மக்கள கண்களை திறக்க ரஞ்சிதா உதவியதாக அவர் இதை அவர் எடுத்துக்கொள்ளட்டுமே!

* இதுபோல் பலர் கண்களை திறந்த ரஞ்சிதா எதியும் கண்டு கலங்கக்கூடாது! இந்த்தனி பேர் கண்களை திறந்ததற்காக இவருக்கு ஒரு கோயில் கட்டலாம்!

*****************

நம்ம நாட்டில் சாமியார் தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கு. இன்று ஒரு சாமியார் மாட்டினால் நாளைக்கு இன்னொரு சாமியார் உருவாகுவான். இது என்றுமே முடியாத ஒரு தொடர்கதைதான். எத்தனையோ சாமியார்கள் பொய்வேஷம் கலைந்து மாட்டிவிட்டார்கள். கொலைவழக்கில், ஏமாற்றுவதில், செக்ஸ் ஸ்கேண்டல் இப்படி நடந்துகொண்டேதான் இருக்கு. ஆனாலும் மக்களிடம் சாமியார்கள் தேவை இருக்கு.

இதுபோதாதென்று ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் சாமியார்களை நம்புகிறார்கள்.

ஆத்திகர்களை நிறைந்த உலகம் என்பதால் கமலஹாசன் போன்ற நாத்திகர்கள்கூட மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்பதாலும், ஆத்திகர்கள் 80 விழுக்காடுகளுக்கு மேலே இருப்பதாலும், தன்னுடைய நாத்திக கொள்கையைக்கூட அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாத்திக கொள்கையுள்ள அரசியல்வாதிகள், முன்னேற முயன்றுகொண்டிருக்கும் பதிவர்கள அனைவருமே தன் மக்கள்பலத்தை இழக்க விரும்பாமல் ஒரு வியாபார நோக்கில் நாத்திக கொள்கைகளை மூட்டைகட்டி வைக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்துப் பார்த்தால் உணரலாம்.

ஏன் நம்மநாட்டில் மட்டும் இப்படி? கவனமாகப் பார்த்தால் நம்ம மக்கள் மட்டுமல்ல! வெள்ளைக்காரன், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் பலர் நம் நாட்டு சாமியார்களை நம்பி வணங்குறாங்க, அவர்களை "ஷக்தி" உள்ளவர்களாக நம்புறாங்க. இதற்கு அடிப்படைக் காரணம் மதமல்ல! மனப்பிராந்தி! பயம்! தன் சோகத்திற்கு ஒரு வடிகால்! தன் குழப்பத்திற்கு ஒரு மாருந்து!

திடீர்னு ஒருவருடைய நிலைமை மாறிவிடுகிறது. பயங்கர நஷ்டம். இதுபோல் சூழலில் கோழைகளுக்கு (யாரு வேணா கோழையாகலாம்) ஒரு சாமியார் தேவைப்படுகிறார். அந்த பயத்தைப் போக்க! நஷ்டமடைந்தவன் லாபமடைவது எல்லாம் இயற்கை. மறுபடியும் முயற்சி செய்யனும்! அதுக்கான நம்பிக்கையை சாமியார் கொடுக்கிறார்!

இன்னொரு உதாரணம்:

திடீர்னு ஒருவருக்கு கேன்சர் வந்துவிடுகிறது. டாக்டர்கள் எல்லாம் நாள் குறித்துவிடுகிரார்கள். இது எனக்கும் நாளைக்கு நடக்கலாம். ஒருவர் அந்த நிலைமைய அடையும்போது, அவருக்கு மன வியாதி வந்துவிடுகிறது. பயம்! இந்த பாழாப்போன உலகமே சொர்க்கமாகத் தெரிகிறது! கூட உள்ளவர்கள், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் யாருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. இதில் மனவியாதியே இந்த நிலையில் உள்ளவரை சீக்கிரம் கொன்றுவிடும் பரிதாப நிலை வருகிறது.

இந்த சூழ்நிலையில், இது போல் சாமியார்களிடம் எடுத்துச்செல்லப்படுகிறார்கள் (இவர்கள் விருப்பத்துடனோ, அல்லது சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்காகவோ).

சாமியார், டாக்டர் அல்ல! அவருக்கு உண்மையான கேன்சர் நிலவரம் தெரியாது! அவருக்கு தெரிந்தது கீமோ தெரப்பி அல்ல. அவருக்கு இது கோலன் கேன்சரா, லங் கேன்சரா இல்லை ப்ளட் கேன்சரானு தெரியாது. அவருக்கு தெரிந்த வைத்தியம் ஒண்ணே ஒண்னுதான். "எதையுமே நல்லபடியாக மாற்றிவிடலாம், எதையுமே கடவுள் கிருபையால் சரி செய்துவிடலாம்" என்று அந்த பரிதாப்பத்திற்குரியவரிடம் சொல்வது. இதுதான் சாமியார் கொடுக்கும் மருந்து!

பயந்த்தால் நடுங்கி தூக்கம் இல்லாமல் தவிக்கும் ஒருவருக்கு அப்படி அவர் ஒரு ஆறுதல் கொடுக்கும்போது பலருக்கு மனவியாதி போய்விடும், ஒரு நம்பிக்கை வந்துவிடும். இதுதான் சாமியார் செய்யும் உதவி. இதில் என்ன தப்பு? தப்பே இல்லை! ஆனால் கேன்சரை அவர் நல்லாக்கிவிட்டார்னு சொல்வதுதான் இங்கே தப்பு! அவர் மனவியாதியைத்தான் நல்லாக்கினார்!

மனிதனுக்கு இதுபோல் தாங்கமுடியாத துயரம் வந்துகொண்டே இருக்கும். இதுபோல் மன ஆறுதல் கொடுக்கும் சாமியார்களும் வந்துகொண்டேதான் இருப்பாங்க!

இதுபோல் சாமியார்களுக்கும் எந்த மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை! அதனால் அவர்கள் சாதனைகளை ஹிந்து மத சாதனைகளாகவும், அவன் அயோக்கியத்தனம், செய்யும்போது அதை இந்து மதத்திற்கு ஒரு இழுக்காகவும் சில பாப்பான்கள் நினைப்பது அடிமுட்டாள்த்தனம்!

மெடிட்டேஷன் என்பது மனவியாதிக்கு ஒரு மருந்து! நம்பிக்கை, மனவியாதிக்கு மருந்து! அதைத்தான் இந்த காவி சாமியார் பயந்து நடுங்கும் மனிதனுக்கு கொடுக்கிறாங்க! இந்து மதப்போதனைகள் அல்ல!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கவுதம் வாசுதேவ மேனன் மீண்டும் ஒரு காதல் கதையில் களம் புகுந்து இருக்கிறார், இந்த முறை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக, வம்பான ஆளான சிம்பை வைத்துக்கொண்டு.  ...மேலும் வாசிக்க

கவுதம் வாசுதேவ மேனன் மீண்டும் ஒரு காதல் கதையில் களம் புகுந்து இருக்கிறார், இந்த முறை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக, வம்பான ஆளான சிம்பை வைத்துக்கொண்டு. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை என்னவென்றால் சிம்பு பொறியியல் பட்டதாரி, திரைத்துறையில் இயக்குனராக அதற்கு முதல் அடியான உதவி இயக்குனராகி வாய்ப்பு தேடுபவர். இவரது மாடி வீட்டில் வசிப்பவர் த்ரிஷா. முதல் முதலாக பார்க்கும் போதே சிம்பு த்ரிஷா மீது காதல் கொள்கிறார், ஆனால் இரு பிரச்சனை ஒன்று த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர், இரண்டாவது சிம்பு ஹிந்து த்ரிஷா கிறிஸ்துவம். த்ரிஷா வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு வருகிறது. இறுதியில் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே படம்.

கவுதமின் இந்தப்படமும் வழக்கம் போல A சென்ட்டருக்கான படம் தான் B மற்றும் C யில் ஓட வாய்ப்பில்லை, அதெல்லாம் தெரிந்தே தான் கவுதமும் படம் எடுக்கிறார். அவரது பார்வையாளர்கள் எப்போதும் A சென்டர் தான்.  தமிழில் ஒரு முடிவு தெலுங்கில் ஒரு முடிவு என்று இரு வித்யாசமான முடிவுகளை தைரியமாக வைத்து இரண்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார், பெரிய விஷயம் தான்.

சிம்பு என்றாலே வம்பு தான் என்று இருக்கும் போது தன்னுடைய வழக்கமான விரல் வித்தை சேட்டைகள் மற்றும் பில்டப்புகள் அனைத்தையும் ஏறக்கட்டிவிட்டு அடக்கமான பையனாக அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கிறார். உண்மையை கூறினால் சிம்பு இதில் இயல்பாக வந்து செல்கிறார் நடிப்பது போல் தெரியவில்லை. இவர் மீது பெரிதாக எந்த குறையும் கூற வாய்ப்பில்லை. தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். சிம்பு உண்மையில் மிகத்திறமையான நடிகர் இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை, வீம்புக்கு ஒரு சிலர் கிண்டலடிக்கலாம்.  இவரது அனைத்து திறமையும் இவர் செய்யும் பந்தா மற்றும் இவரது வாயால் கெட்டுப்போய் விடுகிறது என்பதே உண்மை. இதைப்போல கதாப்பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்தால் கண்டிப்பாக சிறந்த நடிகராக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

த்ரிஷா ரொம்ப அழாக இருக்கிறார் அமைதியாக சிறப்பாக நடித்து இருக்கிறார் வழக்கமான பேக்குத்தனம் இல்லாமல். அவரது உடைகளே அவருக்கு கூடுதல் அழகை கொடுத்தது என்றால் மிகையில்லை.. சுருக்கமா கூறினால் இந்தப்படத்தில் சூப்பர் ஃபிகராக உள்ளார். சிம்பு த்ரிஷாவிடம் You are very beautiful என்று கூறுவார்..அப்போது பின்னாடி இருந்த ஒருத்தர் இது ஒரு சப்பை ஃபிகர் என்று கமெண்ட் அடித்தார்.... ம்ம்ம் இவருக்கு த்ரிஷா மீது என்ன கோபமோ! ;-) த்ரிஷா இந்தப்படத்தில் அரை மனநிலையில் நடித்துள்ளார் தப்பா எதுவும் நினைத்துக்காதீங்க! அதாவது அவ்வப்போது திடீர் திடீர் என்று தனது மனதை மாற்றிக்  கொள்பவர், உறுதியான முடிவு எதுவும் எடுக்க மாட்டார். எந்த நேரத்தில் என்ன முடிவு செய்வார் என்று அவருக்கே தெரியாது கேட்டால் "that moment has gone' என்பார்.

படத்தில் அடிக்கடி, பேசிய வசனங்களே வருவது அலுப்பை தருகிறது, அதுவும் கவுதம் படத்தின் இதற்கு முந்தைய படங்களின் வசனங்களும் கூட. முன்பு புரியாத புதிர் என்ற ஒரு படம் வந்தது பலருக்கு நினைவிருக்கும். அதில் ரகுவரன் I Know I Know என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருப்பார். அவர் எத்தனை முறை அந்த வார்த்தையை கூறினார் என்று போட்டி எல்லாம் கூட வைத்தார்கள். அதே மாதிரி இதில் சிம்பு எத்தனை முறை ஜெஸ்சி (த்ரிஷா) என்று கூறினார் என்றும், த்ரிஷா எத்தனை முறை கார்த்திக் (சிம்பு) என்று கூறினார் என்றும் போட்டி வைக்கலாம். அநியாயத்திற்கு ஒவ்வொரு முறையும் பேசி முடித்த பிறகு பெயரை கூறுகிறார்கள். யப்பா! சாமி வெறுத்தே போயிட்டேன்... அதுவும் த்ரிஷா கார்த்திக் கார்த்திக் என்று ஒவ்வொரு வரி முடிவிலும் கூறுவது செம கடுப்பை வரவழைத்து விட்டது. கவுதமுக்கு ஏன் இந்த கொலை வெறி என்று தெரியவில்லை.

இந்தப்படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் காக்க காக்க கேமரா மேன் என்று கூறிக்கொண்டு ஒளிப்பதிவாளராக நடித்து இருக்கும் கணேஷ் என்பவர். இவரின் கதாப்பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடித்தது, ரொம்ப ரசித்தேன். இவர் திட்டினால் கூட நமக்கு கோபம் வராது போல :-)) இவரைப்போல ஒரு அண்ணன் அல்லது ஒருத்தர் நமக்கு உடன் இருந்தால் எவ்வளவு சுவாராசியமாக இருக்கும் என்று என்னை ஏங்க வைத்து விட்டார். இவர் தான் சிம்புவை இயக்குனர் K.S.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக சேர்த்து விடுவார். சிம்புவின் காதலுக்கு துணையாகவும் இருப்பார்.

படத்தில் காமெடி பகுதியை இவர் தான் செய்யப்போகிறார் என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள், ஆனால் படத்தில் தனது அட்டகாசமான வசன உச்சரிப்பில் அனைவரையும் ஈர்த்து விட்டார். படத்தின் மிகப்பெரிய பலம் இவர் என்றால் மிகையில்லை. சிம்புவை பார்த்து ஒவ்வொரு முறையும் டேய் தம்பி! என்று ஆரம்பித்து இவர் அடிக்கும் கமெண்ட்டும் உடன் இவரது முகபாவனைக்கும் திரையரங்கில் சிரிப்பலைகள். சிம்புவும் அவருக்கு பொருத்தமாக இருக்கிறார். சார் சார் என்று அவரிடம் சிம்பு பேசும் போது.. ஒரு செயற்கைத்தனமில்லாத இயல்பான உறவை காண முடிகிறது.

படம் முழுவதும் பெரும்பாலும் சிம்பு த்ரிஷா காதல் மட்டுமே வருகிறது, உடன் சிம்புவின் திரைத்துறையை பற்றிய பகுதியை இன்னும் கொஞ்சம் இணைத்து இருந்தால் சுவாராசியமாக இருந்து இருக்குமோ என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியலை, காரணம் சிம்புவின் லட்சியமே இயக்குனராவது தான் ஆனால் சிம்பு த்ரிஷா காதல் பகுதியே பெரும்பாலும் படத்தில் உள்ளது, உடன் அவரது வேலையையும் பிரச்சனைகளையும் காட்டி இருந்தால் இன்னும் இயல்பாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து, கடைசியில் தான் இதை சரி செய்துள்ளார்கள்.

கவுதமாக இருந்து பின் கவுதம் மேனனாக தற்போது கவுதம் வாசுதேவ மேனனாக மாறி இருக்கும் இவர் படத்திலும் படத்தின் எழுத்திலும் கூட மலையாளத்தை புகுத்தி வருகிறார். படத்தை மட்டும் பார்த்தால் விமர்சித்தால் இதெல்லாம் கூற அவசியமில்லை தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமா மாறி வருவதன் காரணம் என்ன என்று தான் புரியவில்லை, என்ன நிரூபிக்க முயல்கிறார் என்றும் புரியவில்லை. முதல் படத்திலேயே இவ்வாறு செய்து இருந்தால் பிரச்சனை இல்லை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது தான் உறுத்துகிறது. என்னமோ! நல்ல படம் கொடுக்கும் வரை சரி!

படத்தில் "ஒரு நாள் சிரித்தேன் ஒருநாள் வெறுத்தேன்" பாடல் வரும் இடத்தில் வரும் சிம்பு த்ரிஷா ரொமான்ஸ் டாப் க்ளாஸ். காதலிக்கும் காதலித்த ஒவ்வொருவருக்கும் தங்களையே பார்த்தது போல இருக்கும், அத்தனை அருமை. ரொம்ப ரசிக்கும் படி எடுக்கப்பட்டு இருக்கும். படத்தின் "பின்னணி இசை" அருமை ரகுமான் கலக்கி இருக்கிறார். படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளதாக அனைவரும் கூறினார்கள் எனக்கென்னவோ ஹாரிஸ் கவுதம் கூட்டணி போல இல்லை, நிறைவாக இல்லை. அனைவரும் அளவிற்கு மீறி ரகுமானை புகழ்வது போல எனக்கு தோன்றுகிறது. பொதுவாக கவுதம் படத்தில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கும் இதில் அது குறைவு. அனைத்து பாடல்களிலும் ஒரே மாதிரி குழு நடனம், செயற்கையாக உள்ளது படத்தோடு ஒட்டவில்லை. ஒளிப்பதிவு சென்னை கேரளா அமெரிக்கா என்று அனைத்து இடங்களிலும் உள்ள அழகை நமக்கு தேடிக்கொண்டு வந்து தருகிறது. த்ரிஷா அப்பாவாக நீண்ட நாட்களுக்கு பிறகு "பூ விழி வாசலிலே" புகழ் பாபு ஆண்ட்டனி, நடிக்க ஓரளவு வாய்ப்புண்டு. சிம்பு அப்பாவாக வரும் கிட்டிக்கு எந்த வித வாய்ப்புமில்லை.  

படம் ஹிட் என்று அறிவிக்கப்பட்டு விட்டது, விமர்சனங்களும் பெரும்பாலும் சாதகமாகவே வந்துள்ளன. மிகச்சிறந்த படம் என்றெல்லாம் கூறும்படி படத்தில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் படத்தை கொடுத்த விதம் அதாவது ஹீரோயிசம், ஹீரோயினின் பேக்குயிசம், பஞ்ச் வசனங்கள், சம்பந்தமில்லாத காட்சிகள், ஆபாசம் என்று எதுவுமில்லாமல் அழகான காதல் படத்தை இயல்பாக கொடுத்ததை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். படம் பார்க்கலாம் எமாற்றமளிக்காது, காதலை ரசிப்பவர்களுக்கு.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


...மேலும் வாசிக்க





நெடு நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  படம் Farhan Akhtar  நடித்த படம் என்பதாலேயே பார்க்க  சென்றேன். கடைசியாய் பார்த்த இந்தி படமும் இவர் படமே,  Rock On, மனதுக்கு பிடித்ததால் இன்றும் சென்றேன். 



தாழ்வு மனப்பான்மையும், தனிமையும் ஒருவனை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றி விடலாம், அவனுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை அதைக்காதால் வெற்றி நிச்சயம் என அவனுக்கு தெரிந்து கூட  கடக்க முடியவில்லை என்றால்??  இல்லை அதைக்கடந்தால் ?? எல்லாவற்றுக்கும் இந்த படத்தில் பதில் உண்டு.ரொமாண்டிக் காமெடி என்று ஒரு வகைப்படம் உண்டு ஆனால் இது ரொமாண்டிக் திரில்லர் வகையை சார்ந்தது.

கார்த்திக் வாழ்வில் நன்றாக படித்தாலும் நல்ல வேளையில் இருந்தாலும் மேலே வர முடியவில்லை பிடித்ததை செய்ய முடியவில்லை, ஒரு தாழ்வு மனப்பான்மையுடன், சுய நம்பிக்கை இல்லாமல் எதிலும் பிடித்தம் இல்லாமல் இருந்து தாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என நினைக்கும் வாழ்க்கை ஒரு போன் காலில் மாறுகிறது. எப்படி என்பதுதான் படம்.காத்திக் இப்படி இருக்க காரணம் சிறுவயதில் இழந்த தனது அண்ணன், தனது அண்ணனின் இழப்புக்கு தான் தான் காரணம் என நினைப்பது அவன் தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளம். இறுதியில் வரும் அவன் அன்னனைப்பற்றிய நிகழ்ச்சி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.

கார்த்திக்( தமிழ் இந்தி என எந்த மொழிப்படத்திலும் ஏன் கதாநாயகன் பெயர் கார்த்திக் என்று இருக்கிறது? ) ஐ ஐ எமில்  படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான், அவன் மேலதிகாரி ஒரு நாள் அவனிடம் ஒரு வேலையை சொல்லி செய்ய சொல்கிறார், இரவு நேரமானாலும் முடித்துவிட்டு செல்ல சொல்கிறார், இவனும் அவ்வாறே செய்துவிட்டு வருகிறான், ஆனால் இரவே அவனுக்கு ஒரு போன் வருகிறது, மேலதிகாரி கண்ட படி திட்டி நான் செய்ய சொன்ன வேலை இது இல்லை நீ என்ன செய்துள்ளாய், நாளை காலை இந்த வேலைகளை முடித்து 1  மணிக்குள்ளாக எனக்கு கொடு என சொல்கிறார். மேலதிகாரி மேல் உள்ள கோவத்தை போன் மீது காட்டுகிறான், போன் சுக்கு நூறாகிறது. அதன் பிறகு  வேலையை முடித்து கடுக்க அவனை அவர் காரிலேயே வரச்சொல்லி கொடுத்த கோப்புகளை சரி பார்க்கிறார் பிறகு வாடிக்கையாளர் ஒருவரிடம் தவறான வாக்குறுதி கொடுக்கிறார், எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு அவனை நாடு ரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறார். இறங்கி என்ன செய்வது என தெரியாமல் நிற்கும் அவன் சரி என பக்கத்தில் உள்ள கடையில் உடைந்த போனுக்கு பதில் புதுசு வாங்குகிறான், அப்போதுதான் உடன் வேலை செய்யும் சோனாலியை பார்க்கிறார் வேறு ஒருவனுடன்.பின்னர் மேலதிகாரி செய்யும் சிறு  தவறை சுட்டிக்காட்டுவதால் எரிச்சல் அடையும் அவர் இவனை அவமானப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார்.



அதற்க்கு பிறகு இரண்டு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளிவராமல் இருக்கும் அவன் பின்னர் தற்கொலைக்கு முயலும் போது அவனுக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து பேசினால் மருமோயில் பேசுபவர் கார்த்திக். அவனுக்கு இவனைப்பற்றி எல்லாம் தெரியும் எனவும் தான் ச்ன்னபடி கேட்டால் இவன் வாழ்க்கை மாறிவிடும் என்றும் சொல்கிறான்.  ஒரு கட்டத்தில் அதை நம்பும் ஹீரோ கார்த்திக் அவன் சொல்படி கேட்க எல்லாம் மாறுகிறது. ஆனால் இந்த விஷத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என போன் கார்த்திக் விதித்த நிபந்தனையை மதிக்காமல் தன காதலி சோனாலி கிட்ட சொல்லிவிட நடப்பவை எல்லாம் தலை கீழ். அதன் பின்னர் நடந்தது என்ன, காதலியுடன் சேர்ந்தானா? போன் பண்ணிய  கார்த்திக் யார்?  மேலதிகாரியை என்ன செய்தான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்க. 

Rock on  படம் பார்த்த பிறகு தமிழில் இந்த மாதிரி படம் எப்போது வரும் என நினைத்தேன், அறைத்தோழன் அறிமுகப்படுத்தும் படம் எல்லாம் நன்றாக இருக்கவே அவன் சொல்லிய படி Farhan Akhtar  படமும் பார்க்க ஆரம்பித்தேன். இதுவும் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.  ஒரு motivational  படம் போல ஆரம்பித்து அதில் பலவற்றை தொட்டு சென்றுள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் மிகையாகாமல் மெல்ல தொட்டு சென்றுள்ளது. இதில் மோடிவேசன், திரில்லர், காதல்,  இயலாமை எல்லாமே உள்ளது. கடைசி வரை அந்த போனை பண்ணுவது யாரை இருக்கும் என நம்மை யோசிக்க வாய்த்த இயக்குனர் Vijay Lalwani க்கு நமது பாராட்டுக்கள்.

இசை வழக்கம் போல  Shankar Ehsaan Loy கூட்டணி, மிகப்பொருத்தமான இசை.  கதாநாயகி தீபிகா படுகோன், என்னமோ தெரியல இவரை எனக்கு முதலில் இருந்தே புடிக்காது, தம் அடித்து பப்பில் தண்ணி அடித்து டான்ஸ் ஆடும் நகரத்து இளம்பெண்.  இந்த காரக்டரில் இவரை பார்த்தது இன்னும் புடிக்கவில்லை ஆனால் நிறைவாக செய்துள்ளார்.  

கார்த்திக்காக Farhan Akhtar  மிகப்பொருந்தியுள்ளார், தாழ்வு மனபான்மையுடன் இயலாமையால் பொருமுவதாகட்டும், மிடுக்குடன் தான் IIM இல் படித்து வெளிவந்து தன்னை மிரட்டிய மேலதிகாரியை எளிதில்  மடக்கும் ஆளாகட்டும் எளிதாய் செய்துள்ளார். உண்மையாக படம் பார்க்கும்போது நாளை நாமும் இப்படி இருக்க வேண்டும் என நினைத்தேன். தயக்கத்துடன் நிறைய வேலைகளை நானும் இது போல செய்துள்ளேன், மனதில் இப்படி இருக்க வேண்டும் என நினைத்து இருக்காமல் நமக்கு அதெல்லாம் வராது என நினைத்ததுண்டு, எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ இனி அப்படி இருந்து பார்ப்போம் என தோன்ற வைத்துள்ளது இந்த படம். அழைத்து சென்ற  cinema addict  செண்பக ராஜனுக்கு நன்றி. இவர் எழுதும் வலைப்பூவில் கண்டிப்பாக இந்த படத்தின் நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.

படம் நெடுக டெலிபோனும் அவன் மனநிலையை காமிக்கும் வண்ணம் காட்டப்படும் cube  அருமை 

படத்தில் காட்டப்படும் காதல் காட்சிகள் சுவை, வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் காட்சியில் ஹீரோ முழிக்கும் குழப்பமான முழி எனக்கு புடித்தது 

இவ்வளவு சொல்லியும் படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் இருந்து வெளிவராமல் இருக்கும் கார்த்திக் அப்படியே மொழு மொழு கன்னத்தில் இருப்பது உறுத்துகிறது, மூன்று நாள் தாடி வைத்திருக்கலாம்.

கதை நடப்பது தற்காலத்தில், காய்கறி விக்கும் பெண்மணி எல்லாம் செல் போன் வைத்திருக்கும் நேரத்தில் கதாநாயகன் அதைப்பற்றி தெரிந்தும் அதை உபயோகிக்காமல் இருப்பது நெருடுகிறது.

காதல் வந்தப்புறம் கூட காதலியுடன் sweet nothings  பேசாமல் இருப்பதும், ஒரு sms  கூட அனுப்பாமல் இருப்பது அட போங்க செல்போன் வாங்காமல் இருப்பது டூ மச்.

அமெரிக்கா என்ன உலகில், இல்லை இல்லை நிலவுக்கு போன கூட ரெண்டு மலையாளி சந்திச்சா மலையலதுல தான் பேசிப்பாங்க, ஒரு மலையாளி யார சந்திச்சாலும் மலையாளம் கலந்த அந்த ஊர் மொழியை பேசுவாங்க ஆனா கேரளால இவர் பாக்கற எல்லா மலையாளியும் தெளிவான இந்தி பேசறது ஒத்துக்கவே முடியாது.

ஆனா இந்த குறை எல்லாம் தெரியாம படத்தை கடைசி வரை கொண்டு போன இயக்குனர்  மற்றும் அனைத்து குழுவினருக்கும் பாராட்டுக்கள்.


மறுபடியும் தமிழில் இந்த மாதிரி படம் வருமா? வரலாம், தல அஜித் நடிச்சா இந்த படம் கண்டிப்பா சூப்பர் ஹிட். தல எங்க ப்ளாக் படிக்கும தெர்ல ஆனா படிச்சு இதுல தமிழா நடிச்சா கண்டிப்பா சூப்பர் ஹிட்.

எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும், எனது மடிக்கணினி விசைப்பலகை என்னை திட்ட வேறு வழி தெரியாமல் தனது எதிர்ப்பை இப்படி காட்டுகிறது. அதனுடன் போராடியே பதிவெழுத வேண்டி உள்ளது. கொஞ்சம் மன்னியுங்கள்  

முதல் முறையாக திரை விமர்சனம் எழுதுகிறேன் அதனால் தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.






படம் பார்த்தது புதுப்பிக்கப்பட்ட தேவி திரை அரங்கில், டிக்கெட் வாங்க நண்பன் சென்றிருக்கும் போதே தற்காலிக பைக் பார்க்கிங்கில் இருவர் அடித்த கமெண்ட், " மச்சி சத்தியத்துக்கும் தேவிக்கும் இதாண்டா வித்தியாசம் "  காரணம் அப்போதுதான் திரையரங்கு ஊழியர் சொல்லிய வாக்கியம் " டெம்ப்ரவரி பார்கிங் எல்லாம் புல்லு போயிட்டு ஏழு மணிக்கு வா போ, சொல்லிட்டே இருக்கேன்ல எல்லாம் புல்லுனா மறுபடியும் வந்துகிட்டே இருந்த, ஏன்யா நிக்கற போயா"

ஜாக்கி சேகர் சொலியபடி புதுபிக்கப்பட்ட தேவி சூப்பர் ஆனா சத்யம் அளவுக்கு வராது, நான் என்னதான் மிடில் கிளாஸ் ஆளா இருந்தாலும் கண்டிப்பா படம் பார்க்க போகும்போதும் வரும்போதும் மன நிறைவுடன் வர வேணும் என நினைப்பவன். காசையும் கொடுத்து கண்டவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்கிட்டு அசிங்கப்பட்டு வரணும் என்றால் அதுக்கு இருபது ரூபாய் அதிகம் கொடுத்து சத்யம்கே போய்விடுவேன். தேவி சத்யம் கிட்டக்கூட வர முடியாது ஆனாலும் சத்யம்க்கு போட்டி கொடுக்க யாராவது வரணும். போட்டி அதிகம் ஆனாத்தான் விலை குறையும் தரம் அதிகமாகும் 


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் எழுதப்பட்ட சினிமா இடுகைகள்
டூரிங் டாக்கீஸ் ---- பழக்கமான கடைசி ரெகார்ட் சினிமா போடப் போறாங்க மண்ணைக் குவித்து உட்கார விசிலும் படமும் ஆரம்பம் திறந்த வெளிக் காற்றோடு ...மேலும் வாசிக்க
டூரிங் டாக்கீஸ்
----------------------------------
பழக்கமான கடைசி ரெகார்ட்
சினிமா போடப் போறாங்க
மண்ணைக் குவித்து உட்கார
விசிலும் படமும் ஆரம்பம்
திறந்த வெளிக் காற்றோடு
சுருட்டு வாசம் கூடவே
இரண்டு தடவை இடைவேளை
முறுக்கு கடலை மிட்டாய்
வணக்கம் பாத்து வெளியே வர
செகண்ட் ஷோவுக்கு பெரிய கியூ
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்க

க்மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.

இன்று பார்த்த குறும்படம் SIGNS.

12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.

அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் "புகைப்படம் எடுத்துக்கொள்" என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் "சும்மா விளையாடினேன்" என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் "சந்திக்க விரும்புகிறாயா" என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
"தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு "சந்திக்க விரும்புகிறாயா" என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.

எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள படத்தை பாருங்கள் :) மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.

இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிற‌து.க‌ண்க‌ளாலே இருவ‌ரும் பேசிக்கொள்வ‌து க‌விதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

மூன்று ம‌ணிநேர‌ம் செல‌விட்டு நான்கு குத்துபாட‌ல்க‌ள்,நாற்ப‌து ச‌ண்டைக‌ள்,நாலாயிர‌ம் "ப‌ஞ்ச்" ட‌ய‌லாக்குக‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌தில் இதைப்போல் நான்கு ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌லாம் :)

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY

முன்பு நானெழுதிய‌ க‌விதையொன்றுட‌ன் இப்ப‌திவை நிறைவு செய்கிறேன்

தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..

வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..

தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...

தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...

புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...

மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..



-நிலார‌சிக‌ன். 
குறிப்பு: கடந்த வருடம் இடுகையிட்டதை சமீபத்தில் வைரஸ் தின்றுவிட்டதால் இப்பதிவு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
       அவன் (சுஹோ) கடலை ஒட்டிய தண்டவாளத்தில் நடந்துகொண்டிருக்கிறான், தன்னை யாரோ அழைப்பதாய் உணர்ந்து திரும்புகிறான், கடல் எப்போதும்போல கரையோடு பேசிக்கொண்டிருக்கிறது. ...மேலும் வாசிக்க
       அவன் (சுஹோ) கடலை ஒட்டிய தண்டவாளத்தில் நடந்துகொண்டிருக்கிறான், தன்னை யாரோ அழைப்பதாய் உணர்ந்து திரும்புகிறான், கடல் எப்போதும்போல கரையோடு பேசிக்கொண்டிருக்கிறது. கடலுக்கடியில் பெயரிடப்படாத வண்ண மீன்களுக்கிடையே கிடக்கிறது ஒரு பீப்பர் (பேஜர் போன்ற ஒரு கருவி). மெல்ல பியானோவின் இசை அவிழ அவள் குரல் அவனை அழைக்கிறது,

                         சுஹோ.....




வருடாவருடம் பள்ளி நண்பர்கள் சந்தித்துகொள்ளும் நிகழ்விற்கு பத்து வருடங்களாக வராமலே இருக்கும் சுஹோவைப்பற்றி, அவன் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“இந்த வருடமாவது அவன் வருவானா?”,

“எனக்கு வருவான்னு தோணலை, அவன் இன்னும் அவளை மறக்கலை”

“யாரை?”,

“சூயேங்கைத்தான், அதோட இன்னைக்குதான் அவளோட இறந்த நாளும்கூட”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வருகிறான், சுஹோ. வழக்கமான விசாரிப்புகள் முடிந்து அவர்கள் இருவரும் காதலிக்கும்போது சந்தித்துக்கொள்ளும் அந்த கலங்கரை விளக்கத்தின் கீழே பேசிக்கொண்டிருக்கின்றனர், நண்பர்கள் அனைவரும்.சுஹோவின் நண்பன் கடலை பார்த்து கத்துகிறான், “சூயேங், நீ எங்க இருக்க? இவன் இன்னமும் உன்னை மறக்க முடியாமல் உன் நினைவாகவே இருக்கிறான். தயவுசெய்து இவன் நினைவிலிருந்துபோ” என்று அழுதபடியே கதறுகிறான். நண்பர்கள் அவனை அழைத்துசெல்ல சுஹோவின் நினைவுகள் பின்னோக்கி நகருகிறது.

கடலில் நினைவிழந்து கிடக்கும் அவனை, காப்பாற்றி கரையில் கொண்டுவந்துபோடும் அவள் தன்னுடைய பீப்பர் கடலியே தவறிவிழுந்திருப்பதை உணர்கிறாள். நண்பர்கள்தான் தன்னை காப்பாற்றியதாக அவனும் நினைத்துக்கொள்கிறான். எப்போதும் போல பள்ளி முடிந்து தன் தாத்தாவின் கடைக்கு வருகிறான், சுஹோ. தாத்தா கல்லறைபெட்டிகளை செய்து வருகிறார். அவன்வரும்போதுகூட ஓரு வயதானவர் தனக்கான பெட்டிக்கு அளவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். தாத்தாவிற்கு அவரது பழைய நினைவுகளை பேரனோடு பகிர்ந்துகொள்வதில் ஆர்வம். இருவரும் கடலை பார்த்தபடி வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அடுத்தநாள் பள்ளியில் இசைபாடத்தின்போது, பள்ளியின் கனவு பெண்ணாக சொல்லப்படும் சூயேங் இவனை திரும்பி திரும்பி பார்த்தபடி இருக்கிறாள். இவன் தன்னைத்தான் பார்க்கிறாள் என்பதை நம்பமுடியாமல் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டிருக்கிறான். சூயெங் தானாகவே வலிய வந்து தன்னுடன் பேசுவதையும் பழகுவதையும் ஆச்சர்யமாக பார்க்கிறான், சுஹோ. அவன் நண்பன் அவனிடம் “இந்த பணக்கார பொண்ணுகளே இப்படிதான், திடீர்ன்னு யாரையாவது சேர்த்துகிட்டு சுத்துவாங்க, அப்புறமா கழட்டியும் விட்டுடுவாங்க, அதோட அவ பின்னாடி சுத்துற நம்ம சீனியர் ஒருத்தன் உனக்கு குறி வச்சிட்டான்”என்கிறான்.

அன்று மாலையே அதுவும் நடக்க, நண்பர்கள் உதவியுடன் தப்பித்து இருவரும் சைக்கிளில் கடற்கரைக்கு வந்து சேர்கின்றனர். மெல்ல இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது.. பின் ஒருநாள் தன்னுடைய போன் நம்பரைக் கொடுக்கிறாள், சுஹோ, இரவில் தன் தங்கையுடன் சண்டையிட்டு அவளுக்கு போன் செய்கிறான், அவனுக்காக ஏற்கனவே செய்தி காத்திருக்கிறது. “சூஹோ நீ ஒரு மடையன், உன்னை ஒரு பெண் கவனித்துவருவதையே அறியாமல் இருந்திருக்கிறாய், கடலில் நீ தவறியபோது நானே விழுந்ததைபோலவே நினைத்துக்கொண்டேன், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறாள். இங்கேதான் தன்னை காப்பாற்றியது சூயேங்தான் என்பதை அறிகிறான்.

ஒரு மழை நேரம் சுஹோவின் தாத்தா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாய் செய்தி பள்ளிக்கு செய்தி வருகிறது. சுஹோ உடனே தாத்தாவை சந்திக்க ஓடுகிறான். அங்கே தாத்தா இவனுக்கான பியருடன் காத்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவு அழகான கிளைமேட் இதை அனுபவிக்கத்தான் உன்னை அழைத்தேன், மேலும் உன்னோடும் பேசவேண்டும் போல இருந்தது என்கிறார். அப்போது சுஹோ விட்டுவந்த அவனது புத்தகங்களை கொடுத்துச்செல்ல சூயேங் அங்கே வருகிறாள். அவளும் ஆர்வமுடன் தாத்தாவின் முதல் காதலை பற்றி கேட்கிறாள்.

பாட்டி போட்டோவின் பின் ஒளித்துவைத்திருந்த தன் காதலியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு தாத்தா தன் முதல்காதலை நினைவு கூர்கிறார். குடும்பத்தினரின் பலமான எதிர்ப்பினூடே உயிராக காதலித்து வந்த பெண்ணை போரின் காரணமாக பிரிய நேரிடுகிறது. அப்போது அந்த பெண் நீ வரும் வரை நான் காத்திருப்பேன். நீயில்லாமல் உயிரோடிருப்பேன் ஆனால் வாழமுடியாது, செத்தும்போவேன் ஆனால் பிரிந்திருக்க முடியாது என்கிறாள். கண்ணீருடன் இருவரும் விடை பெறுகின்றனர், ஆனால் போர் முடிந்து ஊர் திரும்பும்போது எனக்காக யாரும் காத்திருக்கவில்லை, எனக்கு அவள் சொன்ன வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருந்தது” என்கிறார். இருவரும் கலங்கிய கண்களுடன் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தாத்தா, தன் திருமண வாழ்வில் பாட்டிக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார், என்கிறான் சுஹோ. அப்படியில்லை எந்த ஒருவராலும் தன் முதல் காதலை எளிதில் மறந்துவிட முடிவதில்லை அவ்வளவுதான். சரிவிடு உன் தாத்தா அவர் காதலியோடு சேர்ந்திருந்தால் இன்று நான் சந்தித்திருக்கவே முடியாது, என்கிறாள் சூயேங், மேலும் அவர் இறந்தபின்னாவது அந்த பெண்ணுடன் வாழட்டும் என்கிறாள். எனக்கு இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதில் நம்பிக்கையில்லை என்கிறான். இதில் சற்று கோபமடையும் இருவரும் கோபித்துக்கொண்டு கிளம்புகிறார்கள்.

வீட்டிற்கு வரும் அவனிடம் தாத்தா தன் கதையை தொடர்கிறார். ஒரு நாள் எனக்கு ஒரு சவப்பெட்டி செய்யும் வேலை வந்தது, அங்கு சென்றபோதுதான் தெரிந்தது அது என் காதலியின் கணவருக்கு என்று, நாங்கள் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை, அவள் அழுதுகொண்டே இருந்தாள். வாழ்க்கை அப்படித்தான் ஒரு சிறிய வளைவில் நம்மை அப்படியே புரட்டி போட்டுவிடும், என்கிறார். சுஹோ தான் சூயேங்கிடம் கோபப்பட்டிருக்கவேண்டாம் என்று நினைக்கிறான். சூயேஙின் மீதான தன் காதலை உணர்கிறான், அதை அவளிடம் சொல்ல, அவளைத்தேடி வீட்டிற்கு செல்கிறான். ஒரு கல்லை எடுத்திவீச அவள்வீட்டு கண்ணாடி உடைகிறது. பி அங்கிருந்து ஓடிவருகிறான், வழியில் போனில் அவளுக்கு செய்தியை பதிகிறான். “நீ எப்போது சொல்லவதுபோல எல்லோரின் வாழ்விலும் ஒரு எல்லை இருக்கும் என் தாத்தாவிற்கு பாட்டி, அப்பாவிற்கு அம்மா, எனக்கு நீதான்” என்கிறான். அவனை துரத்திவரும் சூயேங் ஆம், எனக்கும் அப்படித்தான் என்கிறாள் அவன் பின்னாலிருந்து. இருவரும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட காதலை உணர்கின்றனர்.

ஒருநாள், நண்பர்களோடு சேர்ந்து அருகிலுள்ள தீவிற்கு ஒரு நாள் சென்று தங்கிவர முடிவு செய்து சூயேங்கை அழைக்கிறான். கடைசி நேரத்தில் மற்றவர்களின் வருகை தடைபட இருவரும் அந்த தீவிற்கு செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியான அந்த இரவில் விழிக்கும் அவன், அவளை தேடுகிறான். சூயேங், கடற்கரையில் அமர்ந்தபடி தனது டைரியில் எழுதிக்கொண்டிருக்கிறாள். அங்குவரும் சுஹோவிடம் ஓவ்வொரு வருடமும் என்னை நீ இங்கே அழைத்துவா, என்கிறாள். அடுத்த நாள் கிளம்பும் தருவாயிலும், சூயேங் அந்த மலையுச்சியில் விதைகளை தூவிக்கொண்டிருக்கிறாள். அங்கே வரும் சுஹோவிடம் மகிழ்ச்சியாக எதையோ சொல்ல வாயெடுக்க மயங்கி விழுகிறாள்.

அவசரமாய் ஊருக்கு திரும்பியதும், சூயேங்கின் தந்தை இவனை கடிந்துகொண்டு, அறைகிறார். அவளுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள ஹாஸ்பிட்டலுக்கு வருகிறான். அங்கே அவள் லுகோமியா என்ற நோயின் தீவிரத்தில் இருப்பது தெரிகிறது. ஆனால் சூயேங் மருத்துவமனையிலிருந்து ஓடிவிடுகிறாள். அவளைத்தேடி அவர்கள் பொதுவாக சந்திக்குமிடத்திலெல்லாம் தெடுகிறான் சுஹோ. எங்கும் அவள் இல்லாததால் மிகுந்த வருத்ததுடன் தாத்தாவை பார்க்க வருகிறான். அங்கே சூயேங் தனக்கான சவப்பட்டிக்கு அளவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள். தாத்தா அவர்களின் மனசுமையை குறைக்க, ஒரு நாள் தன்னுடைய காதலி இறந்துவீட்டதையும் அவளது இறுதி சடங்குகளை நானே செய்யவேண்டும் என்று அவள் விரும்பியதையும் தானே அதை செய்து வந்ததையும் சொல்கிறார். சுஹோ மேலும் கவலையடைகிறான், சூயேங், அவனிடம் நீ என்னை மன்னித்துவிடு சுஹோ என்று சொல்கிறாள். மெல்ல மெல்ல அவள் இறந்துகொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிகிறது, அவளை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான். வழியில் சுஹோ நான் எப்ப கூப்பிட்டாலும் நீ எனக்கு பதில் சொல்வியா? என்கிறாள்.

மருத்துவமனையில், சூயேங்கின் தந்தை அவனை அழைத்து, ”என்னிடம் நிறைய பணம் இருக்கு, ஆனால் என்னால் என் மகளை காப்பாற்ற முடியவில்லை, அவ்ளுக்கு எதுவும் செய்துவிடமுடியவில்லை, அவள் உன்னை விரும்புகிறாள். உன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்” என்கிறார். அவளும் அவனிடம் என்னை அந்த தீவிற்கு அழைத்துபோ சுஹோ என்கிறாள். ஆனால் கடுமையான புயலின் காரணமாய் படகுகள் கடலில் செல்ல இயலாது என்கிறார்கள். சுஹோ அவர்களோடு சண்டையிடுகிறான். தூரத்தில் இதை கவனித்தபடியே சூயேங் தன் மனதுடன் பேசுகிறாள், நீ ரொம்ப நல்லவன் சுஹோ, என்னுடைய இந்த கடைசி நாட்களை மறக்கமுடியாததாக ஆக்கியிருக்கிறாய், ஆனால் நான் உன்னை காதலித்ததற்காக என்னை மன்னித்துவிடு, என்னை நீ புரிந்துகொள்வாயா, சுஹோ என்கிறாள். அப்போது திரும்பிவரும் சுஹோ அழுதபடியே அவளிடம் உன்னுடைய இந்த சின்ன ஆசையை கூட என்னால நிறைவேற்ற முடியலை சூயேங் என்கிறான். மெல்ல புன்னகைத்தபடி அவன் மடியிலேயே உயிரை விடுகிறாள்.

மெல்ல பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வரும் சுஹோ, மீண்டும் அந்த தீவிற்கு செல்கிறான். அங்கே சூயேங்கின் டைரியை பார்க்கிறான். அதிலுள்ள வரிகள் உயிர்பெற்று, அவள் குரலிலேயே ஒலிக்கிறது.

“ நான் சுஹோவை காதலித்திருக்க கூடாது, ஆனால் அவன்மீதான என் காதலை என்னால் அடக்கி வைக்க முடியவில்லை, உன்னோடு அதிகநாள் வாழ முடியாவிட்டாலும் நான் உனக்காக காத்திருப்பேன். நீ சந்தோஷமா இருக்கனும் சுஹோ, நான் உனக்கொரு பரிசு வைத்திருக்கிறேன், உனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. இந்த மலையின் உச்சிமுழுவதும் நான் பூக்களின் விதையை தூவியிருக்கிறேன். அடுத்தவருடம் நாம் இங்கே வரும்போது அவை பூத்திருக்குமா? அவை என்ன நிறத்தில் இருக்கும்? எனக்கு இப்பொதே அதை பார்க்கவேண்டும்போல இருக்கிறது. இல்லை நானே அந்த பூக்கள், நீதான் என் கடல் நான் சிரித்த முகத்தோடு உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன்”

படித்துவிட்டு சுஹோ அந்த மலையுச்சிக்கு செல்கிறான். அங்கே மலை முழுவதும் பூக்கள், பூத்துக்கிடக்கின்றது. கடல் எப்போதும்போல கரையோடு பேசிக்கொண்டிருக்கிறது. கடலுக்கடியில் பெயரிடப்படாத வண்ண மீன்களுக்கிடையே கிடக்கிறது அந்த பீப்பர். மெல்ல பியானோவின் இசை அவிழ அவள் குரல் அவனை அழைக்கிறது,

“சுஹோ...”

“ம்ம்..”

“சுஹோ...”

“ம்ம்..”

“நான் உன்னை காதலிக்கிறேன்...”

“நானும்தான்........”

-------------------------------------------------------------------------------------------------------------------


Parang-juuibo எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கொரிய படமான தி கிளாசிக் பட்த்தின் இயக்குனர், அவருடைய திரைக்கதையில் உருவான கொரியப்படம் My Girl & I. வெகுசாதாரணமான திரைக்கதைதான், திடீர் திருப்பங்களோ, யூகிக்க முடியாத காட்சியமைப்புகளோ எதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இதுபோல நூறு தமிழ்படங்கள் பார்த்திருக்கலாம்.  ஆனாலும் என்ன ஸ்பெசல் இந்த படத்தில், காதல்.
மிக அருமையாக சொல்லப்பட்ட காதல், சுஹோவும் சரி அவனுடைய தாத்தாவின் காதலும் சரி. வெகு இயல்பு. ரம்மியமான காட்சியமைப்பு, மனதை கவ்வும் இசை, எதார்த்தமான வசனங்கள் இதெல்லாம்தான் ஸ்பெசல். முடிஞ்சா ஒருமுறை பாருங்க...
ட்ரெய்லர் இங்கே

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)








show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் ...மேலும் வாசிக்க
ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சி - பாம்பு. பாம்புக்கும் ரஜினிக்கும் பல தொடர்பு உண்டு... சினிமாவுல!. அதில் சில ...1. அவர் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி". அந்த படத்துல படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போது ஒருவித ஈர்ப்பு

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்... புரட்சி வேந்தன் ..... ...மேலும் வாசிக்க
விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....











புரட்சி பாரதம் கட்சி மக்களுக்கு செய்தது என்ன?

ஜெகன் மூர்த்தியுடன் காரசார விவாதத்தில் எஸ்.ஏ.சரவணக்குமார் , புரட்சி ரவி



தமிழகத்தின் முன்னால் முதல்வர் அறிஞர்அண்ணாவின் டிக்..டிக் .. கடைசி நிமிடங்கள் ........


அண்ணாவின் கடைசி அரசியல் பேச்சு ... நீதி கட்சியின் பொன்விழா மேடையில். .. நடந்தது என்ன?


முதல்முறையாக மௌனம் களைகிறார்
... நீதிக்கட்சியின் பொதுசெயலாளர் திரு பரமசிவத்தின் புதல்வர் "எக்ஸ்ரே" செந்தாமரை


------------------------------------------------------------------------------------


தாஜ்மஹால்.. சிவாலயத்தின் மீது கட்டப்பட்ட சமாதீயா...?

இந்திரா காந்தி அரசாங்கம் புரபசர் ஓக்கின் புத்தகத்தை இரவோடு இரவாக பறிமுதல் செய்ய காரணம் என்ன..?


கருப்பு வரலாற்றை... உலகுக்கு சொல்ல களம் இறங்குகிறார் ..... எஸ்.ஏ.சரவணக்குமார்



விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....


------------------------------------------------------------------------------------

விளம்பர/ஏஜன்சி தொடர்புக்கு : +91 9283286237

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


2008 ஆம் ஆண்டு ...மேலும் வாசிக்க

2008 ஆம் ஆண்டு பேர்ரி லெவின்சன்னின் இயக்கத்தில் இதே பெயரில் ஆர்ட் லின்சன் தன் ஹாலிவுட் திரை அனுபவங்களை தொகுத்து எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட காமெடி டிராமா வகை திரைப்படம்.

மிழ் திரையுலகில் அருமையான நடிப்பிற்க்கு  பெயர் போனவர்களின் பெயர்களை   பட்டியலிட்டால் பத்து விரல்களே அதிகம்.ஹாலிவுட் திரைப்பட உலகின் அருமையான நடிகர்களை பட்டியலிட்டால் பத்து விரல்கள் போதாது.அதில் முக்கியமான மோதிர விரலாய் இருப்பவர் ராபர்ட் டிநீரோ,மனிதர் படத்துக்கான ஸ்க்ரிப்டை கையில் வாங்கியவுடனே அந்த பாத்திரமாகவே மாறிவிடுபவர்,நடிகர் கமல் ஹாசனிடம் இவரின் பாதிப்புகள் அதிகம் பார்க்கலாம்,ஆரோக்கியமான விஷயம் தானே!

லகின் மிகச்சிறந்த 10 திரைப்பட கதாபாத்திரங்களில் இவரின் ”ரேஜிங் புல்” படத்தின் பாக்ஸர் ”ஜேக் லே மோட்டா” பாத்திரத்தை ஒன்றாகச் சொல்லலாம்,அதில் முதல் ஒரு மணி நேரம் வரும் இளம் வயது தோற்றத்துக்காக தன் எடை குறைத்து சிக்ஸ் பேக்ஸ் வைத்தவர்,அதன் பிற்பாதியில் வரும் நடப்பு கால தோற்றத்துக்காக 30 கிலோ எடையை கூட்டியிருப்பார்,சதை போடுவதென்றால் செயற்கையாக வெறும் பீர் தொப்பை மட்டும் வைப்பது அல்ல,முகத்தில் கூட சதைபோட்டு முதுமையை கொண்டுவந்திருப்பார்.இவர் நடிக்காத பாத்திரங்கள் உண்டா? எனத் தெரியவில்லை,இந்த 61 வயதிலும் மனிதர் படு பிஸி.கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள்.

ராபர்ட் டினீரோ இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பென் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் , அவர்  தன் புதிய படம் ஃபியர்ஸ்லியை முடித்து வெளியிடுவதற்க்குள் இரண்டு வாரங்களில் படும் அல்லல் துயரங்களை, மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள் .கட்டுக்கோப்பான ஒழுங்கோடு பாடு பட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரான இவர் ஸ்டுடியோ ஹெட்  என்னும் திட்ட நிர்வாக உயர் அதிகாரி லூவை (கேத்ரீன் கீனர்) திருப்தி படுத்த வேண்டி படத்தின் கதையை மாற்றுவது, நடிகர்களின் படத்தில் வரும் தோற்றத்தை திடீரென மாற்றுவது, கதாபாத்திரத்தை சாகடிப்பது,உயிர்பிழைக்க வைப்பது மற்றும் செலிப்ரிட்டியான அவர் அனுதினமும் வாழ்வில் சந்திக்கும் சர்ச்சைகள், பொல்லாப்புகள் என்றாலும் சொன்னவிதம் ஒரே வெடிச்சிரிப்பு தான்.

டம் பார்க்கும் நாமும் அவர் கூடவே போகுமிடமெல்லாம் பயணிக்கிறோம்.


வயிறு குலுங்க சிரிக்கிறோம். அவரின் முதல் மணவாழ்க்கை கசந்து விவாகரத்தாகி,முதல் மனைவிக்கு மிகப்பெரிய தொகையையும் வீட்டையும் அலிமனியாக(ALI MONEY) கொடுத்தும் மகளின் பாசமும் விடாமல் இவரை வாட்டுகிறது , இரண்டாம் மணவாழ்க்கையும் கசந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்து பின்னர் பேச்சுவார்த்தை என்னும் சமரச நிலைக்கு வந்து ஓயாத வேலைப் பளுவின் இடையிலும் பிரபல அட்டார்னிகளிடம் கவுன்சிலிங்கிற்கு  போய் வருகிறார்கள். இவருக்கு உள்ள நிதிநிலை இன்னொரு அலிமனி விவாகரத்துக்கு இடமளிக்கவில்லை.மனைவி கெல்லியின்  புரிதல் மற்றும்  ஒப்புதலோடு பிரிய நினைக்கிறார்


வ்வப் பொழுது நடிக்க வாய்ப்பு கேட்டு வலிய வந்து மாடல் நங்கைகள் படுக்கைக்கு விருந்தாகின்றனர்.இவரும் சோலியை முடித்து விட்டு உன்ன மைண்ட்ல வச்சுக்க்றேன் என்கிறார். இவரது இரண்டாம் மனைவி கெல்லிக்கு(ராபின் ரைட் பென்) ஸ்காட் சாலமன்(ஸ்டான்லி டஸ்ஸி) என்னும் ஒரு கதாசிரியரோடு கள்ளத் தொடர்பு இருக்கிறது.சாலமனுக்கு நடிகர் பிராட் பிட் தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை அளிக்க,சாலமனை இவரால் பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை,காரி துப்பவும் முடியவில்லை . இவரே ஒழுங்கில்லாததால் இவரால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , அவளை தலை முழுகவும் முடியாமல் படும் அவஸ்தை.அடடா!

சாலமனின் ஒற்றை ஸாக்சை படுக்கைக்கு அடியில் கண்டெடுத்து அதை வைத்து துப்பறியும் காட்சிகள் எல்லாம் படு ஜோர் .மேலும்  தன் பள்ளியிறுதி படிக்கும் மூத்த மகள் தூக்கு மாட்டி இறந்த இளம் ஸ்டூடியோ ஏஜென்டிடம் தன்னை பறிகொடுத்ததை சொல்கையில் ஏற்படும் பதட்டம்,பரிதவிப்பு என அப்படி ஒரு இயற்கையான நடிப்பு. தன் புதிய படத்தில் "ஷான் பென்" என்னும் பெரிய ஹீரோவை நடிக்க வைத்து ,படமும் முடிந்து ப்ரீவியூ காட்சி பிரமுகர்களுக்கு திரையிடப்படுகிறது,

முதல் கட்ட சோதனையாக படத்தின் ப்ரிவ்யூவால் வந்த தலைவலி:-


ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் படம் ஒரே வன்முறை,"ஷான் பென்" செத்திருக்க கூடாது, எனவும், மீதி பேர் அந்த நாயை துடிக்க துடிக்க சுட்டு கொள்வது தப்பு, ரொம்ப கொடுமை என்கின்றனர். இதை தங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து அட்டையிலும் திட்டி எழுதி ,திரும்ப கொடுக்க. ஸ்டூடியோ ஹெட் "லு" என்னும் பெண் உயர் அதிகாரி . இவரையும் படத்தின் இயக்குனரையும் அழைத்து , மனுஷன் சாகலாம், ஆனால் "நாய் சாகக் கூடாது." இது தான் இன்றைய ஹாலிவுட்டின் லாஜிக்,டிரென்ட் எல்லாம் .அதனால் நாயை பிழைக்க வை என்கிறார்.

வரின் பிரிட்டிஷ் இயக்குனர் ஜெரிம்மி (மைக்கெல் வின்காட்) கதையை மாற்ற முடியாது என முரண்டு பிடிக்கிறார்,நான் சொன்னபடி படம் எடுத்தால் அமெர்ரோஸ் பெர்ரோஸ் மாதிரி புகழ்ப்படும் என உறுதியாய் இருக்கிறார்,வேறு வழி தெரியாத "லு" வேறு ஒரு இயக்குனரை வைத்து அந்த காட்சியை படம் எடுக்க வைப்பேன் என மிரட்டி , மேலும் வரும் வாரம் "கேன்ஸ்" நடக்க போகிறது . அதில் இப்படம் சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெறாது எனவும் மிரட்டுகிறார்.

யக்குனர் ஜெரிம்மி அழுகிறார், புரள்கிறார். பொருட்களை தட்டிவிடுகிறார். பெரும் ஆர்பாட்டத்திற்கு பின்னர் பென் சமாதானம் செய்ய பூனைபோல பணிகிறார். "ஷான் பென்"ஐ அழைக்காமலேயே அவர் சம்மந்தப்பட்ட அந்த காட்சியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு எடுத்து நாயை பிழைக்க வைக்கிறார். பென்னிற்க்கோ சந்தோஷம், இயக்குனரை அப்படியே கட்டிக் கொள்கிறார். கிளைமாக்ஸ் மாற்றத்தை ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு போட்டு காட்ட, அவர் திஸ் பீஸ் ஐ வாண்ட் என்று துள்ளி "கேன்ஸிற்கு இப்படத்தை பரிந்துரைக்கிறார்.லூ மிகவும் பெருமிதத்துடன் திரிகிறார்.அங்க தானே நம்ம இயக்குனர் ஜெரிம்மி வச்சார் ஆப்பு.

இரண்டாம் கட்ட சோதனையாக ப்ரூஸ் வில்லீசால் வந்த தலைவலி:-



று மாதம் முன்பு தன் வேறு ஒரு புதிய படத்திற்கு ப்ரூஸ் வில்லீசிடம் அட்வான்சு கொடுக்கும் போதே கதைப்படி அவர் காரல் மார்க்ஸ் போல அடர்ந்த தாடி,மீசை வைக்க வேண்டும். என சொன்னதின் பேரில் அவர் ஆறு மாதம் தாடி,மீசை வளர்த்து கால்ஷீட் கொடுத்த தேதியில் ஆஜர் ஆகிறார். ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு யாரோ ஒரு பிரமுகர் "இதுவரை ப்ரூஸ் வில்லீஸ் தாடி,மீசை வைத்து நடித்ததில்லை" அப்படி நடித்தாலும் படம் ஓடுமா?ஓடாது , அதனால் வழக்கம் போல வழு வழு முகத்துடனே அவர் நடிக்கட்டும், என ஐடியா கொடுக்க.லூ வழக்கம் போல இவரை மந்திரிக்கிறார்.

யக்குனரும் ஸ்க்ரிப்டில் எளிதாக தாடி,மீசையை எடுத்துவிட்டு காட்சியை மாற்றி வைக்க , ப்ரூஸ் வில்லீசிடம் போய் தாடியை எடுக்க சொல்ல பயந்து அவரின் அதீத வயிற்றுவலி கொண்ட உதவியாளர் டிக் பெல்லிடம் சொல்லி பேச சொல்ல ,ப்ரூஸ் வில்லீஸ் டிக் பெல்லை ஆத்திரத்தில் வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்.பின்னர் ஆரம்பிக்கிறது விபரீதம். ப்ரூஸ் வில்லீஸ்  ஏசுகிறாரே பார்க்கணும்.?நம்மூர் கமல் ஹாசன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு ஏசுகிறார். கண்டதையும் போட்டு உடைத்து என் சம்பளத்தில் பிடிச்சுக்கோங்கடா கொன்னியா என்கிறார், ஐயோ.அருகில் சென்ற எல்லோரும் எல்லாம் சகட்டு மேனிக்கு வாங்கி கட்டி கொள்கின்றனர்.பென்னிற்க்கோ போதாத காலம் காதெல்லாம் ரத்தம்.

பெ
ன்னிற்கோ மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி. காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் பிடி வாதம் எல்லை மீற . ஸ்டூடியோ ஹெட் "லு "கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறார், நாளை கடைசி நாள், ப்ரூஸ் விலீஸ் தாடியை எடுத்தால் படம், இல்லை என்றால் ட்ராப் - ஊத்தி மூடலாம் என்கிறார். மறுநாள் எவ்வளவு கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் காரவானின் கதவை திறந்து வெளியே வர , எல்லா யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி.



தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் அவரை திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்லி இறுதியாக ஏச மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

மூன்றாம் கட்ட சோதனையாக "CANNES" திருவிழாவில் வந்த தலைவலி:-

ருவழியாக எல்லா சோதனையையும் கடந்து சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெற்று, படத்தை இரண்டாயிரம் திரை நட்சத்திர பார்வையாளர் முன் திரையிட. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்குகிறது, "பென்" இயக்குனர் ஜெரிம்மியின் முகத்தை சமாதானத்துக்காக பரிவுடன் பார்க்க, அவர் விருட்டென கூலிங் கிளாசை மாட்டிக் கொள்கிறார்.           

திரையில் "ஷான் பென்" பெரிய மணல் திட்டின் மேல் நிற்க அவரை துரத்தி வந்த வில்லன்கள் கூட்டம் அவரை ஆறு ரவுண்டுகள் சுடுகின்றது. அவர் பிதாவே இந்த பாவிகளை மன்னிப்பீராக, என்று அப்படி உருண்டு விழுந்து இறக்கிறார்.(படு இயற்கையான உருளல்)என்ன ஒரு நடிப்பு?. அடுத்து அவரின் செல்ல நாய் குரைத்த படி ஓடி வந்து அவரை பரிவுடன் நக்க, வில்லன் கூட்டம் அந்த நாயையும் விட்டு வைக்காமல் நான்கு ரவுண்டு,தலை வயிறு என சுட, அரங்கே ஊ.ஆ ,அவுச் ,என்று உச்சு கொட்டி மவுனிக்க ,


யாரோ ஒரு புண்ணியவான் கை தட்டலை லேசாக ஆரம்பித்து வைக்க , அரங்கே மந்தை ஆடு போல அதை தொடர்ந்து ஆரவாரம் செய்து கைதட்டி அங்கீகரிக்கிறது. அனைவரும் பாராட்ட, இயக்குனர் ஜெரிம்மி பிடிவாதம் ஜெயிக்கிறது, படம் அமோக வரவேற்பை பெறுகிறது. ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு வந்த கோபத்தில், வேண்டுமென்றே பென்னை விட்டு விட்டு தன் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு,மற்ற குழுவினருடன் ஹாலிவுட்டிற்கு பறக்கிறார். 

பென் வேறு விமானம் பிடித்தவர் பழைய படி தன் வழக்கமான அன்றாட  வாழ்க்கைக்கு திரும்பியவர், அடுத்த வாரமே புகழ்பெற்ற சினிமா பத்திரிக்கை ஒன்று நடத்திய புகழ்பெற்ற 30 ஹாலிவுட் த்யாரிப்பாளர்கள் பங்கு பெறும் வானிட்டி ஃபேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அங்கும் இவருக்கு கேன்ஸில் கிடைத்த எதிர்ப்பு அலையால் க்ரூப் போட்டொவில் இவரை இடது கோடிக்கு தள்ளி போட்டொ எடுக்கின்றனர். பின்னர் பென்னின் வாய்ஸ் ஓவரில் அவர் நடத்துங்கடா , இந்த அளவுக்கு என்னை ஹாலிவுட்டிலிருந்தே துரத்தாமல் ஓரத்திலாவது இடம் கொடுத்தீர்களே என்கிறார்.

ப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லியின் கள்ளக்காதலன் சாலமன் நடிகர் ப்ராட் பிட் திடீரென தன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தை நிராகரித்துவிட  கவலையில் குடித்து அழிகிறார்.அவரை இப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லி துரத்திவிட, அவர் பென்னின் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பென்னுக்கு அப்பாடா என்றிருக்கிறது .ப்ரூஸ் வில்லீசின் முன்னாள் உதவியாளர் பெல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறார்.அவருக்கு டேட்டிங் செய்ய பெண்ணே கிடைத்த பாடில்லை.

ஸ்டுடியோ ஹெட் லூவிற்கு சிறந்த படத்தை திட்டமிட்டு தயாரித்து நிர்வகித்தமைக்கா பாராட்டும் விருது கிடைக்க , கூசாமல் வாங்கிகொள்கிறார்.

யக்குனர் ஜெரிம்மி தன் படைப்பில் வெளியான ஃபியர்ச்லி என்னும் படம் அமோக வெற்றி பெற புகழின் போதையால் கோகெய்ன் போதைக்கு ம் அடிமையாகி தன் சூட்கேஸில் கோகெய்னை தைரியமாய் வைத்து விமானம் ஏற, கைது செய்யப்பட்டு போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்படுகிறார். பென்னுக்கு இது வருத்தமளித்தாலும் மீண்டும் ஜெரிம்மியுடன் இணைந்து படம் எடுக்க வேண்டும் என விரும்புகிறார்.அவர் வரும் வரை காத்திருக்க முடிவெடுக்கிறார்.

தை முடிகிறது. படம் முடிந்தவுடன் ஏற்படும் வியப்பு, எப்படி இந்த மனிதரால் தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறமுடிகிறது என்பது மட்டுமே.

ந்த கட்டுரையில் நான் சொன்னது சொற்பமே. படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிடும். சும்மாவா சொன்னார்கள் ?ஒரு படத்தை ரிலீஸ் செய்வது தலைபிரசவம் போல என்று? நாமெல்லாம் எளிதாக சொல்லிவிடுகிறோம், பட்டால் தான் தெரியும் போலிருக்கு. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?. இந்நேரத்துக்கு ஹிந்தியில் இதை படமெடுத்திருக்கணுமே? இல்லை ஷூட்டிங்கிற்காவது கிளம்பியிருக்கனுமே?யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

டத்தின் இசை மிகப்பாந்தம்:-மார்சிலோ சார்வோஸ்,ஒளிப்பதிவு அருமையும் அழகும் :-ஸ்டீபென் ஃபோண்டைன்.
வாராந்திர விடுமுறை நாட்களில் வயது வந்தோருடன் பார்த்து ரசிக்க ஏற்ற படம். படத்தினை தறவிறக்க சுட்டி

படத்தின் முன்னோட்ட காணொளி:-

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முன்குறிப்பு : சினிமா ரசனையில் ஒரு வகையினரின் அதீதத் தன்மையையொட்டிய மையம் கொண்ட இக்கதையை எழுதியவர், என்னுடைய நண்பர் ஃப்ராங்ளின். எழுத்து ...மேலும் வாசிக்க

முன்குறிப்பு : சினிமா ரசனையில் ஒரு வகையினரின் அதீதத் தன்மையையொட்டிய மையம் கொண்ட இக்கதையை எழுதியவர், என்னுடைய நண்பர் ஃப்ராங்ளின். எழுத்து ஆர்வம் மிகுந்தவர். இணையம், வலைப்பதிவு பற்றிய அடிப்படை அறிவை வளர்த்து வருகிறார். விரைவில் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக, அவர் அண்மையில் எழுதிய சிறுகதை ஒன்றை இங்கே பகிர விரும்புகிறேன். சற்று நீளமாக இருந்தாலும் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது என நம்புகிறேன்.

*  

கண்கள் இரண்டு : சிறுகதை – ப்ராங்ளின்

ரமாய் இருந்த கட்டிலின் மேல் தன்னைக் கிடத்திக் கொண்டிருந்தான், முத்து. செல் சிணுங்கி பின் நின்றது. மிஸ்டு கால். எடுத்துப் பார்த்தான். நாலைந்து மிஸ்டு கால். கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான், மடி மீது லாப் டாப். மெயிலில் தேடினான். அங்கும் எங்கும் அவளேதான்… லயா.

இனியும் அவளுக்குப் பதில் சொல்லவில்லை என்றால், பாவி நேராக வந்துவிடுவாள். சரி கிளம்ப வேண்டியதுதான். வாராத தலையை வாரிக் கொண்டான். டி சர்ட்டுக்குள் நுழைந்துகொண்டான். புகை கக்கி சிலிர்த்தது பல்சர்.

*

லைட் ஹவுஸ் ஸ்டேஷன். பறக்கும் ரயில் சந்தடியின்றி அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம். சென்னையின் இதயப் பகுதியில் இப்படி ஓர் இடம். லயா அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தாள். அவளுடைய கைப்பை அவளைப் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தது. முத்து தனது நடையை ஓட்டமாக்கினான். கோபக்காரி, கடித்துவிடுவாளே! கொஞ்ச நாள்பழக்கம் தான்… ஆனாலும் மனசு ஒட்டிக் கொண்டது. இது தான் கெமிஸ்டிரியோ? இத எந்த மாஸ்டர்கிட்ட கேக்கிறது? அவளருகில் வந்த அவனுக்கு மூச்சு வாங்கியது.

“என்னப்பா எவ்வளவு நேரம் காத்திருப்பது? எஸ்எம்எஸ்க்கும் பதில் இல்ல. போனையும் எடுக்கமாட்டேங்கிற? பிறகு உனக்கு எதுக்கு மேன்..?”

“சாரிப்பா. கோவிச்சுக்காத. வேலை கொஞ்சம் அதிகம். டென்ஷன் ஆகாதே… சரி இப்ப எங்க போலாம் சொல்லு.”

“எங்கேயாச்சும் தொலையலாம்.” லயா கொஞ்சம் சலித்துக் கொண்டாள்.             

“சரி அப்ப சினிமா?”

பதில் சொல்லவில்லை லயா.

“ஹீரோ யாருன்னு தெரியல. ஆனா நம்ம தலைவர்தான் இசை, நெட்ல கேட்டேன். பாட்டு ஒவ்வொண்ணும் சூப்பர். அதுக்காகவே போலாம்..!”

“மியூசிக் இருந்தா மட்டும் போதுமா?”

“ஹேய் என்ன பேசுற… எத்தனை படம் அவருடைய இசைக்காக ஓடியுருக்கு தெரியுமா?”

“சரிப்பா. அந்த ட்ரெண்ட் வேற.. இப்ப வேற..”

“என்ன இப்ப வேற.. எப்பவுமே அவருடைய இசை இமயம் தான். தெரிஞ்சுக்கோ!”

“என்ன தான் சொல்லு. கொஞ்ச நாளாவே அவருடைய இசை போர்தான். இப்ப பாத்தியா… புதுசா வந்திருக்கிற ரிஷி… என்ன கலக்கு கலகுறாரு பாரு இப்ப அவர்தான் நம்பர் ஒன். அவருடைய உயரமே வேற..”

முத்துவின் முகம் சட்டென்று மாறியது. பேசாமல் நடந்து வந்தான். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிட்டோமோ. ‘பய தேவனின் வெறியனாச்சே’ என்று லயா கலங்கினாள். இவன் எப்பவுமே இப்படித்தான். இசைக் கலைஞன் தேவனை குறைகூறினால் தாங்க மாட்டான். வேறு யாராவது இந்நேரம் இப்படிச் சொல்லியிருந்தால் சட்டையைப் பிடித்திருப்பன். தடம் புரண்ட பேச்சை மாற்ற லயா அவன் முதுகில் தட்டினாள்.

“என்னப்பா கோபமா? மூட் அவுட்டா?”

“இல்ல… இல்ல… வண்டியில ஏறு.”

*

முத்துவுக்கு மனசே சரியில்லை. என்ன இது இத்தனைக் காலமாய் இசையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தன் ஆத்ம இசைக்கலைஞன் தேவன் இன்று அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாவது அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு சாமானியனாய் திரையிசையுலகில் நுழைந்து இமாலய சாதனைகள் செய்தவர் அவர். கிராமியமா, கர்நாடகமா, வெஸ்டர்னா இல்லை இந்துஸ்தானியா எதைக்கேட்டாலும் தரக்கூடிய மேதை. ஒரு தலைமுறையே அவர் இசையில் கட்டுடுண்டு கிடக்கிறது. தமிழ் இரத்தத்தில் ஆர் என் ஏ, டி என் ஏ அதோடு அவரது இசையும் சேர்ந்திருக்கும்.

ஒரு காலத்தில் எந்தப் பத்திரிக்கையத் திருப்பினாலும் தேவனின் படமில்லாத சினிமா விளம்பரங்கள் இல்லை. ஒரு கதாநாயகனைவிட அதிக புகழ்பெற்ற இசைக்கலைஞன் இவராகத் தான் இருக்கமுடியும். எத்தனை புது இயக்குநர்கள் இவரால் வாழ்வு பெற்றார்கள், எத்தனை சொத்தை படங்கள் இவரது இசையால் வெற்றிகரமாக ஓடியது. இசையில் புதுப் புது கோர்வைகளை தமிழ் இதயங்களுக்கு தந்தவர் இவரல்லவா?

ஆனால் இன்று..?

அந்தப் புது இசைக் கலைஞன் பின்னாடி ஓடுகிறதே..! நேற்று வரை இங்கே பாடிய காக்கைக் கூட்டங்கள் எங்கே? வரிசை அந்தப் பக்கம் போய்விட்டதா? இது ஒன்றும் தேவனின் திறமை மீது சந்தேகப்பட்டுப் போகவில்லை. இசை மாற்றத்தைவிட ஆள் மாற்றத்தைத் தேடித் தான் போயிருக்கிறது. ஒரு சாமானியனை திட்டம் போட்டு ஓரம்கட்டுகிறார்களோ? முத்துவுக்குத் தாங்கவில்லை. தூக்கம் வராமல் உருண்டு புரண்டு தவித்தான்.

இசையுலகில் ரிஷி ஒரு புதிய புயலாய் நுழைந்தார். நூறு மீட்டர் ஓட்டத்தில் எடுத்தவுடன் தொடங்குமே ஒரு வேகம். அதுபோன்ற வேகம் அவருடையது. தொட்ட இடமெல்லாம் வெற்றி. இமயம் வென்ற சேரனைப் போல இவர் வடக்கை வென்ற இசைக் கலைஞன். குறுகிய காலத்தில் இவர் அடைந்த உயரம் மற்றவர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது. இதுவரை வேரிடத்தில் நின்ற வரிசை இப்போது இவர் வீட்டுமுன். ஆம், அதுதான் சினிமா. மாறி நின்றவர்களில் இசை மாற்றத்தை விரும்பியவர்களை விட ஆள் மாற்றத்தை விரும்பியவர்களே அதிகம். திறமையும் உழைப்பும் ரிஷியை நாலுகால் பாய்ச்சலில் முன்னே கொண்டுசென்றது. முத்துவுக்கு இது தெரிந்தாலும் மனது ஏனோ ஏற்க மறுக்கிறது.

வேறு எந்த இசையையும் கேட்கமாட்டேன் என்றவன், யாரும் அறியாமல் ரிஷியின் இசையை கேட்டான். ஆமாம் புதிதாய், வித்தியாசமாய்த் தான் இருக்கிறது. இசையில் இது ஒரு புது வார்ப்புதான். நன்றாகத்தான் இருக்கிறது. ரசித்தான், ஆனாலும் இது எத்தனை நாளோ என்ற எண்ணமும் எழுந்தது.

ரிஷி அள்ளிக்கொண்டு வந்தார். சென்ற இடமெல்லாம் விருதுகள் வரிசைபோட்டுக் காத்திருந்தன. இப்போது எந்த சேனலைத் திருப்பினாலும், தினசரி வாரப் பத்திரிக்கையைத் திருப்பினாலும் ரிஷி மயம் தான். அவர் முகமும், அவரைப் பற்றிய செய்திகளும் இல்லாத ஊடகங்களே இல்லை என்றாகிப் போனது. நேற்றுவரை தேவனைத் தலையில் வைத்துக் கொண்டாடியவர்கள் எங்கே? நேற்று வரை துதித்த நாக்கும், போற்றி எழுதிய பேனாக்களும் மாறிவிட்டதா? அவரை மறந்துவிட்டார்களா? இல்லை மறைக்க முயற்சிக்கிறார்களா?  முத்து மனத்துக்குள் வெறுமையை உணர்ந்தான், அவனால் தாங்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை உருண்டு புரண்டுதவித்தான்.
*

மாலை ஆறு மணி.

நான்கு மணிக்கே முடிக்க வேண்டிய வேலையை இன்னும் முடித்தபாடில்லை. செல், பத்து முறையாவது சிணுங்கியிருக்கும். லயா கோபமாய் இருப்பாள். பார்க்க வேண்டிய மெயிலையும் அனுப்ப வேண்டிய மெயிலையும் முடித்துவிட்டால் போதும். அப்பாடா அதுவும் ஆயிற்று. கம்யூட்டரைத் தூங்க வைத்தான். உதை வாங்க அவனுடைய பல்சர் தயாராக இருந்தது.

கருப்புக் கோடு மேல் நீலப் புள்ளியாய் முத்துவின் பல்சர் மாமல்லபுரம் ரோட்டில் பறந்தது. பணணை வீடுகளுக்கு நடுவே தனியாய் நின்ற ஒரு மரத்தடியில் லயா நின்றிருந்தாள். வண்டியை ஓரம் கட்டினான். இவன் இப்படித்தான் என்பதால் தாமத்துக்காக லயா கோபப்படவில்லை. கால் வலித்ததால் வண்டியின் மேல் அமர்ந்தாள்.

“என்ன முத்து… டல்லாயிருக்கே. ஷேவ் பண்ணாம நாலு நாள் குளிக்காதமாதிரி.. என்ன..?”

“மனசு சரியில்லே. எதையோ பறிகொடுத்தமாதிரி…”

“ஏன் ஆபிசில் ஏதும் பிரச்னையா? இல்ல வீட்டிலயா?”

அழகான சாலையில் அதைவிட அழகாய் கார்கள். யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், வேகமாய்ப் போவதில் மட்டும் கவலைப்பட்டுக் கொண்டு… கண்ணுக்கெட்டிய தூரத்தில் என்றோ விபத்தில் சிக்கி உருக்குலைந்துபோன கார்கள். காணும்போது மட்டும் ‘ஐய்யோ பாவம் யாரோ?’. அதற்கு மேல் சிந்திக்க யாருக்கும் நேரமுமில்லை, இடமுமில்லை. எவ்வளவு நேரம்தான் போகிற, வருகிற வண்டிகளை கணக்கெடுப்பது? லயா மௌனம் கலைத்தாள்.

“நாளைக்கு லீவுதானே.. எங்கே போலாம்?”

“எனககுப் பெங்களூரில் வேல இருககு. இன்னைககு நைட் போறேன்.”

“சொல்லவே இல்ல… அப்ப நானும் வர்ரேன்.”

முத்து மெளனமாயிருந்தான்.

“உன் மனசுல என்னயிருந்தாலும் வெளிப்படையா பேசு. கொஞ்ச நாளாவே கவனிக்கிறேன், நீ நார்மலில் இல்ல.”

“லயா.. ஒண்ணு கேட்கட்டுமா?”

“சொல்லுடா.. என்ன பிரச்னை..?”

“தேவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறே..?”

லயா அதிர்ந்தாள்.

அடப் பாவி..! அவனவனுக்கு வீட்ல பிரச்னை, ஆபிஸ்ல பிரச்சினை, அதிகம் போனா காதல் பிரச்னை. இவன் என்ன ஆளு? தலையில் அடித்துக்கொண்டாள்.

“ஹேய் என்னப்பா இது. அவருக்கென்ன இப்போ..?”

“இல்ல தேவன விட ரிஷி பெரிய திறமைசாலியா? என்ன சாதிச்சார்ன்னு எல்லாரும் இப்படித் தூக்கி வச்சி ஆடுறாங்க?”

“நீ வெறியனா இருக்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்துல ஜீனியஸ், ஒப்பிடவே கூடாது.”

“ஆனாலும் தேவனின் இசை மக்கள பாதிச்ச அளவு ரிஷியின் இசை பாதிச்சிருக்கா என்ன..?”

“டேய் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசைடா. நீ இன்னும் கலையை சரியாப் புரிஞ்சிக்கலே.”

“எனக்கென்னமோ எல்லாம் ஒரு சதியோ… ஒரு பாமரன திட்டம்போட்டு கவுக்கிறாங்களோன்னு தோணுது.”

“ஒண்ணும் இல்லடா. மாற்றம் தானா வரும். யாரும் நிரந்தரம் இல்ல. நம்மால தடுக்கவே முடியாது. பீதோவன், மொஸார்ட், பேட்ச் இவங்க இசை இன்னும் இருக்கு. மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காசோ ஓவியங்களெல்லாம் வேறு வேறு வகை. ஆனா யாரும் யாருக்கும் குறைந்தவங்க இல்ல. ஒருத்தர் புகழ இன்னொருத்தரால அழிக்க முடியாது. அவனவனுக்கு எழுதிவச்ச அரிசி அவனவனுக்குத் தான்டா.”

முத்து பதில் பேசவில்லை. இன்னமும் அவன் குளம் தெளியவில்லை.

“என்ன இருந்தாலும் தேவனைப் போல் வருமா?”

“அய்யோ விடுடா சாமி. ஜாலியா இருக்கவும் மாட்டே; விடவும் மாட்டே. ஒண்ணு தெரியுதுப்பா.. உனக்கு மியூசிக்ல டி மேஜர், டி மைனர்னு தெரிஞ்சிருக்கு ஆனா காதல்ல…”

“புகழோடு இருக்கும்போதே விலகணும்; இல்ல ஓய்வு பெறணும், சரிஞ்சிட்டா தாங்க முடியாது இல்ல..?”

“அவங்களுக்கா இல்ல உனக்கா..?”

“இல்ல பொதுவா சொல்றேன்.”

“சாமி தாங்க முடியலைடா. வண்டிய எடு. நானும் பெங்களூர் வர்ரேன், ரிசர்வ் பண்ணிடு.”

லயா வண்டியில் ஏறிக்கொண்டாள். சுகங்களைச் சுமந்து கொண்டு பல்சர் சாலையில் சிறகடித்தது.

*

பெங்களூரு. கப்பன் பார்க். ஒரு ஓரமாய் விரிந்திருந்த புல் தரையில் லயா பூவாய் மலர்ந்திருந்தாள். அருகே சிலையாய் முத்து. இவர்களைப் போல இணையாய் வந்தவர்கள் லேசான குளிருக்குக்கூட உரசிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கு இடையேயும் மவுனம் பேசிக்கொண்டிருந்தது.

லயா கலைத்தாள்.

“என்னப்பா கல்லு மாதிரி உட்காரவா இங்க வந்தோம். எதைவாவது பேசு..”

“என்னத்த பேசச் சொல்ற..? வள வளன்னு நீ தானே எப்பவும் பேசுவ. இப்ப ஏன் சும்மா இருக்க..?”

“சாதாரண விஷயம்ன்னா தயங்காம பேசுவேன்.. ஆனா..”

“என்ன ஆனா? சும்மா சொல்லு.”

“சரி காதலப் பத்தி நீ என்ன நினக்கிறே..?”

“நான் என்னத்த நினைக்க..”

“இல்லப்பா.. அப்படி ஒண்ணு இருக்கிறதாவது தெரியுமா?”

“நீ நிறைய படம் பார்ப்ப போல.. வாழ்க்கை சினிமா மாதிரி இல்ல.”

“நம்ம பழக்கத்தப் பத்தி நீ என்ன நினக்கிறே..? வெறும் ப்ரண்ஷிப்பா இல்ல அதுக்கு மேலயா..?”

“இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படி..? எனக்குச் சொல்லத் தெரியல.”

“சரி.. உங்க ஆபிஸ்ல கூட நிறைய பொண்ணுங்க இருக்காங்க இல்லையா? ஆனா அவங்க யாரும் உனக்குப் ப்ரண்ட்ஸ்ங்க் இல்ல ஏன்?”

“எனக்குப் பிடிக்கலை.”

“அப்ப என்ன எப்படிப் பிடிச்சது..?”

“தெரியல.”

“ஆனா எனக்கு உன்னப் பிடிச்சிருக்குடா. நீ சின்ன சைக்கோதான் ஆனாலும் உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு.”

முத்து அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“எனக்கு உன்ன விட்டா யாரும் இல்ல. எனக்கு இதுக்கு மேல சொல்லத் தெரியல.”

“போதும்டா இது போதும். நாலு வார்த்தைன்னாலும் உன் வார்தை எனக்குத் திருவாசகம் தான்.”

லேசாக நிலா தெரிய ஆரம்பித்தது. குளிர்ந்த ஈரக்காற்றில் பூக்கள் ஆட ஆரம்பித்தது. இருவரும் நடந்தார்கள். முத்துவின் கை லயாவின் விரலைப் பிடித்திருந்தது.
*

பெங்களூர் ரயில் நிலையம். அந்த ஹெளகாட்டி விரைவு வண்டி புறப்படத் தயாராக இருந்தது. அந்த எஸ் 7 கோச்சில் இரண்டு மேல் பெர்த்களும் ஆள் வராமல் வெருமையாய் இருந்ததது. பயணிகள் டிடிஆரின் வரவுக்காக காத்திருந்தார்கள். சிவப்பிலிருந்த சிகனல் மஞ்சளுக்கு மாறியது. சரியான நேரத்துக்காக ட்ரைன் டிரைவர் காத்திருந்தார். முடிந்தவரை வேகமாக வந்த ஆட்டோக்காரன் ரயில் நிலைய வாசலின் அருகில் இறக்கிவிட்டான். பணத்தைக் கொடுத்துவிட்டு, சுமையைத் தூக்கிக்கொண்டு லயாவும், முத்துவும் ஓட்டமும் நடையுமாக ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டே…

“எல்லாம் உன்னால தாண்டா. வாய் பாத்துட்டெ ஒரே இடத்துல நின்னுட்ட்டே இருப்ப்பே. நேரம் ஆச்சின்னு சொன்னா காதுல வாங்குறியா..”

“நீ மட்டும் என்னவாம். படிச்சது எம் சி ஏ ஆனா வளையல் கடைக்குப் போனாமட்டும் சராசரி பொண்ணுங்க மாதிரிதான் நடந்துக்கிற. ஒருமணி நேரமா நான் வெளிய காத்துக்கிடந்த வலி எனககுத் தான் தெரியும்.”

“சரி சரி.. வா வா.. வண்டிய எடுத்துட்டா அவ்வளவுதான்.”

இருவருக்கும் மூச்சு வாங்கியது.

விசில் சத்தம் ஓங்கிக்கேட்டது. ரயில் மெதுவாக நத்தையாய் நகர்ந்தது.

“ஏறு சார் ஒரு கோச்சில.. உள்ளார போயிடலாம்.” போர்ட்டர் சத்தமிட்டார்.

ஏறினார்கள். முதுகும் கையும் பாரத்தால் வலித்தது. வெஸ்டிபுல் வழியே ஒவ்வொரு கோச்சாய் கடந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். டிடி வந்து இ டிக்கெட் பேப்பரில் டிக் அடித்துவிட்டுப் போனார். அருகில் அமர்ந்திருந்த வட மேற்கு இந்திய முகங்கள் ஏதோ ஒரு மொழியில் சல சலத்துக்கொண்டிருந்தார்கள். மணி பதினொன்றாகியது.

“டேய் தூங்கலாமா..? காலையில சீக்கிரம் வேலைக்குப் போகணும். என்ன..”

“எனக்கும் தான். ஆமா.. பஃப்புககுப் போனீயே.. என்ன குடிச்ச..?”

“லெமன் ஜூஸ்.”

லயா தலையில் அடித்துக்கொண்டாள்.

“ஒண்ணு தெரியுமா… அங்க கூட இன்ஸ்ட்ருமென்டல் மியூசிக்ல எங்க ஆளோட பாட்டுதான் கேட்குது.”

“அப்படியா.. ஆனா இப்போ இன்டர்நேஷனல் லெவல்ல யாருன்னு நான் சொல்லணுமா?”

முத்துவின் முகம் கருத்தது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது. ஒன்றுமே சொல்லாமல் அப்பர் பெர்த்தில் ஏறி படுக்கப் போனான். சப்பை மூக்கும், மீசையில்லா சைனா முகங்களும் தூங்கத் தயாராயின. விளக்குகள் அணைக்கப்பட்டு ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

காலை ஆறுமணி. பெரம்பூரைத் தாண்டி வண்டி வந்துகொண்டிருந்தது. இதிலிருந்து சென்ட்ரல் போகத்தான் நேரமாகும் போல. என்ன இது இததனை மெதுவாக. லயாவும் முத்துவும் மற்றவர்கள் முதலில் இறங்கட்டும் என்று காத்திருந்தார்கள். வண்டி சென்ட்ரல் நிலையத்துக்குள் நுளைந்தது. அது ஹெளகாட்டி போகும் ரயில். பிளாட்பார்மில் கூட்டம் காத்திருந்தது. இருவரும் எழுந்தார்கள். கொக்கியில் மாட்டியிருந்த கேரி பேககை கூட மறக்காமல் எடுத்துக் கொண்டு இறங்கினார்கள்.

இனி ஹாஸ்டலுககுச் செல்ல நேரமில்லை. லயாவுக்கு நேரமாகியது.

“முத்து.. என்னோட லக்கேஜு உன்னோட ரூம்ல இருக்கட்டும். நா ரெடியாகிட்டு அங்கிருந்தே வேலைக்குப் போயுடுறேன் என்ன? உனக்கு ஒண்ணும் ஆட்சேபனையில்லையே!”

“எனக்கு ஒண்ணுமில்ல தாயே.. ஆனா சீக்கிரம் இடத்த காலி செய்யணும்.”

கதவைத் திறந்து உள்ளே சென்ற முத்து கட்டில் மேல் விழுந்தான். லேப் டாப்க்கு சார்ஜ்யைக் கொடுத்தான். அருகில் இருந்த சி டி ப்ளேயருக்கு ரிமோட்டால் உயிர் கொடுத்தான். அதில் அவனுடைய ஆஸ்தான் இசைக் கலைஞனின் பாடல் ஓங்கி ஒலித்தது. லயா தன்னுடைய பெட்டியை திறகக இழுத்தபோது அந்த கேரி பேக சரிந்து விழுந்தது. நங் என்ற சத்தம் கேட்டுப் பார்த்த இருவரும் அதிர்ந்தார்கள். அது ஒரு சின்ன கைத்துப்பாககி.

முத்து அந்தச் சனியனை எடுத்துப் பார்த்தான். சைனாவில் தயாரிக்கப்பட்டது.

லயாவுககு வேர்த்தது.

“டேய் என்னடா இது? நம்மகிட்ட இது எப்படி?”

“ம்ம்.. இறங்குற அவசரத்துல அங்கயிருந்த அசாம் காரங்களோட பைய தூக்கிட்டு வந்துட்டு இங்க இது எப்படின்னு கேக்குற.. அவசரக் குடுக்க..”

“சாரிடா.. பேசாம இத போலீஸ்ல கொடுத்துடலாமா..? என்ன சொல்ற..?”

“ஏன் இரண்டுபேரும் உள்ள போறதுக்கா..? இது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி. இத யாரும் தேடி வரமாட்டாங்க. போலிசுக்குப் போனா சிக்கல் வரும். பேசாம இது இங்கேயே இருககட்டும். நான் வச்சுககிறேன்.”

“டேய் எனக்கென்னமோ பயமா இருக்குடா..”

“ஒண்ணும் பயப்படாதே. அதுபாட்டுக்கு பெட்டியில தூங்கப் போகுது.”

முத்து அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.

*

இந்த முத்து ஏன் இப்படியானான்? அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறானே. ஒரு போன் இல்ல மெஸேஜ் இல்ல. அவனுடைய போனும் செத்துக்கிடக்குது. ஆபிசுக்கும் போகல. என்னாச்சு இவனுக்கு? என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். வீட்டை விடு வெளியே வந்தாள். இவனை எந்கே தேடுவது. இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. சரி அவனுடைய அறைக்குச் செல்வோம் என்று ஆட்டோ பிடித்தாள். வந்த இடம் வந்ததும் இறங்கிக்கொண்டாள். இந்த ஆட்டோக்காரன் சென்னையின் பேரைக் கெடுக்கும் இன்னொரு கொள்ளைக்காரன் போல, இரக்கமேயில்லாமல் கூலி கேட்டான். சண்டைபோட மனசுமில்லை, நேரமுமில்லை காசைக் கொடுத்துவிட்டு நடந்தாள்.

முத்து புதிர்தான். கைநிறைய மன்னிக்கவும் பை நிறைய சம்பளம் வாங்கும் மென்பொருள் இளைஞன். பீட்சா சாப்பிடாத, பெப்சியும் கோக்கையும் சூடான சாம்பார் சாதத்தோடு சாப்பிடாத, பப்ஃபுக்குப் போகாத டீசன்டான கிராமத்தான். கலைகளை நேசிக்கும் மென்மையான ஆனால் கோபக்கார இளைஞன். இதுதான் அவளை அவனோடு கட்டிப்போட்டது. நினைத்துக் கொண்டே வந்தவள் வீடு பூட்டியிருந்ததைப் பார்த்து மலைத்தாள்.

தன்னிடம் இருந்த இன்னொரு சாவி கொண்டு திறந்தாள். அறை அலங்கோலமாக் கிடந்தது. கட்டில் மேல் சூட்கேஸ் திறந்துகிடந்தது. அன்றைக்கு இதில்தானே அந்த ரிவால்வரை வைத்தான். அவளுடைய இதயம் நின்று மீண்டும் துடித்தது. அவசரமாக வெளியேறினாள். அருகே பெட்டிக்கடையில் தினசரிகளின் தலைப்புச் செய்திகள் தொங்கிக்கொண்டிருந்தன. அதில் சமீபத்தில் அவார்டு வாங்கி சாதனை புரிந்த இசைக்கலைஞன் ரிஷிக்கு நடக்கும் பாராட்டு விழாவே தலைப்புச் செய்தியாக இருந்தது. அதோடு பல இசைக் கலைஞர்களும் முக்கியமாக தேவனும் பங்குபெறுவதாக செய்திகள் எட்டுகால செய்தியாக வந்திருந்தது. ஏற்கனவே முத்து இதைப் பற்றிச் சொல்லியிருந்தான். அப்போது கூட அவனுக்குப் பிடித்த தேவன் பங்குபெறுவதைப் பற்றி பெருமையாகச் சொன்னான். ஏதோ உளறுகிறான் என்றே நினைத்தாள்.

லயாவுக்கு பொரிதட்டியது. இவன் அங்குதான் போயிருப்பான். பைத்தியம் போல ஏதாவது விபரீதமா செய்து தொலைக்கக்கூடாதே..

லயாவின் இதயத்துடிப்பு அதிகமானது.

ஒரு ஆட்டோ பிடித்தாள். அது நேராக காமராஜர் அரங்கம் நோக்கி விரைந்தது.

*

காமராஜர் அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வழியெங்கும் ரிஷியின் கட் அவுட், ப்ளக் போர்டுகள். சில இடங்களில் தேவனின் போஸ்டர்கள். முத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். இடுப்பில் அது பத்திரமாக இருந்தது. எப்படியும் அரங்கில் நுழைந்துவிட வேண்டும். வருகிற அனைவரும் ரசிகர்கள்தானே, தொண்டர்கள் அல்லவே.. அதனால் அத்தனை பிரச்னையிருக்காது. நேரம் சென்றுகொண்டிருந்தது. கார்கள் அணிவகுத்தன. முத்து இதுவரை தேவனை நேரில் கண்டதில்லை. இன்றாவது அருகில் சென்றாக வேண்டும் அது அவசியம் அல்லவா? வந்ததே அதற்குத்தானே..

ரிஷிக்கு நடக்கிற பாராட்டு விழாவில் தேவன் கலந்துகொள்வதே முக்கியமான விஷயமாக பேசப்பட்டது. ஆமாம், ரிஷிதானே தேவனின் முதலிடத்தை தட்டிச்சென்ற போட்டியாளர். இந்த பாராட்டு விழாவுக்கு தேவன் வருவாரா மாட்டாரா என்ற பட்டிமன்றமே நடந்தது. தேவன் எங்கே வரப்போகிறார் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எல்லோருடைய நினைப்பையும் தேவன் பொய்யாக்கி, விழாவுக்கு வர சம்மதித்தார். நல்ல வேளை தேவன் வரசம்மதித்தார், இல்லையென்றால் சிலரை திட்டமிட்டே திட்டி எழுதும் எல்லாம் தெரிந்த ஞானிகள் சாணியடிப்பார்களே!

விழா தொடங்கியது. கலையுலகமே திரண்டிருந்தது. நேற்று வரை தேவனின் தோட்டத்தில் பாடிய சில காக்கைக் கூட்டங்கள் இன்று ரிஷியை வானளாவ புகழ்ந்து தள்ளின. முத்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் விலகாமல் அமர்ந்திருந்தான். சரி, காத்திருப்போம் என்று அமர்ந்திருந்தான்.

இப்போது தேவனின் முறைவந்தது. பேசத்தொடங்கினார். முத்து பரவசமானான். சின்ன வயதிலிருந்தே பாலைப் போல பருகிவந்த இசையல்லவா அவருடைய இசை! இப்போது தான் முதல் முதலாக தன் ஆத்மார்த்த கலைஞனை நேரில் பார்க்கிறான். ஒரு நடிகனைப் போல கவர்ச்சி இல்லை, ஆனாலும் ஏதோ ஒன்று கட்டிப்போடுகிறது என்றால் அது காலகாலமாய் கேட்டு வளர்ந்த இசையால் அல்லவா?

தேவன், ரிஷியின் சாதனை பற்றி மனப்பூர்வமாக புகழ்ந்தார். பாராட்டினார். இசைத்துறையின் உயர்ந்த இந்த விருது வாங்குவது அத்தனை எளிதல்ல என்பதையும், அதற்கு ரிஷி உழைத்த உழைப்பையும் அவருடைய திறமையையும் பாராட்டி விடைபெற்றார். நிறைவாக ரிஷி நன்றி சொல்ல வந்தார். அந்தப் பேச்சில் பணிவு தெரிந்தது. அந்தக் குடம் தளும்பவில்லை முற்றிய கதிர் போல தலை சாய்த்து  நின்றபோல! 

தன் உயர்வில் தன்னுடைய தாயின் பங்களிப்பை அவர் விவரித்த போது, முத்து தன் தாயை நினைத்துக்கொண்டான். காட்டிலும் கரையிலும் வேர்வை சிந்தியதால் அல்லவா இன்று அடுக்குப்படியாமல் வாழ்கிறோம் எனற நினைப்பு எழுந்தபோது முத்துவின் கண்களில் நீர் உடைந்தது வழிந்தது. ரிஷியின் தொடர்ந்த பேச்சு மேலும் மேலும் அவருடைய பணிவையே காட்டியது. முடிவாக தான் பெற்ற இந்த இசை விருதை தன் முன்னோடிகளுக்கு சமர்ப்பிப்பதாக சொல்லி நிறைவு செய்தார்.

முத்து ஆடித்தான் போனான்.

என்ன நினைத்து வந்தோம் எல்லாம் மாறி இருக்கிறதே? தன்னுடைய எண்ணம் எல்லாம் தவறாகப் போய்விட்டதே. தன்னுடைய உலகம் சின்னக் கூட்டுக்குள் அல்லவா இருக்கிறது, எண்ணமும் அல்லவா அது போல இருக்கிறது. ச்சே… யாரோ மாற்றி மாற்றி கன்னத்தில் அடித்ததுபோல இருந்தது. ஆனாலும் தான் எடுத்த முடிவுக்காக வெட்கப்பட்டான். ஆனாலும் மனசில்லை, எடுத்த முடிவை மாற்ற முடியாது. பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்த மனசு, கொண்டு வந்த துப்பாக்கி பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னது!

முத்துவின் தலைக்குள் வண்டு ஒன்று குடைந்து கொண்டிருந்தது போல இருந்தது.

இருவருமே மேதைகள். சும்மா நிழலில் வளர்ந்தவர்கள் அல்ல. திறமைசாலிகள் கடுமையான உழைப்பாளிகள். தாயின் சிறகுகளின் கீழே வளர்ந்தவர்கள். எல்லாம் தன்னைப் போலவே. ஆனாலும் என்ன என் மானசீக இசை ஆசான் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவதா? கூடாது.. ஒன்று ஒருவன் புகழோடு கடைசி வரை வாழ வேண்டும், இல்லை அது மங்குமுன்னே விலக வேண்டும். கிரிக்கெட்டும் சரி கலையுலகிலும் சரி புகழ் உச்சம் மறைந்து போனால் மிச்சம் ஏதும் இல்லை. என் ஆசானுக்கு அப்படியேதும் நடக்காது. அவர் வாழும் வரை புகழோடு வாழவேண்டும். அதை என்னைப் போன்ற வெறி பிடித்த ரசிகனால் மட்டுமே செய்யமுடியும்.
*

லயா அரக்கப் பரக்க அரங்கதுக்க்குள் நுழைந்தாள். விழா முடிந்து கூட்டம் கலையத் தொடங்கியது. அவள் முத்துவைத் தேடினாள். அய்யோ எங்கே தொலைந்தான்? குழப்பவாதி இங்கு வந்து எதையாவது செய்துதொலைக்கப் போகிறானோ? அவனை ஜூம் போட்டுத் தேடினாள்.

அதோ… அதோ… அவன் தான். முகம் முழுக்க வேர்வையோடு. யாரப் பற்றியும் கவலைப்படாமல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். அவன் முகம் பார்த்து, விபரீதம் உணர்ந்து லயா பதட்டமானாள்.

தேவனும் ரிஷியும் ஒன்றாக இறங்கி வந்தார்கள். ரசிகர்கள் இரண்டுபுறமும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் என்ன அரசியல்வாதிகளா, நடிகர்களா இல்லை கிரிக்கெட் வீரர்களா உச்சகட்ட பாதுகாப்பு போட்டு பந்தா காட்ட? பேருக்கு கொஞ்சம் காவலர்கள். எனவே இருவரையும் நெருங்க தடையில்லை. நெருங்கினான். இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்து வந்தார்கள். ஏறக்குறைய முத்து இருவர் அருகிலும் நெருங்கிவிட்டான். நெருக்கியவர்களைத் தள்ளிவிட்டு தேவனின் அருகில் சென்றான்.

லயா நெருங்கி வந்தாள். முத்துவின் கவனம் முழுதும் அந்த இருவர் மேல் இருந்தது. அவன் லயா நெருங்கியதை உணரவில்லை. வந்தவள் அவன் இடுப்பில் கொல்லக் காத்திருந்த அந்த ரிவால்வரை அவன் யோசிக்குமுன் எடுத்தாள். திரும்பிப் பார்த்த முத்து கண்கள் சிவந்தான். இப்பொது லயா என்ற காதலி அவன் கண்களுக்குத் தெரியவில்லை. பரம எதிரி தன் முன்னே நிற்பதைப் போல் உணர்ந்தான். அவனுக்குக் கத்தவும் முடியவில்லை, அந்தக் கூட்டத்தில் அவளோடு மல்லுகட்டவும் இயலவில்லை. ஆனாலும் விட மனசில்லை. அவள்மேல் பாய்ந்தான். தேவனும் ரிஷியும் இவர்களைக கடந்தார்கள்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. கூட்டம் நான்கு புறமும் சிதறி ஓடியது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தரையிலே ரத்த வெள்ளம். சுற்றியிருந்த காவல்துறையினர் ஓடி வந்தார்கள். ரத்தப் படுககையில் கலைந்த ஓவியமாய் லயா. அவள் கையில் துப்பாக்கி. முத்து திகைத்து நின்றிருந்தான். அவள் பார்வை அவனை அழைப்பதுபோல இருந்தது.

“என்ன இப்படி செய்துட்டே.. லயா…”

முதல் முறையாக அவளுக்காக அவன் கண்கள் கண்ணீர் காட்டியது.

“உன்ன காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல முத்து.. நான் வராட்டி நீ என்ன செய்திருப்பேன்னு எனக்குத் தெரியும்டா..”

அவளுடைய சுவாசம் சுருதி குறைய ஆரம்பித்தது. தாளம் கொஞ்சம் கொஞ்சமாக தடம் புரண்டது. இன்னும் கொஞ்சநேரம் தான் பாடும் சிடி போல இறுதிகட்டத்துக்கு நெருங்கினாள்.

“முத்து.. ப்ளீஸ்.. உலகம் ரொம்பப் பெரிசுடா. அதவிட மனசு. நீ வெளியே வா. இனி உனக்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் வராதுன்னு நம்புறேன். வந்தா என்ன நினச்சுக்கோ. அட்லீஸ்ட் நம்ம காதல நினச்சிக்கோ. சரி இப்ப காதல பத்தி நீ என்ன நினக்கிறே..?”

முத்து வார்த்தை வராமல் தவித்தான்.

‘காதல் காதலுக்காக உயிரையும் தரும்’ என்று சொல்ல நினைத்தான். 

லயா நிறுத்திக்கொண்டாள். அவள் கண்கள் நிலைகுத்தி நின்றன. முத்து முதன் முதலாக அவளுக்காக, அவள் மேல் கொண்ட காதலினால் கண்ணீர்விட்டான். அவனின் கண்ணீர்த் துளிகள் திறந்திருந்த அவள் கண்களில் விழுந்து கலந்தது.

*************



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சமீபத்தில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கதை யாருக்கும் தெரியாமல் நைசாக திருடப்பட்டுள்ளது..ஊரே படத்தை ...மேலும் வாசிக்க

சமீபத்தில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கதை யாருக்கும் தெரியாமல் நைசாக திருடப்பட்டுள்ளது..ஊரே படத்தை ஆஹா..ஓஹோ..என்று பாராட்டி வரும் இச்சூழலில் இந்த கதை திருடப்பட்ட கதை தான் என்றும் தனக்கு தெரியாமல் எப்படியோ கவ்தம் மேனன் இதை சுட்டு விட்டதாகவும் எனது நண்பன் சமீபத்தில் கூறினான்..வசனங்களை கூட விட்டு வைக்க வில்லையாம்..குறிப்பாக அந்த பார்க் பெஞ்சில் பேசப்படும் வசனம்..கெளதம் மேனன் இதற்க்கு நிச்சயம் விளக்கம் தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்..இதே போல் பல்வேறு நண்பர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்த வண்ணம் உள்ளனர்..இப்பதிவு மூலமாக கவ்தம் மேனன் அவர்களை எச்சரிக்கை செய்கின்றேன்..இந்த மனதை திருடுவது..அவனவன் வாழ்க்கையை  திருடுவது..இதெல்லாம் வேணாம்..உங்க போலிஸ் கதைகள்லாம் என்னாச்சு..அத எடுக்க வேண்டியது தானே..அது எப்படி நிறைய பேறு கதைய ஒரே நேரத்துல திருட முடியுது உங்களால..பாராட்டுக்கள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மெலிதாக வெயில் அடித்துக்கொண்டிருக்கும்போதே மழை பெய்யும் அழகான, ஒரு ரம்மியமான சூழலை பார்த்து, ரசித்து அனுபவித்திருக்கிறீர்களா? அப்படி ஒரு இதமான ...மேலும் வாசிக்க


மெலிதாக வெயில் அடித்துக்கொண்டிருக்கும்போதே மழை பெய்யும் அழகான, ஒரு ரம்மியமான சூழலை பார்த்து, ரசித்து அனுபவித்திருக்கிறீர்களா? அப்படி ஒரு இதமான மனநிலை வாய்த்தது கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்தபோது. ஒரு திரைப்படம் பார்வையாளனை மொத்தமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் மேஜிக் எப்போதாவது ஒருமுறை தான் நிகழும். அந்த வகையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழில் ஒரு ஃபீல் குட் ஃபிலிம் இது. படம் முழுதுமே கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் நம்மை வெகுவாக ஈர்க்கிறார்கள். எப்பிடியாவது கார்த்திக்கின் காதல் ஜெயிக்க வேண்டுமே என்ற தவிப்பைப் பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதிலேயே ஹிட் அடித்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழில் நாம் நிறைய பார்த்திருக்கிற ஒரு சாதாரணமான காதல் கதைதான். ஆனால் அதை காட்சிக்குக் காட்சி இழைத்து இழைத்து செதுக்கியிருப்பதில்தான் கவனத்திற்குரிய ஒரு படைப்பாகிறது இத்திரைப்படம்.

பொதுவாகவே கௌதமின் பேனா காதலை எழுதும்போது மட்டும் மிக உயிர்ப்போடு, உணர்வோடு இருக்கிறது என்று நினைக்கிறேன். 'அவ சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும் நான் கேரளா போவேன்னு', 'உன் கண்ணு வழியா வந்து என்னைப் பார்க்கணும்போல இருக்கு', 'எல்லாத்தையும் தாண்டி ஜஸ்ட் ரெண்டு பேரா இருப்போம்' போன்ற வசனங்களில் வழிந்தோடும் காதல் அவ்வளவு அழகு. கேரளாவில் த்ரிஷா தன் திருமணத்தை நிறுத்திய அந்த இரவில் சிம்புவும் த்ரிஷாவும் தனிமையில் பேசிக்கொள்ளும் காட்சியில்தான் எத்தனை காதல். இந்தக் காட்சியில் த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவுமே ஒரு கவிதை.

த்ரிஷா, சிம்பு இருவருக்குமே அவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படம் இது. படத்தில் மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய அம்சங்கள் சிம்பு, த்ரிஷாவின் நடிப்பு, கௌதமின் இயக்கம் மற்றும் படத்தின் வெற்றிக்கு காரணமான ஆஸ்கார் நாயகன் நமது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொருவிதத்தில் ஈர்க்கின்றன. பின்னனி இசையிலும் அசத்தியிருக்கிறார் நமது இசைப்புயல், சிம்புவும் த்ரிஷாவும் ஓடே கஃபேயில் சந்திக்கும் காட்சியில் த்ரிஷா தனது திருமணம் பற்றி சிம்புவிடம் சொல்லிவிட்டு திரும்பிச் செல்லும்போது ஒலிக்கும் பின்னனி இசை குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது.

சிம்பு இதில் யங் சூப்பர் ஸ்டார் என்றாலும் மிகையில்லாத இயல்பான நடிப்பில் வெகுவாக ஈர்க்கிறார். இறுதிக்காட்சியில் அமெரிக்காவின் சென்டர் பார்க்கில் த்ரிஷாவோடு பேசும்போது, நம்பவே முடியவில்லை சிம்புவா இது ரியலி கிரேட் பெர்ஃபார்மன்ஸ்.

இதற்கு முன்பு ஆய்த எழுத்து படம் தவிர வேறெதிலும் த்ரிஷாவின் நடிப்பு ரசிக்கும்படியில்லை என்பது எனது கருத்து. ஆனால் இதில் த்ரிஷா படத்தின் சென்டர் ஆஃப் தி அட்ராக்ஷனாக வருகிறார். இது போன்ற காதல் கதைகளுக்கு மிக முக்கியமான தேவையே ரசிக்கும்படியான நாயகன் நாயகி தான். மிகச் சரியாக இதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் இயக்குநர். த்ரிஷாவை இனி இன்னும் அதிகமான படங்களில் பார்க்கலாம். முன்னனி நாயகர்களின் படங்களில் எல்லாம் இனி த்ரிஷாவே இருப்பார் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த ஒரு படத்தின் மூலம் ரசிகர்களை முழுவதுமாகவே கவர்ந்துவிட்டார் த்ரிஷா. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு பாத்திரம் சிம்புவின் ஒளிப்பதிவாள நண்பரான கணேஷ். மனிதர் வாயைத் திறந்தாலே அதிர்கிறது தியேட்டர். இதற்கு முன்பாக கௌதமின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லன்களில் ஒருவராக வந்திருப்பார். இதில் யதார்த்தமான மனிதராக அசத்தியிருக்கிறார்.

கௌதம் படங்களில் வழக்கமாக இருக்கக்கூடிய கிளிஷேக்கள் இதிலும் உண்டு. நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் படம் த்ரிஷாவின் அண்ணன் கௌதமின் குரலில் வில்லத்தனம் செய்யும் காட்சியில் தொய்வடைந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கௌதமுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை அவர் படங்களில் வருகின்ற வில்லன்களுக்கெல்லாம் அவர்தான் குரல் கொடுக்கிறார். அதிலும் 'பாடு, ங்கொம்மா, ங்கோத்தா, என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுப் போய்ட்டே இரு' போன்ற சில குறிப்பிட்ட வசனங்களைப் பேசுவதற்கு மிகவும் விருப்பப்படுகிறார். தொடர்ந்து இந்த வசனங்கள் எல்லாம் அவரது படத்தில் அவரது குரலில் வந்துகொண்டே இருக்கின்றன. காதலைக் கசிந்துருகி எழுதும் கௌதமின் பேனா இதுபோன்ற வசனங்களைத் தொடர்ந்து எழுதுவதையும், அதை திரும்பத் திரும்ப கௌதமின் குரலில் ரசிகர்கள் கேட்க நேர்வதையும் கௌதம் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவேண்டும். போலவே கௌதமின் காதல் நாயகர்கள் எல்லோருமே மெக்கானிகல் இஞ்சினீயர்களாகவே இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. இது ஒரு பெரிய குறை என்று சொல்ல வரவில்லை, ஆனால் இப்படி ஒரே விஷயம் தொடர்ந்து படைப்புகளில் இடம்பெற்றுக்கொண்டே இருப்பது நல்ல படைப்பாளிக்கு அழகல்ல. ஆகவே ஒரு சிறு வேண்டுகோளாகவே கேட்கிறேன், இந்த கிளிஷேக்களை மாற்றிக்கொள்ளுங்கள் கௌதம் சார்.

ஆஸ்கார் விருதுக்குப் பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. தாமரையின் வரிகளில் பாடல்கள் கேட்கக் கேட்க சுகம். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கேரளாவின் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது. படத்தின் ஷார்ப்பான, தொய்வில்லாமல் தொடரும் காட்சிகளுக்காக எடிட்டருக்கு ஒரு பூங்கொத்து.

எந்திரமயமான வாழ்க்கையில் சில விஷயங்கள் மட்டுமே நம்மை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன, அவற்றில் மிக முக்கியமானது காதல் எனும் உணர்வு. காதலை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுவதில்லை. தமிழ் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமான காதல் கதைகளை கொண்டாடுபவர்கள். கௌதமின் இந்த அற்புதமான உணர்வையும் மதித்து ரசித்து கொண்டாடத்தான் போகிறார்கள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சினிமா மொழி --------- 'மேயாத மான்- புள்ளி மேவாத மான்' 'பொறுத்தது போதும் பொங்கி ...மேலும் வாசிக்க
சினிமா மொழி
-----------------------------
'மேயாத மான்- புள்ளி
மேவாத மான்'
'பொறுத்தது போதும்
பொங்கி எழு மனோகரா'
'ஆத்தா ஆடு வளத்தா
கோழி வளத்தா'
'யாரு, சூர்யா
ஏன், தேவா'
'ம்ம் , ம்ம்
ம்ம், ம்ம் '
---------------------------------நாகேந்திர பாரதி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"ஆலிஸின் அற்புத உலகம்" திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. லூயி கரோலின் அந்த புத்தகத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்து உள்ளன. இருப்பினும் ...மேலும் வாசிக்க
"ஆலிஸின் அற்புத உலகம்" திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. லூயி கரோலின் அந்த புத்தகத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்து உள்ளன. இருப்பினும் 107 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படம், தற்சமயம் பிரித்தானிய திரைப்பட கழகத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப் பட்டு உள்ளது.

முதன் முதலாக விஷுவல் எபக்டுகள் இந்த படத்தில் கையாளப் பட்டு உள்ளன. ஆலிஸ் சிறியவளாக இருந்து பெரியவள் ஆவது போன்றவை உண்மையிலயே பிரமிப்பு ஊட்டுகின்றன. இப்போது இவற்றை செய்வது மிகவும் சுலபம் தான். ஆனால் மிகவும் குறுகிய நுட்பங்களை கொண்டே திரையில் அப்போதே ஆச்சர்யத்தை நிகழ்த்தி இருக்கின்றனர்.

அந்த படம் உங்கள் பார்வைக்கு :



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த பதிவில் எந்த நேரத்தில் இப்படி சொன்னேனோ தெரியவில்லை.அது தான் நடந்திருக்கிறது. லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ...மேலும் வாசிக்க
இந்த பதிவில் எந்த நேரத்தில் இப்படி சொன்னேனோ தெரியவில்லை.அது தான் நடந்திருக்கிறது.

லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..)


சாதாரண அரசியல் கதை.வாரிசு உரிமையை நிலை நாட்டும் கதை.ரானா - வெங்கடேஷ்,நாக சைதன்யாவை அடுத்து களமிறங்கிருக்கும் வாரிசு.முதல் பந்தில் சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஓடியே மூன்று ரன் எடுத்துள்ளார்.காரணம் அவரை தவிர எல்லோரும் கொஞ்சம் திராபைகளாக தெரிந்தார்கள்.அழகான விக்கெட் கீப்பராக இரண்டாம் பாதியில் வரும் முதல் கதாநாயகி.ரன்னராக முதல் பாதியில் கோலோச்சும் இரண்டாம் நாயகி.சுமன்,கோட்டா சீனிவாசராவ்,சுஹாசினி என்று சீனியர்கள் இருந்தாலும் அடித்து ஆட நாயகனுக்கு மட்டும் தான் வாய்ப்பு.தோனி மாதிரி சச்சினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் வெளுத்து கட்டுகிறார்.

எப்படியும் நான் வெளுக்கத் தான் போகிறேன்.சின்ன வரியில் முடித்து விடுகிறேன்.சேகர் கம்மூலா நிறைய ஷங்கர் படம் பார்த்திருப்பார் போல.முதல்வன்,சிவாஜி என்று கலந்து கட்டி அடித்து இருந்தாலும் வலுவான் காட்சிகள் இல்லாத காரணத்தால் படம் தள்ளாடுகிறது.

படத்தின் ப்ளஸ்கள்

1.நாயகியை வைத்தே அரசியலில் காய் நகர்த்துவது.பெண்ணால் தான் சிம்மாசனங்கள் ஆட்டம் காண்பது என்பதை அப்படியே திருப்பி இருக்கிறார்கள்.

2.நீலக் கலர் சட்டை கொடுத்து சண்டைக்கும் பாட்டுக்கும் தனியே நேரம் எல்லாம் ஒதுக்கவில்லை.

3.யதார்த்தமான வசனங்கள்.(அவ கையில் நிறைய பூ) இதில் லூ சேர்த்து கிண்டல் அடிக்க முடியவில்லை.

4.சிவாஜியில் சேர்த்த கருப்பு பணத்தை ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து பிடுங்கி படம் எடுத்தது.

5.சமகால அரசியல் நிகழ்வுகளை கொண்ட கதை.இன்னும் விளக்கமாக முன்பே காட்டியிருந்தால் ஜெகன் மோகன் ரொட்டி ஆட்சியைப் பிடித்து இருக்கலாம்.

6.நாயகி முத்தம் கேட்டும் கொடுக்காமல் இருந்த நாயகன் .

இனி மைனஸ்

1.படத்தின் லேசான திரைக்கதை,பார்த்த படங்களை நினைவு படுத்துவதால்.

2.இசை - அது போன படத்தையே கண் முன் காட்டியதால் (ஹேப்பி டேஸ்)

பாக்கலாம்.பாக்காமலும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் யாரும் ரீமேக் செய்ய மாட்டார்கள்.நான் இன்னொரு காதல் படத்தை சேகர் கம்மூலாவிடம் கேட்கிறேன் தருவார் என்ற நம்பிக்கையில்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஏற்கெனவே ஆஸ்கார் பரிசில் பல உள்ளக சித்து வேலைகள் ...மேலும் வாசிக்க

ஏற்கெனவே ஆஸ்கார் பரிசில் பல உள்ளக சித்து வேலைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்துள்ளது. இந்தப் பரிசை வழங்கும் குழுவும், அதில் உள்ள குறிக்கப்பட்ட அங்கத்தவர் தொகையும், அதன் நியமனமும் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுமா என்பது நெடிய கேள்வியாகவே இருந்து வந்தது. இப்போது ஜேம்ஸ் கமரோன் இயக்கிய அவற்றார் திரைப்படம் ஆஸ்காரினால் ஏறத்தாழ அவமதிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது பரிசு பெற்ற காட் தி லாக்கர் திரைப்படம் ஈராக் போரின் ஆக்கிரமிப்பை வரவேற்கிறது. ஆனால் அவற்றார் திரைப்படம் மற்றய நாடுகளையோ தேசங்களையோ ஆக்கிரமிப்பவரை எதிர்க்கிறது. அவற்றார் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் பரிசு வழங்கினால் அது உலகின் அத்தனை ஆக்கிரமிப்பு நாடுகளுக்குமே அவமானமாக அமையும். இந்த வகையில் அவற்றார் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஆனால் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூலையும் முறியடித்து அவற்றார் படைத்திருக்கும் சாதனையை பரிசு பெற்ற எந்தப்படமுமமே நெருங்க முடியாத நிலை உள்ளது. ஆஸ்கார் குழு ஜேம்ஸ் கமரோன் என்ற கலைஞனை அவமதித்திருக்கலாம் ஆனால் உண்மையில் அவமதிக்கப்படுவது ஆஸ்காரே என்ற உண்மை ஊடகங்களில் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளது


. மேலும் பத்மசிறீ விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்பட்டபோது அது 7 இலட்சம் ரூபா செலவழித்து எடுக்கும் விருது என்று கங்கை அமரன் திட்டியதும், பின்னர் இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது சிபரிசு இல்லாத பரிசு என்று பாராட்டியதும் கவனிக்கத்தக்கது. இவைகள் விருதுகள் குறித்த சிந்தனையை தூண்டுகின்றன.







show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சா யங்காலம் ஆறு மணிக்கி படம் பாக்குறதா ஐடியா..,அப்போ நம்ம அண்ணங்கிட்ட(பேரு வேணாமே..) இருந்து போன் வந்திச்சி ...மேலும் வாசிக்க
சாயங்காலம் ஆறு மணிக்கி படம் பாக்குறதா ஐடியா..,அப்போ நம்ம அண்ணங்கிட்ட(பேரு வேணாமே..) இருந்து போன் வந்திச்சி

தம்பி எங்க இருக்க..?

அண்ணே நா வீட்ல இருக்க...

ஆபீஸ் வரியா

இல்லன்ன தம்பிக்கு இந்த ஊரு படம் பாக்கப்போறேன்

யே.. இது  வரைக்கும் நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்த இப்போ எதுக்கு திடீர்னு இப்படி ஒரு முடிவுன்னாரு...(அப்பவே நா கொஞ்சம் யோசிச்சிருக்களாம்...!)

ஆறேகாலுக்கு படத்த ஆம்பிச்சாங்க..,

படக்கம்பனியோட டைட்டில்ல  இருந்து சின்னதளபதி இன்னு பேரு வரைக்கும் பிண்ணனியில ஒரே டுஸ்...டுஸ்...சௌண்டுதான்.(பிரமாதமான ஆர்.ஆர்.)

ஒரு காரு வேகமா வரும் அதுலேர்ந்து ஒருத்தர் வேகமா இறங்குவாரு குளோசப்புல அவரோச கால காட்டுவாங்க,அது நீங்க பரத்ன்னு நெனச்சா அது தப்பு,வாய் புல்லா பல்ல காட்டிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு நிப்பாரு விவேக் இது தான் படத்தோட ஒப்பனிங் சீனு (ஆகா..,சூப்பர் ஒப்பனிங்ல...)

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் மேல பகை,காதல்,கோபம் இப்படி எல்லாம் இருக்கும்,அந்த குணத்தை யாரு யாரு மேல காட்டுறாங்கன்னு நாம பாக்கப் போறோம்னு எஸ்.ஜெ.சூர்யா கணக்கா முதல்லயே படம் எப்படி நகரப்போவுதுன்னு பிண்ணனியில டைரக்டர் வாய்ஸ் குடுத்து நம்மள உசுப்பேத்தி உடுராரு(பலே...)

என்னது படத்தோட கதையா..?அடப்போங்கப்பா எதாவது புதுசா இருந்தா ஒரு நாலு வரியாவது எழுத தோணும்,இது ஏற்கனவே வந்ததுதான அப்புறம் என்னத்துக்கு அதையெல்லாம் போய் கேட்டுகிட்டு?


பரத்தோட பன்ச் டயலாக்குகள்,ஆக்ஷன் சீன்கள் இதையெல்லாம் பாக்க நமக்கு கொடுத்து வெச்சிருக்கணும்,அதுலேயும் ஒரு ஷீலா வயலன் வீட்டு பிரமாதமான கதவ காலால எட்டி தொரப்பாறு பாருங்க அடடா என்ன பிரமாதமான சீன் அது.ஏன் பரத்துக்கு கை வெளங்காதான்னு கேக்குறீங்களா அட என்ன பாஸ் "மாஸ்ஹீரோல்ல" அதான்.

எம்.எஸ்.பாஸ்கர் கூட ஒரு நாலு பேற வெச்சிகிட்டு தெலுங்குல பேசி காமடிங்கிற பேர்ல நம்மள கொலையா கொல்றாரு...போதாதைக்கு விவேக் வேற டபுள்மீனிங் வசனங்கள காது குளிர கேட்டுட்டு வரலாம்

'சனாகான்' அட,என்னத்த சொல்றது பாவம் பொண்ணு வருது சும்மா போவுது.அதே மாதிரி 'மாடல்ஷா'ன்னு ஒரு புதுப்பொண்ணு,அது எதுக்குத்தான் வருதுன்னு அதுக்கே தெரியாது போல.

ரொம்ப நாள் கழிச்சி ஏகப்பட்ட 'பிளாஷ்பேக்' உள்ள படம் இதுதான்.

'செகண்ட்ஆப்'ல பிரபு வர்றாரு,காட்டுக்குள இருக்குற புலி ஊருக்குள வந்து உருமுற பாதிரி அவரு வர்ற சீன்கள் எல்லாம் ஒரே உறுமல் தான்.ஆனான் பயம் வராது சிரிப்பு தான் வரும்.

படத்தோட கிளைமாக்ஸ் வழக்கம் போல ஒரு பெரிய குடோன்ல நடக்குது.வில்லனா வர்ற ரஞ்சித் ஒரு காமெடிபீஸ் மாதிரி.

இந்த படத்துல சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் பாட்டு தான். ஏன்னா பாட்டு போட ஆரம்பிச்ச உடனே எல்லாரும் வெளியில போக ஆரம்பிச்சிடுறாங்க..(அந்தளவுக்கு)

இந்தப் படத்தோட டைரக்டர் பத்ரிக்கும்,பரத்துக்கும் நான் கேக்குறது ஒரே ஒரு கேள்வி தான்?

"ஆமா..,உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லியா? எப்படி இப்படி ஒரு படத்த உங்களால குடுக்க முடியுது.இப்பந்தான் 'தமிழ்ப்படம்'னு ஒரு படம் வந்திச்சி அத பாத்த பொறவும் நீங்க திருந்த மாட்டீங்களா..?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்படத்தில் ஒரு பாடல் முழுவதும் பல படங்களில் வந்த புரியாத வார்த்தைகளை கொண்ட பாடல்வரிகளை கொண்டு தொகுத்த ஒரு பாடல் வரும்.”ஒமகா சீயா ” எனத் ...மேலும் வாசிக்க

தமிழ்படத்தில் ஒரு பாடல் முழுவதும் பல படங்களில் வந்த புரியாத வார்த்தைகளை கொண்ட பாடல்வரிகளை கொண்டு தொகுத்த ஒரு பாடல் வரும்.”ஒமகா சீயா ” எனத் தொடங்கும் பாடல் அது கூட நன்றாக இருக்கும். தமிழக அரசு தமிழ்நாட்டில் வெளியான தமிழ்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்படுவதை மென்மையாக தடுக்கும் விதமாக தமிழில் பெயர் வைக்கும் தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கும் முடிவெடுத்து அவ்வாறு வழங்கி வருகிறது . இதனால் உள்ளாட்சிகளுக்கு ஏற்படும் நிதிஇழப்புக்கு பெரும் தொகை ஈடுசெய் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. வரிவிலக்கினால் தற்போது வரும்படங்கள் தமிழில் பெயர் வைக்கின்றனர். ஆனால் தங்களது படங்களின் பாடல்களில் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகள் உடன் கூடிய தொகையறாக்கள் வருகின்றன. சமீபத்தில வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக .இனிமையாக உள்ளது. ஆனால. ஓசானா பாடலில் இடையில் வரும் சிலவரிகள் ஆங்கில வார்த்தைகளா இல்லை வேறு மொழி வார்த்தைகளா எனத் தெரியாத அளவு உள்ளன. இந்த பாடல் ரொம்ப வரவேற்பு பெற்று உள்ளது. எனவே இதே மாதிரி வரிகள் உடன் கூடிய பாடல்கள் .இனி வர ஆரம்பிக்கும் எனவே தமிழில் பெயர்வைத்தால் மட்டும் வரிவிலக்கு என்பதுடன் படத்தில் வரும் பாடல்கள் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என சட்ட திருத்தம் செய்தால் அரசுக்கும் லாபம் தமிழுக்கும் பெருமை தமிழ்பாடலுக்கும் சிறப்பு, வசனம் தமிழில் இருக்க வேண்டுமென சொல்லவியலாது ஏனெனில் தமிழன் தமிழில் பேசுவதில்லை. என்று தணியும் இந்தவேற்று மொழி மோகம் யாருக்கும் தெரியாது



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இம்முறை அவதார் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் Hurt Locker பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளது. முழுமையான விருதுகளின் பட்டியலை இங்கே ...மேலும் வாசிக்க

இம்முறை அவதார் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் Hurt Locker பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளது.

முழுமையான விருதுகளின் பட்டியலை இங்கே காண்க.

★ BEST PICTURE

The Hurt Locker (2008): Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier, Greg Shapiro

★ BEST ACTOR

Jeff Bridges in “Crazy Heart”

★ BEST ACTRESS

Sandra Bullock in “The Blind Side”

★ BEST SUPPORTING ACTOR

Christoph Waltz in “Inglourious Basterds”

★ BEST SUPPORTING ACTRESS

ஒஸ்கார் வென்ற முதற் கறுப்பு பெண்மணி

Mo’Nique in “Precious: Based on the Novel ‘Push’ by Sapphire”

★ BEST ACHIVEMENT IN DIRECTING

இயக்குனருக்கான பிரிவில் ஒஸ்கார் வெண்ற முதற் பெண்மணி

Kathryn Bigelow for The Hurt Locker (2008)

★ BEST ORIGINAL SCREENPLAY

வெற்றிக் களிப்பில் Hurt Locker குழுவினர்

“The Hurt Locker” Written by Mark Boal

★ BEST ADAPTED SCREENPLAY

The Hurt Locker (2008): Mark Boal

★ BEST WRITING, SCREENPLAY BASED ON MATERIAL PREVIOUSLY PRODUCED OR PUBLISHED

Precious: Based on the Novel Push by Sapphire (2009): Geoffrey Fletcher

★ BEST CINEMATOGRAPHY

“Avatar” Mauro Fiore

★ BEST EDITING

“The Hurt Locker” Bob Murawski and Chris Innis

★ BEST ART DIRECTION

“Avatar” Art Direction: Rick Carter and Robert Stromberg; Set Decoration: Kim Sinclair

★ BEST COSTUME DESIGN

“The Young Victoria” Sandy Powell

★ BEST MAKEUP

“Star Trek” Barney Burman, Mindy Hall and Joel Harlow

★ BEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SCORE

Up (2009): Michael Giacchino

★ BBEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SONG

Crazy Heart (2009): T-Bone Burnett, Ryan Bingham(“The Weary Kind”)

★ BEST SOUND

“The Hurt Locker” Paul N.J. Ottosson

★ BEST SOUND EFFECTS EDITING

“The Hurt Locker” Paul N.J. Ottosson and Ray Beckett

★ BEST VISUAL EFFECTS

“Avatar” Joe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones

★ BEST ANIMATED FEATURE

“Up” Pete Docter

★ BEST FOREIGN FILM

“El Secreto de Sus Ojos” Argentina

★ BEST DOCUMENTARY

“The Cove” Nominees to be determined

★ BEST DOCUMENTARY, SHORT SUBJECTS

Music by Prudence (2010): Roger Ross Williams, Elinor Burkett

★ BEST SHORT FILM (ANIMATED)

Logorama” Nicolas Schmerkin

★ BEST SHORT FILM (LIVE ACTION)

“The New Tenants” Joachim Back and Tivi Magnusson



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


* உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி ...மேலும் வாசிக்க
*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.

*1வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வானது The Blossom Room of The Hollywood Roosevelt Hotel - Los Angels இல் 1929ம் ஆண்டு நடைபெற்றது.

*1934ம் ஆண்டு நடைபெற்ற 6வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த நடிகருக்கான 1வது விருதினை கத்தரின் ஹெப்வேர்ன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் நிகழ்வின் போது வழங்கப்படும் விருதின் நிறையானது 7 பவுண்ட்ஸ்கள் [3.1752kg] ஆகும்.



*அதிகளவு ஒஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களாக - The Lord of The Rings : The Return of The King ,Titanic, Ben Hur விளங்குகின்றது. இவை மொத்தமாக 11 விருதுகளை அள்ளிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

*கிகி, தி லொஸ்ட் எம்பர் ஆகிய திரைப்படங்கள் 9 ஒஸ்கார் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*முதன்முதலாக முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றவராக வால்ட் டிஸ்னி விளங்குகின்றார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது வால்ட் டிஸ்னி முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*1931ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது சம நிலையில் முடிந்த மிகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றவர்கள் வாலஸ் பெர்ரி மற்றும் பிரெட்ரிக் மார்க் ஆகியோராவர்.

*தொடர்ந்து இரு வருடங்கள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக, 1993ல் பிலடெல்பியா & 1994ல் பாரஸ்ட் காம்ப் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாம் ஹேங்ஸ் விளங்குகின்றார்.

*மூன்று முறை ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக ஜாக்கிஸ் ஒய்ஸ் கோல்டியூ விளங்குகின்றார். இவர் 1956,1959, 1964ம் ஆண்டுகளில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*குறைந்த வயதில் ஒஸ்கார் விருது பெற்றவராக நடிகை ஹெர்லி டெம்பிள் விளங்குகின்றார். இவர் 6 வயதில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் விருது பெற்ற முதலாவது வர்ணத்திரைப்படம்- Gone With The Wind

*ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக தெய்வமகன் விளங்குகின்றது. [1969ல் - சிவாஜி நடித்தது]

*ஒஸ்கார் விருது பெற்ற மனிதரல்லாத முதல் கதாபாத்திரம் [கார்ட்டூன்] மிக்கி மவுஸ் ஆகும்.



*இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக்கிலான ஒஸ்கார் சிலைகளே வழங்கப்பட்டன. காரணம் உலக மகாயுத்தத்தின் போது உலோகங்களுக்கு நிலவிய அருமைத் தன்மையே காரணமாகும்.

*ஒஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனராக Kathryn Bingelow விளங்குகின்றார். 2010ம் ஆண்டு நடைபெற்ற 82வது ஒஸ்கார் நிகழ்வின் போது தான் இயக்கிய The Hurt Locker திரைப்படத்துக்காக விருது பெற்றார்.



*ஒஸ்கார் விருது பெற்ற முதல் தமிழராகவும் , முதல் இந்திய இசையமைப்பாளராகவும் .ஆர்.ரஹ்மான் விளங்குகின்றார்.




***

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பதிவர்களுக்காக, எழுத்தாளர் பைத்தியக்காரன் (சிவராமன்) ஏற்பாட்டில், 'கிழக்குப் பதிப்பகம்' மாடியில் திரையிடப்பட்ட 'மானக்கேடு (Disgrace)' படம் பார்க்க வாய்த்தது. நாயகனான 52 வயதுக்கார டேவிட் ...மேலும் வாசிக்க
பதிவர்களுக்காக, எழுத்தாளர் பைத்தியக்காரன் (சிவராமன்) ஏற்பாட்டில், 'கிழக்குப் பதிப்பகம்' மாடியில் திரையிடப்பட்ட 'மானக்கேடு (Disgrace)' படம் பார்க்க வாய்த்தது.

நாயகனான 52 வயதுக்கார டேவிட் ஒரு கல்லூரிப் பேராசிரியர்; வெள்ளைக்காரர். வோர்ட்ஸ் வொர்த், பைரன் முதலிய ரொமான்டிக் கவிஞர்களை வியந்தோதிக் கற்பிப்பவர். கலைஞரும் கூட: இசையாப்பு எழுத அறிந்தவர். மூளையைச் சார்ந்து அல்லாமல் இதயத்தைச் சார்ந்து செயல்படுபவன் லூசிஃபர் (சைத்தான்); அவன் இரக்கப்பட வேண்டியவன் என்று ஓதுபவர்.

இடைத்தரகு வழி, கருப்பினக் குடும்பப் பெண்களை விலைக்கு வாங்கித் தன் இச்சை தீர்த்துவரும் அப் பேராசிரியர், ஒரு கட்டத்தில், தன் மாணவியருள் நாடக ஈடுபாடுள்ள ஒரு கருப்பினப் பெண்ணை வேட்டையாடி விடுகிறார் (மழைக்குத் தவங்கி நிற்கிற அவளைப் புறகிருந்து அவர் கவனம்கொள்கையில் நாய்க்குரைப்பு ஒலி). கதை நடப்பது தென்-ஆப்பிரிக்காவில். அவ் வேட்டை வினையாகி அவரைக் குற்றப்படுத்த, வருத்தம் தெரிவிக்கவும் மறுத்து, தன் வேலையைக் கை விடுகிறார்.

நாட்டுப்புறத்தில் பூ வேளாண்மை/ விற்பனை செய்து வரும் தன் மகள் லூசியைச் சார்கிறார். அவளோ தன் ஓரினக் காதலி பிரிந்து போக, நாய்களைப் பேணி வருகிறாள். அண்டை நிலத்தான் பட்ருஸ் (பீட்டர்) என்பான் ஒரு கருப்பன் அவளுக்கு அவ்வப்போது கூடமாட உதவுபவனாக இருந்து வருகிறான்.

பட்ருஸ் இல்லாத ஒரு நாள் அங்கு வரும் கருப்பின விடலைகள் மூவர் லூசியை வன்கலவிகொண்டு, டேவிட்டை நெருப்பிட்டு, பொருட்களைக் கொள்ளையடித்து, நாய்களையும் கொன்றுபோட்டுப் போகிறார்கள். நெருப்பிடப்பட்டுக் கழிவறைக்குள் அடைக்கப்பட்ட டேவிட், கழிவுக்கலன் நீரை வாரித் தன்மேல் நெருப்பை அணைத்துப் பிழைக்கிறார்.

மறுநாள் வந்து சேரும் பட்ருஸ் தன்பங்கு நிலத்தின் இடிபாடு வீட்டைச் செப்பனிட்டு விருந்தும் வைக்கிறான். விருந்துக்குப் போன லூசி தன்னைக் கற்பழித்த மூவரில் ஒருவனை அங்கே காண்கிறாள். அவனோ பட்ருஸ் உறவினன். அவன் மீது நடவடிக்கை எடுக்க டேவிட் துடிக்கிறார். ஆனால், அண்டை அயலாரோடு ஒத்துப்போக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், லூசி மறுக்கிறாள். "இங்கே கிடந்து ஏன் பட வேண்டும்? ஹாலந்தில் இருக்கும் உன் தாயிடம் போ" என்று டேவிட் தன் மகளை வற்புறுத்துகிறார். "திரும்பிப் போகத் தனக்கு விருப்பம் இல்லை," என்கிறாள் அவள்.

டேவிட் தன்னால் வேட்டையாடப்பட்ட மாணவியின் வீடுதேடிப் போய், அவளைப் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்கிறார். பிறகும் சிவப்புவிளக்குத் தெரு ஊரநேர்ந்து திளைக்கிறார்.

லூசி தான் கருவுற்றிருப்பதாக அறிவிக்கிறாள். அதைக் களைக்கச் சொல்கிறார் டேவிட். தான் ஒரு தாய் ஆதலால் அது முடியாது என்கிறாள் லூசி. அவளும், அவள் காணாமல் அவரும் அவமானக் கண்ணீர் பெருக்குகிறார்கள்.

விலங்குமருத்துவச்சியாம் தன் இன நடுவயதுக்காரி ஒருத்தியை உறவுகொள்ளத் தரைபடிந்து பிறகு ஒதுங்குகிறார் டேவிட். அவளிடம் விட்டுச்சென்று உரிமைகோரி வரப்படா நாய்களை எரியூட்டவும் உதவிவருகிறார். (விரை புளுத்தும் ஓர் ஆட்டுக் கடாவை அவளிடம் விட்டுச்செல்ல ஒவ்வாத ஓர் ஆள் வந்துபோகும் காட்சி நயமானது).

சுடுகாட்டுக்கு (எரி-உலைக்கு) போகும் ஒருநாள், சாலையின் உயர்மட்டத்தில் இருந்து தன் மகள் வீட்டுத் தோற்றம் காணும் டேவிட், சரக்கு (நாய்) வண்டியை அப்படியே விட்டுவிட்டு, நடையாக நடந்து மகள் வீடு சேர்கிறார்.

"வந்ததைக் கவனிக்கலையே, வண்டி எங்கே?" என்கிறாள் பூச்செடிகளுக்கு நீர் வார்க்கும் நிறைசூல் மகள்.

"நடந்து வந்தேன்," என்கிறார் அவர்.

"தேநீர் விருப்பமா, அப்பா?"

"ம்ம்."

---------

மேலே சொல்லப்பட்ட இதே disgrace முடிச்சுக் கொண்ட முன்னை ஒரு படம் உண்டு: 'The Virgin Spring'. இங்மார் பெர்க்மன் எழுதி இயக்கியது. தன் கன்னி மகளைக் கோவிலுக்கு அனுப்பிய வழியில் அவளைக் கற்பழித்துக் கொன்ற மூன்று ஆட்டிடையர்கள் தன் வீட்டிலேயே அடைக்கலம் நாடி வர, தந்தை அவர்களைக் கொன்று போடும் கதை. (சிறிது மாற்றப்பட்டு, 'மேஜர் சந்திரகாந்த்' என்று தமிழில் மீளுருவம் கண்டது).

பெர்க்மன் படத்தில் 'ஆரியன் ஆரியன்தான்; யூதன் யூதன்தான்' என்னும் இனவாதக் கோணல் உண்டு. ஆனால் ஸ்டீவ் ஜாக்கோப்பின் 'Disgrace' படத்தில், 'இன உயர்வு நவிற்சி ஒரு ரொமான்டிக் வாதம்; கெடுத்துக் குட்டிச்சுவராக்குமே அன்றி அடுத்து வாழ விடாது' என்னும் நடைமுறைத் திருத்தம் உண்டு.

இது ஒரு பார்வை. படமோ ஆனால் 'நாய்க்குணம்' என்று இங்கு நான் எடுத்துக்காட்டியது போன்ற பல குறியீடுகளால் நிறைந்தது. பல பார்வைகளுக்கும் இடம் தருவது. என்றால், ஒருமுறை போதாது பலமுறை பார்க்கவேண்டும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை. ...மேலும் வாசிக்க

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை.

சரிதாவின் தங்கை இதில் ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் ரஜினியின் குடும்ப நண்பராக வந்து அழகா நடித்து இருப்பார்.

எனக்குப் பொதுவாக தேங்காய் சீனிவாசனுடைய காமெடி பிடிக்காது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினி-தேங்காய் மற்றும் ரஜினி- தேங்காய்-செளகாரை வைத்து பாலச்சந்தர் வயிறுவலிக்க சிரிக்க வைத்துள்ளார்.

எனக்கு இந்தப் படத்தில் சில பிடித்த விசயங்கள்

* ரஜினி - மாதவி ரொமாண்ஸ் உண்மையிலேயே படு சூப்பர்.

* மீசையில்லாத ரஜினியும், மாதவியும் பாடும் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு பாடல் ரொம்ப ரொம்ப ரொமாண்டிக்கா நல்லா இருக்கும். மாதவி படு செக்ஸி

* ரஜினி- பூர்ணம் விஸ்வநாதன் பேசும்போது சொல்லும் சில நிதர்சனங்கள்.

ரஜினி: என்னை ஏன் பிடிக்காது? என்னை எல்லாருக்கும் பிடிக்கும்!

பூர்ணம்: நீ எதுல குப்பை கூட்டுறயோ இல்லையோ நிச்சயமா நீ ஒரு நல்ல நடிகனா குப்பை கூட்டுவடா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தை on-line (திருட்டு வீடியோவானு என்னனு தெரியலை) ல பார்க்கனும்னா இங்கே க்ளிக் செய்யவும்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பள்ளம் படம் பார்த்து விட்டீர்களா? இப்போதும் அவள் சிலசமயங்களில் எனக்குள் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறாள். மாட்டுத்தாவணி போன்ற பேருந்து நிறுத்தங்களில், நெரிசல் நிறைந்த சாலைகளில், திருவிழாக்கூட்டங்களில் அவள் மாதிரி ...மேலும் வாசிக்க
பள்ளம் படம் பார்த்து விட்டீர்களா? இப்போதும் அவள் சிலசமயங்களில் எனக்குள் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறாள். மாட்டுத்தாவணி போன்ற பேருந்து நிறுத்தங்களில், நெரிசல் நிறைந்த சாலைகளில், திருவிழாக்கூட்டங்களில் அவள் மாதிரி யார் தெரிந்தாலும், ஒருகணம் உற்றுப்பார்க்கிறேன். அவளாக இருக்கமாட்டாள் என நன்றாகத் தெரிந்தாலும் அப்படி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. டைட்டானிக் படத்தில் வரும் ரோஸ் போல அவள். செல்வந்தர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

சூடான சினிமா இடுகைகள்




















குறும்படம்



கர்ணமோட்சம்.


ஜெ.ஜெயமார்த்தாண்டன்


உண்மை, ஊடகம், ஜனநாயகம் !


சர்வதேசியவாதிகள்














சொல்யூசன்(குறும்படம்)


பெரியார் வலைக்காட்சி